19/09/2022
#வாழ்வில்_உழைத்து_உயர_________நினைப்பவர்களை_ஊக்கப்படுத்துவோம்!
நான் திருச்சி நீதிமன்றத்திற்கு பின்புறம் உள்ள ஜல்லிக்கட்டு ரோட்டில் நடைமேடையில் நடை பயிற்சி சென்று கொண்டிருந்தேன்!
ஒரு ஹாட் பாக்ஸ், டீ-கேனையும் வைத்துக்கொண்டு மூன்று சிறுவர்கள் சூப்பு சுண்டல் இருக்கிறது? வேண்டுமா? சார் என்று கேட்டார்கள்!
படிக்கும் மாணவர்களாக இருப்பார்கள் இவர்களுக்கு கடையை காலி செய்வதற்கு அறிவுரை சொல்லி அனுப்பி விடுவோம்! என்று நினைத்து சரி சூப் ஒன்று கொடுப்பா என்று அவர்களும் கொடுத்தார்கள்!
அவர்களிடம் பேச்சு கொடுத்தேன்! உங்கள் வயது என்ன? படிப்பு என்ன? என்று கேள்வி கேட்டேன்!
1) என் பெயர் ராகுல் வயது 19 நான் ரிப்போட்டர் என்றான்! எந்த பத்திரிக்கை என்றேன்?
அதில் உனக்கு சம்பளம் கிடைக்குமா? உன்னை அந்த பத்திரிகைக்காரன் ஏமாத்த நீயும் பெரிய ரிப்போர்ட்டர்னு நினைச்சுகிட்டு வாழ வேண்டியதுதான்டா,தம்பி, நீ அதுக்கு இந்த வேலை செய்வதை மேல் என்றேன்!
ஆமா அண்ணா ஒரு ரூபாய் கூட சம்பளம் இல்லை! அதனால் தான் இந்த கடையை துவங்கி இருக்கிறேன்!என்றான்!
(2)வது இளைஞன் என் பெயர் லோகேஷ்! நான் பொறியியல் படிக்கிறேன்! என்றான்! நாங்கள் இருவரும் இணைபிரியா நண்பர்கள் எதை செய்தாலும் சேர்ந்துதான் செய்வோம் அண்ணா! ஆகையால் இந்த கடையை என் நண்பனுக்காக நானும் சேர்ந்து துவங்கியுள்ளேன்! என்றான்!!
அடுத்து மூன்றாவதாக ஒரு சிறுவன் இருந்தான்! அவன் பள்ளியில் படிப்பதாக சொன்னான்! அவனை ஏன் அழைத்து வந்தீர்கள் என்று கேட்டேன்? எங்க கூடவே வீட்ல பக்கத்துல இருப்பானா இன்னைக்கு லீவு அதனால கூட்டிட்டு வந்தோம் என்றார்கள்!
[மிக பெரிய பொருளாதார பின்னனி இல்லாமல் சொந்த காலில் நிற்க்கும் இவர்கள்தான் உன்மையான ஹீரோக்கள் அப்பா பனத்தில் ஆடிகாரில் போவதும் 5 நட்சத்திரம் விடுதி நடத்துவதும் பெருமை அல்ல!]
இன்று தான் முதலில் கடை திருக்கிறீர்களா? என்று கேட்டேன்! இல்லை பிராட்டியூரில் நான்கு நாட்களாக கடை வைத்திருந்தோம்! அங்கு வியாபாரம் சரியாக இல்லை! எனவே இன்று தான் இங்கு வந்து கடை அமைத்துள்ளோம் என்றார்கள்!
சரி தம்பி இங்கு கடைசியில போட்டு இருக்கீங்க! நீங்க பஸ் ஸ்டாப் பக்கத்துல கொஞ்சம் ஒட்டி போட்டீங்கன்னா இன்னும் நிறைய பேர் வருவாங்க! அதனால நீங்க அந்த எம்ஜிஆர் சிலையை ஒட்டி பஸ் ஸ்டாப் பக்கத்துல போடுங்க தம்பி என்று ஆலோசனை வழங்கினேன்!
உடனே அந்த சிறுவர்கள் அங்கே போட்டால் போலீஸ் காலி செய்ய சொல்லி விட்டால் என்று கேள்வி எழுப்பினார்கள்! என்னுடைய விசிட்டிங் கார்டை வச்சிகங்க தம்பி போலீஸ் ஏதும் சொன்னாங்கன்னா எனக்கு போன் பண்ணு நான் பார்த்துக்கிறேன் என்று அவர்களுக்கு ஆதரவையும்! நம்பிக்கையும் அளித்து வந்தேன்!
சூப் குடித்துவிட்டு ரூபாய் 50 அவர்களிடம் கொடுத்தேன்! அவர்களோ எங்களுக்கு 10 ரூபாய் கொடுங்கள் போதும் என்று வாங்க மறுத்தார்கள் மிகவும் பிடிவாதமாக அவன் சட்டை பாக்கெட்டில் 50 ரூபாயை தினித்துவிட்டு வந்தேன்!
இந்த சின்னஞ்சிறு வயதில் நஷ்டமே அடைந்தாலும்! தொடர்ந்து உறுதியோடு உத்வேகத்தோடும் எப்படியாவது தொழில் செய்து சம்பாதித்து விட வேண்டும் என்று லட்சிய உறுதி கொண்ட இந்த இளைஞர்களை சந்தித்ததை பெரும் பாக்கியமாக நினைத்து நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்!
தொழில் என்றால் எவ்வளவு கஷ்டம்! தொழில் வளர்ச்சி என்பது எவ்வளவு சிரமம்! என்பது திருச்சியில் ஒரு கிளையாய் துவங்கி பல்வேறுப்பட்ட பிரச்சனைகளுக்கும் இடையூறுகளுக்கும் இடையில் அதை 5 கிளைகளாக்கி தொழில் நிறுவனம் நடத்திய எனக்கும் நன்றாக தெரியும்!
இந்த சிறிய இளைஞர்கள் நாளைய பெரும் தொழிலதிபர்களாக வர வளர ♥மணதார உளபூர்வமாக வாழ்த்துகிறேன்! நீங்களும் வாழ்த்துக்களோடு நிற்காமல்!*
*நீதிமன்றம் அருகில் மாலை வேலைகளில் வந்தால் இவர்களின் நேர்மைக்கும் உழைப்புக்கும் அங்கீகாரத்தை வியபாரம் செய்து தெரிவியுங்கள்* 🙏 #வழக்கறிஞர்_திருச்சி_NS_திலீப்