Arunan BA.BL

Arunan BA.BL Social Work

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அன்பு தோழர் சா.சி.சிவசங்கர் அவர்களை மரியாதை நிமித்தம...
17/05/2026

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அன்பு தோழர் சா.சி.சிவசங்கர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த போது...

தோழர்களுடன் கல்மரம் பார்வையிட்ட போது...
17/05/2026

தோழர்களுடன் கல்மரம் பார்வையிட்ட போது...

14/05/2026
செயற்கை நுண்ணறிவு யுகம்: வழக்கறிஞர்களுக்கு சவாலா? வாய்ப்பா? - வழக்கறிஞர் டி.ஆர்.தாராசாட்-ஜிபிடி (ChatGPT), கிளாட் (Claud...
28/04/2026

செயற்கை நுண்ணறிவு யுகம்: வழக்கறிஞர்களுக்கு சவாலா? வாய்ப்பா?

- வழக்கறிஞர் டி.ஆர்.தாரா

சாட்-ஜிபிடி (ChatGPT), கிளாட் (Claude), ஜெமினி (Gemini) — இந்தத் தொழில்நுட்பப் பெயர்களை இப்போது கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது. பள்ளி மாணவர்கள் தொடங்கி மருத்துவர்கள், ஆசி ரியர்கள், வணிகர்கள், விவசாயிகள் எனச் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) நம் அன்றாட வாழ்வின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகிவிட்டது. இது வெறும் தொழில்நுட்ப மாற்றம் மட்டுமல்ல; நாம் கற்கும் விதம், தகவல்களைப் பெறும் முறை, பணியாற்றும் சூழல் என அனைத்தையும் இந்தத் தொழில் நுட்பம் அடியோடு மாற்றி அமைத்து வருகிறது.

வழக்கறிஞர்களும் இந்த மாற்றத்திற்கு விதிவிலக்கல்ல. நீதிமன்ற நடைமுறைகள், சட்ட ஆய்வுகள், வாதங்களைச் தயார் செய்தல் எனச் சட்டத்துறையின் ஒவ்வொரு கட்டத்தையும் செயற்கை நுண்ணறிவு மறுசீரமைப்பு செய்து வருகிறது. உலக அளவில் செயற்கை நுண்ணறி வுச் சந்தையின் மதிப்பு 2024-இல் 184 பில்லி யன் டாலராக (1 பில்லியன் = 100 கோடி) இருந்தது. இது 2030-இல் 826 பில்லியன் டாலரைத் தாண்டும் என்று மெக்கின்சி (McKinsey) ஆய்வு நிறுவனம் கூறுகிறது. இந்தியாவில் மட்டும் இந்தத் தொழில்நுட்பம் 2035-ஆம் ஆண்டி ற்குள் சுமார் 967 பில்லியன் டாலர் பொருளா தார மதிப்பைச் சேர்க்கும் என்று நாஸ்காம் (NASSCOM) மதிப்பிட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? – வழக்கறிஞர்களுக்கான விளக்கம்

மனித மூளையானது கோடிக்கணக்கான அனுபவங்களில் இருந்து எப்படிக் கற்றுக் கொள்கிறதோ, அதேபோல் செயற்கை நுண்ணறி வுத் தொழில்நுட்பமானது கோடிக்கணக்கான தரவுகளில் (Data) இருந்து கற்றுக்கொள்கிறது. ஒரு கேள்வியைக் கேட்டால் அது விடையளிக் கிறது; ஒரு பெரிய ஆவணத்தைக் கொடுத்தால் அதன் சுருக்கத்தைக் கூறுகிறது; ஒரு படத்தைக் காட்டினால் அதை விளக்குகிறது. சட்டத்துறை யைப் பொறுத்தவரை, பழைய தீர்ப்புகளைக் குறிப் பிட்டால் அதோடு தொடர்புடைய பிற வழக்கு களை இது நொடிப்பொழுதில் தேடித் தருகிறது. சட்டப் பிரிவுகளை விளக்குவது முதல் ஆவ ணங்களை ஆய்வு செய்வது வரை இது ஒரு சிறந்த ‘டிஜிட்டல் உதவியாளராகச்’ செயல்படுகிறது.

சட்டத்துறையில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு

சட்ட ஆராய்ச்சியில் இத்தொழில்நுட்பம் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

ஆராய்ச்சி நேரம்: உச்சநீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்புகளைத் தேடுவதற்கான நேரத்தை இது 80% வரை குறைக்கிறது.

