தமிழ்நாடு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ம பெ ரொ ராபின்

  • Home
  • India
  • Thuckalay
  • தமிழ்நாடு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ம பெ ரொ ராபின்

தமிழ்நாடு உயர் நீதிமன்ற வழக்கறிஞர்   ம  பெ    ரொ  ராபின் "எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும். நியாயம் தான் சட்டம் "

குற்றவியல் நடைமுறைச் சட்டம்   CrPC 110 பிரிவை  பயன்படுத்தும் அதிகாரம் காவல்துறைக்கு இல்லை ஆனால் என்ன நடக்கிறது..!வழக்கமா...
20/05/2026

குற்றவியல் நடைமுறைச் சட்டம் CrPC 110 பிரிவை பயன்படுத்தும் அதிகாரம் காவல்துறைக்கு இல்லை ஆனால் என்ன நடக்கிறது..!

வழக்கமாக குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் Habitual Offenders இனி நாங்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கமாட்டோம் என்று கோட்டாட்சியர் அவர்களிடம் உறுதி அளிப்பது தொடர்பாக விவரிக்கிறது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு CrPC 110 .

வழக்குகள் உள்ள நபர் வழக்கமாக குற்றம் செய்யும் நபர் Habitual Offender இரண்டு பிரிவுக்கும் வித்தியாசம் உண்டு. ஆனால் ஒருவர் மீது வழக்குகள் நிலுவையில் இருந்தாலே போதும் உடனே இந்த சட்டப்பிரிவை அவர்கள் மீது பயன்படுத்துகிறது காவல்துறை .

குறிப்பாக எளிய பின்னணி கொண்ட மக்களையே குறி வைக்கும் காவல் துறை தங்கள் அதிகாரத்தை மீறி செயல்படுவது வாடிக்கையாக வைத்து இருக்கிறது. இந்த சட்டம் சரியாக பின்பற்றப்படுகிறதா ஒருவர் மீது CrPC110 கீழ் எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறைக்கு அந்த அதிகாரம் இருக்கிறதா..!

இந்த 110 பிரிவை பொறுத்தவரை சட்டம் 1% அதிகாரத்தை கூட காவல் துறைக்கு அளிக்கவில்லை..

அவர்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் பணி என்பது சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடியவர்கள் என்று வழக்கமாக குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை மட்டும் அடையாளம் கண்டு கோட்டாட்சியர் அவர்களிடம் பட்டியலை சமர்ப்பிப்பது மட்டுமே.

அந்த பட்டியலை எந்த அடிப்படையில் தயாரிக்க வேண்டும்.

தனிநபர் விபரம் :

சாதி , வாழ்வாதாரம் , அந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் , அவரின் வருமானம் , அவரின் சொத்து மதிப்பு
ஆகியவற்றை சேகரிக்க வேண்டும் .

வாழ்க்கைமுறை :

பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கும் நபர் வீட்டில் இயல்பாக வசிக்கிறாரா இல்லை தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறாரா இரவு நேரங்களில் மட்டும் வீட்டுக்கு வருகிறாரா ? என்பதை அந்த பகுதியில் இருக்கும் நபர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும் இந்த தகவல்கள் வெறும் செவிவழி செய்தியாகமட்டுமே இருத்தல் கூடாது தலைமறைவு வாழக்கை வாழ்வதற்கான உறுதியான ஆதாரங்கள் தேவை .


நட்பு வட்டாரம் :

பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கும் நபர் யாரை சந்திக்கிறார் சந்திக்கும் அந்த நபரின் குற்றப்பின்னணி என்ன அவர் வீட்டுக்கு வரும் நபர்கள் யார் ஏதாவது சதி செயல்களில் ஈடுபடுகிறாரா என்பதை கண்டறிய வேண்டும் .

குற்ற பின்னணி :

பட்டியலில் இருக்கும் நபரின் குற்ற பின்னணி குறிப்பாக ஏற்கனவே தண்டனை பெற்ற நபரா என்பதையும் கண்டறிய வேண்டும் . இதோடு சேர்த்து காவல்துறை சில குறிப்புகளை எழுத வேண்டும் .

