Law in Tamil - Legally Simplified

Law in Tamil - Legally Simplified சட்டங்கள் - தீர்ப்புகள் - நடைமுறைகள் - ஆலோசனைகள். எளிய தமிழில்.

- த.செ.மீரான், வழக்கறிஞர்.

31/03/2023

BAIL - is the rule
JAIL - is an exception

Please Follow & Share! ❤️

ஒரு வழக்கறிஞரின் போராட்டம்அவர் வழக்கிற்கு எண் வாங்குவதிலேயே துவங்கி விடுகிறது. " Diificulties of a Litigant begins, When...
25/12/2022

ஒரு வழக்கறிஞரின் போராட்டம்
அவர் வழக்கிற்கு எண் வாங்குவதிலேயே துவங்கி விடுகிறது.

" Diificulties of a Litigant begins, When he obtains a Decree" என்கிறது Privy Council. ஒரு வழக்காடிக்கு தீர்ப்பு வாங்கிய பின்பு தான் உண்மையான சோதனை ஆரம்பம் ஆகிறது. ஆனால் ஒரு வழக்கறிஞருக்கு வழக்கிற்கு நம்பர் வாங்குவதில் இருந்தே சோதனை ஆரம்பித்து விடுகிறது.

நீதிபதிகள் வழக்கிற்கு எண் தரும் முன்பாகவே, வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது வரை யோசிக்கிறார்கள். பல்வேறு உயர்நீதிமன்ற தீர்ப்புகளில், பிரதிவாதியின் வேலையை நீதிமன்றங்கள் செய்ய வேண்டாம், வழக்கிற்கு நம்பர் கொடுத்து சம்மன் அனுப்புங்கள், எதிர்வாதத்தை பிரதிவாதி வந்து சொல்லட்டும் என கூறப்பட்டுள்ளது.

ஒரு சிவில் வழக்கு தாக்கல் செய்யும் முன் என்னவெல்லாம் கவனிக்க வேண்டும் என்பதற்கு இந்த பதிவில் சுருக்கமாக எழுதி உள்ளேன்.

https://www.advmeerantj.co.in/2022/12/plaint-details.html

22/12/2022

வழக்கில் தாக்கல் செய்யப்படாத ஆவணங்களை கொண்டு வர செய்வது எப்படி?

இரண்டு சூழ்நிலைகளை பார்க்கலாம்...

1. வழக்கில் ஒரு தரப்பு மற்றொரு தரப்பு மீது கொடுத்த மனு நகலை தாக்கல் செய்யாமல் மறைக்கிறது. அதை தாக்கல் செய்ய சொல்ல வேண்டும். அல்லது அசல் உயிலை மறைத்து வைத்துக் கொண்டு நகலை தாக்கல் செய்கிறது. இப்போது உரிமையியல் விசாரணை முறை சட்டம் கட்டளை 11 விதி 12 இன் கீழ் ஆவணங்களை தாக்கல் செய்ய கோரலாம். இந்த கட்டளையில் வழக்கு விசாரணைக்கு முன் பின் என இரு வேறு விதிகள் உண்டு

2. மேலே கூறியவாறு அறிவிப்பு கொடுத்த பின்பும், ஆவணங்கள் தங்கள் வசம் இல்லை என்றோ அழிந்து விட்டது என்றோ சமர்ப்பிக்க மறுத்தால், அடுத்து அந்த ஆவணத்தை சமர்ப்பித்த அல்லது பதிவு செய்த அலுவலகம் அதன் சான்றிட்ட இரண்டாம் நிலை ஆவணத்தை அல்லது பதிவேட்டை கொண்டு வர செய்யலாம். இதற்கு உரிமையியல் விசாரணை முறை சட்டம் கட்டளை 16 விதி 6 இல் மனு செய்யலாம். இந்த கட்டளையில் ஆவணத்துடன் முன்னிலையாகி வாய்மொழி சாட்சியமும் கூற வேண்டும் என்றால் விதி 4ம், ஆளும் வர வேண்டாம் வாய்மொழி சாட்சியமும் வேண்டாம், ஆவணம் மட்டும் போதும் என்றால் விதி 6 ம் செயல்படும்.

அந்த ஆவணங்கள் வழக்கிற்கு அவசியம் இல்லை என எதிர்தரப்பு ஆட்சேபனை செய்யலாம். ஆனால் பல தீர்ப்புகளில் முதலில் ஆவணம் இருப்பதை சம்மன் அனுப்பி உறுதி செய்யுங்கள். அதற்கு முன்பே ஆவணத்தை ஏற்கலாமா வேண்டாமா , குறியீடு செய்வதா இல்லையா என்பதை எல்லாம் நீதிமன்றம் யோசிக்க அவசியமில்லை என முடிவு செய்துள்ளார்கள்.