ஆவண வரைவு: ஒப்பந்தங்கள், மனுக்கள் மற்றும் அறிவிக்கைகளை (Notices) இது முதற்கட்டமாகத் தயார் செய்து தருகிறது. வழக்கறிஞர்கள் அத னைச் சரிபார்த்து மேம்ப டுத்தினால் போது மானது.

வெற்றி வாய்ப்பு: முன்னுதாரணத் தீர்ப்பு களின் அடிப்படையில் ஒரு வழக்கின் வெற்றி வாய்ப்பை இது மதிப்பிடுகிறது.

மொழிபெயர்ப்பு: தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளுக்கு இடையே துல்லியமான சட்ட மொழிபெயர்ப்பை வழங்குகிறது.

நிர்வாக உதவி: நீதிமன்றத் தேதிகள், காலக்கெடு மற்றும் கோப்புகளை வரிசைப்படுத்து தல் (Indexing) போன்ற பணிகளில் வழக்கறி ஞர்களுக்குப் பேருதவியாக இருக்கிறது.

நன்மைகளும் சிறப்பம்சங்களும்

கல்வித் துறையில் இந்தத் தொழில்நுட்ப த்தைப் பயன்படுத்தும் மாணவர்களின் கற்கும் திறன் 40% வரை உயர்வதாக எம்.ஐ.டி (MIT) ஆய்வு தெரிவிக்கிறது. அதேபோல், சிறு தொழில் முனைவோர்கள் மணிக்கணக்கில் செய்ய வேண்டிய பணிகளைச் சில நிமிடங்களில் முடிப்பதற்கு இது உதவுகிறது.

அதேபோல, சட்டத்துறையில், ஒரு சிறிய ஊரில் தனித்து இயங்கும் வழக்கறிஞர் கூட, இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மிகப்பெரிய சட்ட நிறுவனங்களுக்கு இணையான ஆராய்ச்சி வலிமையைப் பெற முடியும். இது வழக்கறிஞர்களிடையே நிலவும் வசதி வாய்ப்புகளுக்கான இடைவெளியைக் குறைத்து, அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்குகிறது.

எச்சரிக்கையும் குறைபாடுகளும்

நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போல, இதிலும் சில அபாயங்கள் உள்ளன. முக்கியமாக, இத்தொழில்நுட்பம் தனக்குத் தெரியாத விஷயங்களுக்குத் தவறான பதில்களை இட்டுக்கட்டிச் சொல்லும். இதனைத் தொழில்நுட்ப மொழியில் ‘மனப்பிராந்தி’ (Hallucination) என்பார்கள். 2023-இல் அமெரிக்க நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர், செயற்கை நுண்ணறிவு கொடுத்த போலி வழக்குகளை மேற்கோள் காட்டி வாதிட்டதால் அபராதம் கட்ட நேர்ந்தது.'

வழக்கறிஞர்கள் கவனிக்க வேண்டியவை

சரிபார்த்தல் : இத்தொழில்நுட்பம் தரும் தகவல்களை அப்படியே நம்பாமல், மூல ஆவணங்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும்.

தரவுப் பாதுகாப்பு: வங்கி விவரங்கள், கட வுச்சொற்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் இவற்றிடம் பகிரக்கூடாது.

தொழில் நெறிமுறை: கட்சிக்காரர்களின் ரகசிய விவரங்களை இத்தொழில்நுட்பத்திடம் கொடுப்பது வழக்கறிஞர்களின் தொழில் நெறிமுறைக்கு முரணாக அமையலாம்.

போலித் தகவல்கள்: செயற்கை முறையில் உருவாக்கப்படும் போலிப் படங்கள் (Deepfake) மற்றும் குரல் மோசடிகள் குறித்து மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

பொதுமக்களுக்கான வழிகாட்டுதல்

பயத்தைத் தவிர்க்கவும்: இது மனிதர்களை மாற்றுவதற்கான கருவி அல்ல, மனிதர்களுக்கு உதவுவதற்கான ஒரு கருவி மட்டுமே.

திறன் வளர்த்தல்: 2030-ஆம் ஆண்டில் 85% வேலைகளுக்குக் கணினி சார்ந்த தொழில்நுட்பத் திறன் தேவைப்படும். எனவே, இப்போதே குழந்தைகளைத் தயார் செய்ய வேண்டும்.