மேற்சொன்ன குறிப்புகளுக்கு ஆதரவாக இரண்டு சாட்சிகளும் இருக்க வேண்டும். அதை தொடர்ந்து CrPC 107 இன் கீழ் கோட்டாட்சியர் அவர்கள் ஏன் உங்கள் மீது Crpc 110 கீழ் நடவடிக்கை எடுக்க கூடாது என்று சம்பந்தப்பட்ட நபரிடம் அறிவிப்பு / விளக்கம் கேட்கவேண்டும் .

இதற்கு பதில் அளிக்க சம்மந்தப்பட்ட நபருக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் .

எழுத்துவடிவில் மறுப்பு சொல்லவும் வாய்மொழியாக மறுப்பு சொல்லவும் அவருக்கு உரிமை உண்டு .

ஒருவேளை காவல் துறை தவறான தகவல்கள் அடிப்படையில் கோட்டாட்சியரிடம் பட்டியலை சமரிப்பித்து இருந்தால் விசாரணை முடிவில் சம்பந்தப்பட்ட நபர் மீது 110 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பிக்கலாம் .

இந்த 110 பிரிவு வழக்கமாக குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் .

ஒருவரை 110 பிரிவின் கீழ் கொண்டுவர காவல்துறை பட்டியல் தயாரிக்கும் போது அந்த நபர் குறித்து ஆய்வுகளை செய்யவேண்டும். காவல்துறை அவர் சொன்னார் இவர் சொன்னார் என்றெல்லாம் காதில் கேட்டதை வைத்து முடிவு செய்யக்கூடாது .

ஆனால் தமிழ்நாட்டில் Crpc 110 ஒரு சடங்கு போல தான் நடந்துக்கொண்டு இருக்கிறது. பிரிவு 110 இன் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று விளக்கம் கேட்டு அறிவிப்பு /நோட்டீஸ் பெரும்பாலும் அனுப்பபடுவதில்லை .

காவல்துறையை சேர்ந்தவர்களே தொலைபேசியில் 110 போடவேண்டி இருக்கிறது கோட்டாட்சியர் அலுவலகம் வா என்று அழைப்பு கொடுக்கிறார்கள்..( சட்ட மீறல் )

பெரும்பாலும் அழைக்கப்படும் நபர்களிடம் எந்த விளக்கமும் கேட்காமல் கோட்டாட்சியரால் 110 நடைமுறைப்படுத்தப்படுகிறது.

உடனே ஓராண்டு காலம் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் என்று உறுதிமொழி/ உறுதி பத்திரம் கொடுக்க பட்டதாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது .

இந்த காலத்தில் ஒரு பொய் வழக்கை காவல்துறை பதிவு செய்யும் பட்சத்தில் CrPC 122 (1)(b) யை பயன்படுத்தி உறுதி பத்திரத்தை மீறியதற்காக ஓர் ஆண்டுகாலம் வரை தடுப்பு காவலில் வைக்கவும் நடவடிக்கை எடுக்க முடியும் .

இந்த CrPC 110 பிரிவை குற்றம் செய்வதையே தொழிலாக கொண்டு இருப்பவர்கள் மீது பெரும்பாலும் ஏவ முடிவதில்லை காரணம் தொடர் குற்றம் செய்பவர்கள் தொலைபேசி எண்களை மாற்றிவிட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள் .

ஆனால் பொது வாழ்க்கையில் இருப்பவர்களை நிரந்தரமாக குடும்பத்தோடு வசிப்பவர்களை குறி வைத்து காவல்துறை Cr pc 110 பிரிவை ஏவி விடுகிறது.

அதவாது தங்களுக்கு 1% கூட அதிகாரம் இல்லாத சட்டப்பிரிவை பயன்படுத்தி எளிய மக்களை வஞ்சித்தி வருகிறது.கோட்டாட்சியர் அவர்களின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஒன்றை சட்ட வரம்புகளை மீறி காவல்துறை அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவது வருத்தம் அளிக்கிறது காவல் துறையின் இப்படிப்பட்ட சட்ட மீறல்களை என்னசெய்யபோகிறோம்

மாநகராட்சி பகுதிகளில் காவல் துறை துணை ஆணையர்களுக்கு crpc 110 பிரிவை பயன்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது அதுவும் காவல்துறை அதிகாரியாக அல்ல நிர்வாகதுறை நடுவராக வழங்கப்படுகிறது.