அது தொடர்பான வழக்கின் சுருக்க விவரம் இந்த காணொளி!

இது போன்ற தொடர்புடைய வாசித்த வழக்குகள்.

chekka krishna prasad -vs- kotha appa rao

sunil kumar gupta -vs- prem narayan gupta

இந்த விவரம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மறக்காம like பண்ணுங்க. தேவைப்படும் நண்பர்களுக்கு share பண்ணுங்க. நன்றி!

❤️

வாகனத்தை அதிவேகமாக அஜாக்கிரதையாக ஓட்டி விபத்து ஏற்படுத்தி மரணத்திற்கு காரணமானதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நபருடன், உயிரிழ...
12/12/2022

வாகனத்தை அதிவேகமாக அஜாக்கிரதையாக ஓட்டி விபத்து ஏற்படுத்தி மரணத்திற்கு காரணமானதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நபருடன், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் சமாதானமாக போய் விட்டார்கள் என்பதனால், குற்ற வழக்கை முடித்து வைக்கலாமா?

https://www.advmeerantj.co.in/2022/12/ipc-section-304A-compromise.html

விபத்து வழக்கு, இந்திய தண்டனை சட்டம், பிரிவு 304A, Compoundable, indian penal code, law in tamil

26/11/2022

இன்று
அரசியலமைப்பு நாள்!

Constitution of India
Article 39A

" The State shall secure that the operation of the legal system promotes justice, on a basis of equal opportunity, and shall, in particular, provide free legal aid, by suitable legislation or schemes or in any other way, to ensure that opportunities for securing justice are not denied to any citizen by reason of economic or other disabilities."

"அரசாங்கம், அனைவருக்கும் சமவாய்ப்பு சமநீதியை நிலைநாட்டவும், இலவச சட்ட உதவி வழங்கவும், அதற்கேற்ற விதிகள் சட்டங்களை இயற்றவும், எந்த ஒரு குடிமகனுக்கும் பொருளாதாரம் அல்லது வேறு குறைபாட்டால் நீதி மறுக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தவும், வேண்டும்."

அனைத்திற்கும் மேலானது அரசியலமைப்பு. ஆள்பவர் யாராக இருந்தாலும் ஆள்வது அது தான். அதுவே இந்த பரந்து விரிந்த, வேறுபாடுகள் ஒன்று கலந்த, நாட்டினை கட்டி வைத்திருக்கிறது.



❤️

fb.com/advmeerantj

கோர்ட்டுக்கு போனா வாய்தாலயே சொத்து அழிஞ்சுடும்..வரப்பு சண்டைக்கு போனா வயலே போயிடும்..சிவில் கேஸ் ஆகிட்டா தலைமுறை தலைமுறை...
24/11/2022

கோர்ட்டுக்கு போனா வாய்தாலயே சொத்து அழிஞ்சுடும்..

வரப்பு சண்டைக்கு போனா வயலே போயிடும்..

சிவில் கேஸ் ஆகிட்டா தலைமுறை தலைமுறையா நடக்கும்..

இன்னும் நிறைய சொல்ல கேள்வி பட்டு இருப்பிங்க. அதுல ஓரளவு உண்மையும் இருக்கு. அதை மறுக்கல.

அதே நேரம் வழக்குகளை சீக்கிரமா நடத்தவும் வழி இருக்கு. நீங்க நம்பினாலும் நம்பாட்டாலும் அதுதேன் நெசம்..

சிவில் வழக்குகளை சீக்கிரம் முடிக்க சொல்லி ஒரு சட்டமே இருக்கு. அதை செயல்படுத்த தான் யாரும் முன்வர்றது இல்லை...

சட்டம் என்பதே கடமையும் உரிமையும் தான். சீக்கிரம் வழக்கை நடத்த வேண்டும் என கேட்பது வழக்காடிக்கு சட்டம் கொடுத்துள்ள உரிமை.. அதை கேட்காமலும் தெரியாமலும் இருப்பது நமது அறியாமை!

https://youtu.be/w8S0HCOHMDk

சத்தியமா நம்புங்க.. அப்படி ஒரு சட்டம் இருக்கு. கீழ முதல் comment ல அந்த அரசிதழ் நகல் உயர்நீதிமன்ற தளத்துல இருந்தே கொடுத்திருக்கோம்.

சிவில் கேஸ் ஏன் பல வருசமா நடக்குது. சீக்கிரம் முடிக்க வாய்ப்பே இல்லையா?கேள்விக்கு பதில் தந்திருக்கிறார் வழக்க....

உங்களிடம் சட்ட புத்தகங்கள் உள்ளதா? தூக்கி குப்பையில் போடுங்கள்!ஆமாம். அவை எதிலும் தற்போதைய சட்ட திருத்தங்கள் இருக்கப் போ...
22/11/2022

உங்களிடம் சட்ட புத்தகங்கள் உள்ளதா? தூக்கி குப்பையில் போடுங்கள்!