பாதுகாப்பு: தனிப்பட்ட அடையாள எண்க ளையோ அல்லது ரகசியத் தரவுகளையோ இதனிடம் பகிர வேண்டாம்.

மனித ஆற்றல் (எதிர்) செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவுக்குத் தகவல்கள் இருக்கலாம், ஆனால் அதற்கு ‘உணர்ச்சிகள்’ கிடையாது. ஒரு தாய் தன் குழந்தையைத் தேற்றும் அன்பையோ, ஒரு ஆசிரியர் மாணவனுக்கு அளிக்கும் ஊக்கத்தையோ இத்தொழில் நுட்பத்தால் தர முடியாது. குறிப்பாக, நீதிமன்றத் தில் ஒரு மனிதனின் உணர்வுகளைப் புரிந்து வாதிடவோ, ஒரு நண்பனின் கவலையை உணர்ந்து ஆறுதல் சொல்லவோ மனிதர்களால் மட்டுமே முடியும். மனித அனுபவம், நம்பகத் தன்மை மற்றும் அறநெறி சார்ந்த முடிவுகள் எடுப்பதில் மனிதர்களே என்றும் மேலானவர்கள்.

இதை உணர்ந்து வழக்கறிஞர்கள் இதை பயன்படுத்த வேண்டும் என்பதை, “செயற்கை நுண்ணறிவைக் கற்றவர்கள் பயன்படுத்துவார்கள்; செயற்கை நுண்ணறி வைப் புரிந்தவர்களை மக்கள் நம்புவார்கள்” என்கிறார் — மாண்பமை இந்திய உச்ச நீதிமன்ற நீதியரசி பி.வி. நாகரத்னா.

“செயற்கை நுண்ணறிவு என்பது வெறும் கருவி மட்டுமே. அதை யார், எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் முக்கியம். அச்சம் தேவையில்லை; விழிப்புணர்வே அவசியம்” என்கிறார் — மாண்பமை இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் சூர்யகாந்தா மிஸ்ரா. இவர்களின் வார்த்தைகளை வழிகாட்டியாகக் கொண்டு செயல்படுவோம்!

நன்றி : தீக்கதிர் 28 /04 /26.

இரத்ததானம் செய்வோம்! மனித உயிர்களை காப்போம்!! 27.04.2026 இன்று 17வது முறையாக இரத்ததானம் செய்தேன்.
27/04/2026

இரத்ததானம் செய்வோம்!
மனித உயிர்களை காப்போம்!!

27.04.2026 இன்று 17வது முறையாக இரத்ததானம் செய்தேன்.

படித்த இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் - சஞ்சய் ராய்படித்த மக்கள் தொகை பெருமள வில் அதிகரித்துள...
25/04/2026

படித்த இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம்

- சஞ்சய் ராய்

படித்த மக்கள் தொகை பெருமள வில் அதிகரித்துள்ள ‘லட்சிய இந்தியா’வில், முரண்பாடாக சமீப காலமாக விவசாயத் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன! மொத்த மக்கள் தொகையில் உழைக்கும் வயதுடை யவர்களின் விகிதம் அதிகமாக இருப்பதை நாம் ‘மக்கள்தொகை ஆதாயம்’ (Demo graphic Dividend) என்று அழைக்கிறோம். இந்த வாய்ப்பு 2030-ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வரவுள்ளது; அதன் பிறகு இளை ஞர்களின் பங்கு குறையத் தொடங்கும். தற்போதைய உச்சகட்டத்தில், உழைக்கும் மக்கள் தொகையானது பிறரைச் சார்ந்து வாழும் மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. துரதிர்ஷ்டவச மாக, இந்திய உழைப்புச் சந்தை குறித்த சமீபத்திய அறிக்கை, பட்டதாரிகளிடையே வேலையில்லாத் திண்டாட்டம் 40 சதவீதத்தை எட்டியுள்ளதாகத் தெரி விக்கிறது. மற்றொரு அதிர்ச்சிகரமான உண்மை என்னவென்றால், இளைஞர்க ளும் இளம்பெண்களும் தங்கள் குடும் பத்தைக் காப்பாற்றுவதற்காகக் கல்வியைக் கைவிட்டு வெளியேறுவது அதிகரித்துள்ளது.