20/03/2026
தேர்தல் களத்தில் போட்டியிடும் அரசியல் கட்சியினை சார்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும்...
20/03/2026

தேர்தல் களத்தில் போட்டியிடும் அரசியல் கட்சியினை சார்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமமான சூழலை உருவாக்கி தர வேண்டும் என்ற நோக்கில் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு வருகிறது.

Election Commission of India


🚨 அரசு நிலங்கள் & நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டுமா?👉 ஆம்! சட்டப்படி கட்டாயம் அகற்றப்பட வேண்டும்.இதற...
07/02/2026

🚨 அரசு நிலங்கள் & நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டுமா?
👉 ஆம்! சட்டப்படி கட்டாயம் அகற்றப்பட வேண்டும்.

இதற்காகவே தமிழ்நாடு அரசு கொண்டு வந்த மிக முக்கியமான அரசாணை👇
📜 G.O.Ms.No.64 – Revenue and Disaster Management Department
📅 நாள் : 08.02.2022

❓ G.O.Ms.No.64 ஏன் இயற்றப்பட்டது?
✔️ அரசு நிலங்கள்
✔️ ஏரி, குளம், ஓடை, வாய்க்கால் போன்ற நீர்நிலைகள்
✔️ பொது பயன்பாட்டு நிலங்கள்

👉 இவைகளில் நடைபெறும் அனுமதியில்லா ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, அகற்ற
👉 அரசு அலுவலர்கள் / அதிகாரிகளுக்கு தெளிவான அதிகாரமும் பொறுப்பும் கொடுக்கவே இந்த GO.

🏛️ இந்த GO-வின் முக்கிய அம்சம் என்ன?

🔹 Divisional Level Monitoring Committee
🔹 District Level Monitoring Committee
🔹 State Level Steering Committee

➡️ மூன்று நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
➡️ ஆக்கிரமிப்புகள் கண்டறிதல், நடவடிக்கை, மேற்பார்வை – அனைத்தும் கட்டாயம்.

❓ அரசு நில & நீர்நில ஆக்கிரமிப்பு அகற்ற முழு அதிகாரம் யாருக்கு?
✅ Revenue Department
✅ District Administration
✅ இந்த Monitoring Committees

👉 “அதிகாரம் இல்லை” என்று சொல்ல அரசு அலுவலர்கள் / அதிகாரிகளுக்கு இனி வாய்ப்பே இல்லை!

🚫 ஏரி, குளம், அரசு நில ஆக்கிரமிப்பு – இனி தப்பிக்க முடியாது!
இந்த GO நடைமுறையில் இருந்தால்
❌ அரசியல் செல்வாக்கு
❌ அதிகார அலட்சியம்
❌ கால தாமதம்
எதற்கும் இடமில்லை.

⚠️ அரசு அலுவலர்கள் / அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையா?
📌 மனுவில்
📌 RTI-யில்
📌 புகாரில்
📌 நீதிமன்றத்தில்

👉 இந்த G.O.Ms.No.64 (08.02.2022) – 2022-ஐ நேரடியாக காட்டுங்கள்!

📢 பொதுமக்களுக்கு ஒரு அறிவுரை:
இந்த GO-வை தெரிந்துகொண்டால்👇
✅ அரசு நிலத்தை காப்பாற்றலாம்
✅ நீர்நிலைகளை மீட்டெடுக்கலாம்
✅ அதிகாரிகளை சட்டப்படி கட்டாயப்படுத்தலாம்

📌 சட்டம் தெரிந்தவருக்கு, அதிகாரம் தானாக வரும்!

Revenue and Disaster Management Department வெளியிட்டுள்ள G.O.Ms.No.64 (08.02.2022) என்பது
பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம மக்களுக்கு மிக முக்கியமான அரசாணை ஆகும்.