ஆமாம். அவை எதிலும் தற்போதைய சட்ட திருத்தங்கள் இருக்கப் போவதில்லை. அப்படியே பழைய மத்திய சட்டத்தை அச்சடித்தது போலவே இருக்கும். மாநில அரசின் திருத்தங்கள் சேர்க்கைகள், உயர்நீதிமன்ற திருத்தங்கள் சேர்க்கப் படாமல் அவற்றின் பயன் என்ன?

உரிமையியல் நடைமுறை சட்டம் தொடர்பாக நான் எழுதி வருகிறேன். அதன் 2019 ஆம் வருட Bare Act என்னிடம் இருக்கிறது. ஆனால் அதில் உயர்நீதிமன்ற திருத்தங்கள் இல்லை.

உதாரணமாக, கட்டளை 41 விதி 1 மேல்முறையீடு தாக்கல் செய்ய "Copy of Judgement" இணைக்க வேண்டும் என உள்ளது. இந்த copy என்ற வார்த்தைக்கு முன்பாக Certified என்கிற வார்த்தை சேர்க்க 1963 லேயே சென்னை உயர்நீதிமன்றம் சட்டத்தில் திருத்தம் செய்து உள்ளது. ஆனால் புத்தகத்தில் அவ்வாறு இல்லை.

13-08-2021 அரசிதழில் வந்தது முதலாக, இதே விதியில் "or Computerized" என்கிற வார்த்தை சேர்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னர் "mechanically reproduced" என்கிற பதம் இருந்திருக்க வேண்டும். ஆனால் அதுவும் எப்போதிருந்து இருக்கிறது என தெரியவில்லை.

இதன் பொருள், மேல்முறையீடு தாக்கல் செய்ய தீர்ப்பின் சான்றிட்ட நகள் தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. அது Mechanically Produced (டைப் அடித்த அல்லது ஜெராக்ஸ்) ஆகவும் இருக்கலாம். Computerized (இணையத்தில் தரவிறக்கப் பட்ட நகல்) ஆகவும் இருக்கலாம். இல்லையா!

சட்ட புத்தகத்தில் இல்லாமல் இதை நாம் நீதிபதியிடம் அல்லது நீதிமன்ற ஊழியரிடம் எப்படி காட்டி புரிய வைக்க முடியும்?

இந்த விதியில் மதராஸ் உயர்நீதிமன்ற திருத்தங்கள் என்னவெல்லாம் செய்து உள்ளது. LawRato தளத்தில் கிடைத்தது.

Madras amendments in
Order XLI Rule 1

(i)
in sub-rule (1),
before, the word "copy", insert the word "certified"

(ii)
to sub-rule (1), insert the following words, namely:-
"The copy of the judgment shall be printed copy in every case in which the High Court has prescribed that the judgment shall be printed when a copy is applied for, for the purpose of appeal."

(iii)
in sub-rule (1) insert the following proviso, namely:-
"Provided that, in appeals from decrees or Order under any special or local Act to which the provisions or Parts II and III of the Limitation Act IX of 1908, do not apply and in which certified copies of such decrees or Orders have not been granted within the time prescribed for preferring an appeal, the Appellate Court may admit the memorandum of appeal subject to the production of the copy of the decree or Order appealed from within such time as may be fixed by the Court."

(iv)
in sub-rule (1), insert the following further proviso and Explanation, namely:
"Provided further that when the decree appealed from is a final decree in partition suit with Schedules attached thereto, the Appellate Court may dispense with the production of the copy of the decree, if the appellant filed a certified copy of the judgment appealed against and produces also a certificate from the Lower Court as to the value of the subject-matter of the proposed appeal."

"Explanation.-The words 'Appellate Court' in sub-rule (1) be deemed to include the Registrar of the High Court, where the appeal is preferred to the High Court." (w.e.f. 25-12-1963)

(v)
in sub-rule (2), at the end, insert the following words, namely:-
"The memorandum shall also contain a statement of the valuation of The appeal for the purposes of the Court-fees Act."

இவ்வளவு விஷயங்கள் என் புத்தகத்தில் இல்லை. உங்களிடமும் உள்ள புத்தகங்களிலும் தேடினாலும் இருக்கப் போவதில்லை. உயர்நீதிமன்ற தளத்திலும் எல்லா திருத்தங்களும் பதிவேற்றம் செய்யப் படுவதில்லை. இதனால் தான் referrence புத்தகங்கள் அவசியம் ஆகிறது.