இந்தியாவில் 15 முதல் 29 வயதுக்குட் பட்டவர்கள் 36.7 கோடி பேர் உள்ளனர். இது உலகிலேயே மிக அதிகம். இவர்களில் 26.3 கோடி இளைஞர்கள் இந்தியாவின் சாத்தியமான உழைக்கும் சக்தியாக உள்ள னர். இந்த எண்ணிக்கை எந்தவொரு ஐரோப்பிய நாட்டின் மக்கள் தொகையை யும் விட அதிகம். 20-29 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 6.3 கோடி பேர் பட்டதாரி கள் மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள். இவர்களில் 1.1 கோடி பட்டதாரிகள் வேலை யில்லாமல் உள்ளனர். படித்தவர்களிடையே நிலவும் இந்த வேலையில்லாத் திண்டாட்டம் இரண்டு முக்கியமான உண்மைகளை உணர்த்துகிறது: ஒன்று, பட்டதாரி உழைப்புச் சக்தியின் தேவைக்கும் வேலை வாய்ப்பிற்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளி; மற்றொன்று, இந்தியாவின் உற்பத்திச் செயல்முறை இன்னும் குறைந்த கல்வி அறிவு கொண்ட மலிவான உழைப் பையே நம்பியிருப்பது. ‘விக்சித் பாரத்’ (வளர்ச்சியடைந்த இந்தியா) நோக்கிய பயணத்தில், உழைக்கும் சக்தி விவசாயம் அல்லாத துறையிலிருந்து மீண்டும் விவசாயத்தை நோக்கித் திரும்புவதும், விவசாயத்தில் பெண்களின் வேலைவாய்ப்பு அதிகரிப்பதும் ஒரு பெரும் முரண்பாடாகும்

விவசாயத்தை நோக்கிய பின்னோக்கிய பயணம்

றைந்த உற்பத்தித் திறன் கொண்ட பணிகளிலிருந்து அதிக உற்பத்தித் திறன் கொண்ட பணிகளுக்கு மாறுவதைக் குறிக்கிறது. பொதுவாக மக்கள் விவசாயத்திலி ருந்து தொழில் மற்றும் சேவைத் துறைக ளுக்கு மாறுவது முன்னேற்றத்தின் அடை யாளமாகக் கருதப்படுகிறது. கடந்த 40 ஆண்டுக் காலமாக இந்தியாவில் இத்தகைய மாற்றம் நிகழ்ந்தது. ஆனால் 2017 முதல் விவசாயத் துறையின் பங்கு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கோவிட் காலத்திற்குப் பிந்தைய 2021-22 முதல் 2023-24 வரையிலான காலத்தில், இந்தியாவின் உழைக்கும் மக்கள் தொகை 49 கோடியில் இருந்து 57.2 கோடி யாக உயர்ந்துள்ளது. அதாவது 8.3 கோடி புதிய வேலைகள் உருவாகியுள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த 8.3 கோடியில் 4 கோடி வேலைகள் விவசாயத் துறையில்தான் உருவாகியுள்ளன. இதில் 3.8 கோடி பேர் பெண்கள். 1983 முதல் விவசாயத்தில் ஆண்களின் பங்கு குறைந்து வந்த நிலையில், 2017 முதல் பெண்களின் பங்கு அதிகரித்து வருகிறது. இது பெரும்பாலும் ஊதியம் இல்லாத குடும்ப உழைப்பாகவே (unpaid family labour) இருக்கிறது. தங்களுக்குச் சாதகமான வேலை வாய்ப்புகள் இல்லாத சூழலில், உயிர் வாழ்வதற்கான ஒரு உத்தியாகவே பெண்கள் இத்தகைய சுயவேலை வாய்ப்புகளில் ஈடுபடு கின்றனர். அரசின் பி.எல்.எப்.எஸ் (PLFS) அறிக்கைகள், இந்தியாவில் சுயவேலை வாய்ப்பில் உள்ளவர்களின் வருமானம், சம்பளம் வாங்குபவர்களின் சராசரி வருமானத்தை விடக் குறைவு என்பதையும், ஊதியங்கள் தேக்கமடைந்துள்ளதையும் சுட்டிக்காட்டுகின்றன.

கல்விச் சேர்க்கையில் சரிவு

கடந்த 40 ஆண்டுகளில் இந்தியாவில் இளைஞர்களின் கல்விச் சேர்க்கை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்தது. 1983-2023 காலகட்டத்தில் 15-19 வயதுடைய ஆண்களின் கல்விச் சேர்க்கை 49-லிருந்து 73 சதவீதமாகவும், பெண்களிடையே 38-லிருந்து 68 சதவீதமாகவும் உயர்ந்தது. தலித் மற்றும் பழங்குடியின மக்களிடையேயும் கல்விச் சேர்க்கை அதிகரித்தது. 2010-இல் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு 29 கல்லூரி கள் என்றிருந்த நிலை 2021-இல் 45 ஆக உயர்ந்தது. ஆனால், இந்த வளர்ச்சி பெரும்பா லும் தனியார் கல்வி நிறுவனங்களாலேயே ஏற்பட்டது. இதனால் வசதி படைத்தவர்க ளுக்கே உயர்கல்வி எளிதாகக் கிடைத்தது.

ர்க்கையில் ஒரு சரிவு ஏற்பட்டுள்ளது. 2017-இல் 38 சதவீதமாக இருந்த கல்வி பயிலும் இளைஞர்களின் பங்கு 2024-இல் 34 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதற்கு 72 சதவீதத்தினர் சொல்லும் காரணம், ‘குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டா யம்’ என்பதே. கல்வி கற்றாலும் அதற்கு ஏற்ற ஊதியமோ அல்லது வேலையோ கிடைக்காது என்ற அவநம்பிக்கையும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 20-29 வயதுடைய வேலை யில்லாதவர்களில் 67 சதவீதம் பேர் பட்ட தாரிகள். அதேசமயம், மாதச் சம்பளம் வாங்கும் வேலைகளில் இருப்பவர்களில் வெறும் 6.7 சதவீதம் பேர் மட்டுமே பட்ட தாரிகள். பட்டதாரிகள் தங்கள் கல்வித் தகு தியை விடக் குறைவான வேலைகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படு கிறார்கள். இது புதிய இளைஞர்களைக் கல்வி கற்பதிலிருந்து பின்வாங்கச் செய்கிறது.

ஆழமான நெருக்கடி

இந்தத் தரவுகள் அனைத்தும் இந்தியா வின் உற்பத்தி அமைப்பு இன்னும் வளர்ந்து வரும் படித்த உழைப்புச் சக்தியை உள் வாங்கத் தயாராக இல்லை என்பதையே காட்டுகின்றன. அறிவுசார் திறன்களைக் கோரும் புதிய தொழில்நுட்ப அலையில் நாம் இருக்கும்போது, குறைந்த திறன் கொண்ட மலிவான உழைப்பையே அரசு நம்பியி ருப்பது ஆச்சரியமளிக்கிறது. இளைஞர்க ளை விவசாயத்தை நோக்கியும், வருமானம் இல்லாத சுயவேலைவாய்ப்பை நோக்கியும் தள்ளும் ஒரு ‘வளர்ச்சிப் பாதை’, அவர்களைக் கல்வி கற்க ஊக்குவிக்காது. 15-29 வய துக்குட்பட்ட இளைஞர்களின் உழைப்புச் சக்தி யில் பங்கேற்பு விகிதம் (LFPR) வெறும் 43 சதவீதமாக மட்டுமே உள்ளது. அதாவது பெரும்பான்மையான இளைஞர்கள் வேலை தேடும் முயற்சியையே கைவிட்டுவிட்டனர். வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை அற்ற இந்தச் சூழல், இந்தியாவின் மக்கள்தொகை மாற்றத்தின் ஒரு பரிதாபகரமான சித்திர மாகும்.

நன்றி : பீப்பிள்ஸ் டெமாக்கரசி , தமிழில் : ராகினி , தீக்கதிர் 25 /04 /26.

நொய்டா தொழிலாளர் போராட்டம்: சட்டபூர்வப் பாதுகாப்பின் தேவைநொய்டாவில்  ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில்...
22/04/2026

நொய்டா தொழிலாளர் போராட்டம்:
சட்டபூர்வப் பாதுகாப்பின் தேவை

நொய்டாவில் ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது தேசிய அளவில் பேசுபொருள் ஆகியிருக்கிறது. இதையடுத்துச் சில தற்காலிக நடவடிக்கைகளை உத்தரப் பிரதேச அரசு எடுத்திருக்கிறது. இருப்பினும், இது ஊதிய உயர்வைத் தாண்டித் தொழிலாளர்களின் சட்டபூர்வப் பாதுகாப்புக்கான கிளர்ச்சி என்பதை உணர வேண்டும்.