அல்லது சென்னை உயர்நீதிமன்ற திருத்தங்கள் மட்டும் சேர்க்கப்பட்ட சட்ட புத்தகம் எதும் இருந்தாலும் எனக்கு தெரிவியுங்கள்.

உரிமையியல் நடைமுறை சட்டத்தில் எனக்கு அதிக ஆர்வம் இருப்பதால், அது தொடர்பாக எனது வலைப் பக்கத்தில் எழுதிக் கொண்டு வருகிறேன். எனது பதிவுகளில் இந்த சிக்கல்கள் இல்லாமல், அனைத்து திருத்தங்கள் குறிப்பிட கவனம் எடுத்துக் கொள்கிறேன்.

https://advmeerantj.co.in

இந்த சட்ட திருத்தத்தை காட்டி, xerox அல்லது ecourt இணைய தள தீர்ப்பை வைத்து மேல்முறையீடு தாக்கல் செய்தால், நீதிபதி ஏற்றுக் கொள்கிறார்களா என பரிசோதித்து விட்டு, எனக்கும் தகவல் சொல்லுங்கள் 😀.

அடுத்த பதிவில் இன்னொரு சுவாரசியமான சட்ட திருத்தத்தை பார்க்கலாம்.

- த. செ. மீரான், வழக்கறிஞர், திருவைகுண்டம்.

வழக்கறிஞர்களின் பதிவு விவரங்கள் சரி பார்த்துக் கொள்ளதமிழ்நாடு புதுச்சேரியில் வழக்கறிஞராக பதிவு செய்து இருப்பவரின் உரிம எ...
17/11/2022

வழக்கறிஞர்களின் பதிவு விவரங்கள் சரி பார்த்துக் கொள்ள

தமிழ்நாடு புதுச்சேரியில் வழக்கறிஞராக பதிவு செய்து இருப்பவரின் உரிம எண் இந்த இணைப்பின் ### இடத்திலும் , வருடம் yyy இடத்திலும் போட்டால் போதும்.

தமிழ்நாடு வழக்கறிஞர் களுக்கு

MS.no : ###/yyy

என உரிம எண் வழங்கப்பட்டு இருக்கும்.

வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் அணிந்த எல்லோரும் வக்கீல் அல்ல. போலி வக்கீல்கள், தரகர்கள், குமாஸ்தாக்களிடம் ஏமாறாமல், உங்கள் வக்கீலின் உரிமம் வைத்து சோதித்து கொள்வது உங்கள் சாமர்த்தியம்.

இதில், வக்கீல் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று விட்டாரா? இப்போதும் பயிற்சியில் இருக்கிறாரா? அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை உள்ளதா என்பதும் தெரிந்து கொள்ள முடியும்.

https://www.bctnpy.org/verify/advocate?bcteno=###/yyy

மேலுள்ள இணைப்பை COPY செய்து ### மற்றும் yyy மாற்றிக் கொள்க.

உரிமையியல் நடைமுறை சட்டம் - தமிழ் விளக்கவுரைபதிவு - 2கட்டளை 1 விதி 2முந்தைய விதியில், எப்போது பல நபர்கள் சேர்ந்து வழக்கு...
14/11/2022

உரிமையியல் நடைமுறை சட்டம் - தமிழ் விளக்கவுரை

பதிவு - 2

கட்டளை 1 விதி 2

முந்தைய விதியில், எப்போது பல நபர்கள் சேர்ந்து வழக்கு தாக்கல் செய்யலாம் என்பதை பற்றி பார்த்தோம்.

இந்த விதியில், எப்போது நீதிமன்றம் அதனை அனுமதிக்க மறுக்க மாற்றியமைக்க முடியும் என்பதை பார்க்கலாம்.



நன்றி!

உரிமையியல் நடைமுறை சட்டம், civil procedure code in tamil, law in tamil, legally simplified, tamil law, cpc in tamil, order 1 rule 2, caselaw,judgement

14/11/2022

சட்டம், விழிப்புடன் இருப்பவருக்கே உதவி செய்ய முடியும். தூங்கி கொண்டிருக்கும் நபருக்கு அல்ல.

காலங் கடந்த வழக்குகள் ஏற்கத்தக்கது அல்ல.



நீதிமன்றங்களில் தூங்கும் வழக்குகளை என்ன செய்வது என்று கேட்டால்... 😐

Address

26/66E, Pallivasal Building Upstairs, Near Bus Stand, Srivaikundam
Tuticorin
628601

Opening Hours

Monday 5pm - 11pm
Tuesday 5pm - 11pm
Wednesday 11am - 11pm
Thursday 11am - 11pm
Friday 11am - 11pm
Saturday 1pm - 11pm
Sunday 6pm - 9pm

Website

https://www.advmeerantj.co.in/

Alerts

Be the first to know and let us send you an email when Law in Tamil - Legally Simplified posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share