டெல்லி அருகே உத்தரப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் நொய்டா நகரம் நாட்டின் முக்கியத் தொழில் துறை மையம். ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பில் வாகன உதிரிபாகங்கள், விமான உதிரி பாகங்கள், மின் / மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் ரூ.10,000 இல் இருந்து ரூ.14,000வரை மாதச் சம்பளம் பெறும் அமைப்பு சாராத் தொழிலாளர்கள்; பலர் புலம்பெயர் தொழிலாளர்கள். புறநகரில் நெரிசலான குடியிருப்புப் பகுதிகளில் வாழும் இவர்கள், சொற்ப ஊதியத்தால் பல ஆண்டுகளாகத் திண்டாடிவருகின்றனர். கடந்த சில மாதங்களாக நிலவும் எரிவாயுப் பற்றாக்குறையால் ஏற்பட்டிருக்கும் விலைவாசி உயர்வும் இவர்களைப் பாதித்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 13, 14 ஆகிய இரண்டு நாள்களில் நொய்டாவின் தொழிற்பேட்டைப் பகுதிகளில் இந்தத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். அமைதி வழியில் தொடங்கிய போராட்டத்துக்கு நடுவே எதிர்பாராமல் வன்முறை வெடித்தது. கண்ணீர்ப் புகை குண்டு வீசிய காவல் துறையினர் 300க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களைக் கைதுசெய்தனர்.

இதையடுத்து நொய்டா, காஸியாபாத்தில் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தில் 21%வரை இடைக்கால உயர்வு அளிப்பதாக உத்தரப் பிரதேச அரசு அறிவித்தது. இதன்படி ரூ.11,313 ஈட்டிவந்த பயிற்சியற்ற தொழிலாளர் இனி ரூ.13.690 பெறுவார்: ரூ.12,445 ஊதியம் பெற்ற ஓரளவு திறன் பெற்ற (semi skilled) தொழிலாளர் இனி ரூ.15,059 பெறுவார்; ரூ.13,940 அளிக்கப்பட்ட திறன்மிகு தொழிலாளருக்கு இனி ரூ.16,868 வழங்கப்படும். இந்த அறிவிப்புக்குப் பிறகு, தொழிலாளர்களில் சிலர் பணிக்குத் திரும்பினர். எனினும் போராட்டம் முழுமையாக முடிவுக்கு வந்துவிடவில்லை.

ஹரியாணாவில் குறைந்தபட்ச ஊதியம் 35% (ரூ.19,000வரை) உயர்த்தப்பட்டபோதிலும், நொய்டாவில் நெடுங்காலமாக ஊதிய உயர்வோ, பணிச்சூழல் வசதிகளோ செய்து தரப்படவில்லை என்பதே போராட்டத்தின் மையப் பிரச்சினை. ஒரே பொருளாதார மண்டலத்தில், அதே உற்பத்திப் பணியைச் செய்யும் தொழிலாளர்களுக்கு மாநிலத்துக்கு மாநிலம் ஊதியம் வேறுபடுவதாக விமர்சிக்கப்படுகிறது. வழக்கமான 8 மணிநேர வேலைக்கு + அப்பால் கூடுதல் நேர வேலைக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்னும் விதிமுறையை மீறி 14 மணி நேரம் வரை முதலாளிகள் உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

போராடியவர்களில் பெரும்பாலானோர் தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாத ஒப்பந்தத் தொழிலாளர்கள். இவர்கள் அடிப்படைச் சமூகப் பாதுகாப்பு. சம்பளச் சீட்டு, பணி உறுதி போன்ற சட்டபூர்வப் பாதுகாப்பு இன்றித் தத்தளிப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

அடுத்த மாதம் அமைக்கப்படும் ஊதிய வாரியத்தின் பரிந்துரைக்குப் பிறகே நிரந்தரக் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, மத்தியத் தொழிலாளர் நல அமைச்சகம் தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியத்தை நாளுக்கு ரூ.350 ரூ.450வரை உயர்த்துவது குறித்தும் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதை ஒரு தற்காலிகச் சிக்கலாக மட்டும் அணுகாமல் தொழிலாளர் நலச்சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகளைக் களைந்து, தொழிலாளர் உரிமைகளை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும்.

Address


Telephone

9894683645

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arunan BA.BL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Arunan BA.BL:

  • Want your practice to be the top-listed Law Practice?

Share