👉 பலர் அறியாத இந்த அரசாணையை அதிகாரிகள் கூட முறையாக பின்பற்றாத நிலை உள்ளது.


#அரசுநிலஆக்கிரமிப்பு
#நீர்நிலஆக்கிரமிப்பு





வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்காக நியமிக்கப்படவுள்ள 1,444 மத்திய பார்வையாளர்களுக்கான இந்திய தேர்தல் ஆணையத்தின் (EC...
07/02/2026

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்காக நியமிக்கப்படவுள்ள 1,444 மத்திய பார்வையாளர்களுக்கான இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) விளக்கக் கூட்டம் நிறைவு.
சட்டத்தின்படியும் தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகளின்படியும் தேர்தல்கள் நடத்தப்படுவதை உறுதிசெய்ய பார்வையாளர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் கேட்டுக்கொண்டார்.

“பொது நில ஆக்கிரமிப்பு இனி சிவில் பிரச்சினை அல்ல – இது குற்றவியல் தண்டனைக்கு உட்பட்டது . FIR கட்டாயம்.” – Madras High Co...
07/02/2026

“பொது நில ஆக்கிரமிப்பு இனி சிவில் பிரச்சினை அல்ல – இது குற்றவியல் தண்டனைக்கு உட்பட்டது . FIR கட்டாயம்.” – Madras High Court, 20.06.2024.

அவசியம் வாசியுங்கள்..💪💪💪🔥 சட்டங்கள் இல்லாவிட்டால் அடிப்படை உரிமைகள் கூட மனிதனுக்கு கிடைக்காது... 🔥 அநீதிகளை அடையாளம் காட...
17/11/2025

அவசியம் வாசியுங்கள்..💪💪💪
🔥 சட்டங்கள் இல்லாவிட்டால் அடிப்படை உரிமைகள் கூட மனிதனுக்கு கிடைக்காது...
🔥 அநீதிகளை அடையாளம் காட்ட வழிவகுக்கிறது...
🔥 விழிப்போடு இருந்தால் விடியல் நிச்சயம்..

* சட்டம் என்பது என்ன? - அது யாரால் உருவாக்கப்பட்டது? சட்டத்தை
நாம் பின்பற்றியே ஆக வேண்டுமா? என்ற கேள்விகளும், அது சார்ந்த
எண்ண ஓட்டங்களும் எப்போதும் மக்கள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது.

ஏழை, எளியோர், வலியோர், சிறியோர் என்று அனைத்து தரப்பு மக்களுக்கும் சமநீதியை வழங்குவதற்கான ஒரு அரிய கோட்பாடு தான் சட்டம்.
இது சமூக கட் டுப்பாடு, தனிநபர் மற்றும் குழு நடத்தைகளை ஒழுங்குபடுத்தும் நடைமுறைகளை குறிக்கிறது. சட்டம் பல நோக்கங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் உதவுகிறது. அமைதியை நிலைநாட்ட உதவுகிறது. சமூகத்தில் வன்முறைகளை தடுக்கிறது. மக்களின் உரிமைகளை பாதுகாக்கிறது.
தேர்தலில் வாக்களிக்கும் ஜனநாயகத்தை உறுதி செய்து, ஒரு அரசையே உருவாக்கும் உரிமையை மக்களுக்கு தந்திருப்பதும் இந்திய அரசியலமைப்பு சட்டம் தான்.

சட்டங்கள் இல்லாவிட்டால் மக்களின் அடிப்படை உரிமைகள் கூட சரியாக கிடைக்காது என்கின்றனர் சட்டம் சார்ந்த நிபுணர்கள். இப்படி சமூகத்தில் நம்மை கம்பீரமாக வழிநடத்திச் செல்லும் சட்டம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் பெருக வேண்டும்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் சட்டத்தின் பயன்கள் சென்று சேர வேண்டும். இலவசமாக கிடைக்கும் சட்டங்களை அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்டு தோறும் நவம்பர் 9ம் தேதி (இன்று) தேசிய சட்ட சேவைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஆனால் சட்டம் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் போதிய அளவில் உள்ளதா? என்றால் அதற்கான விடை கேள்விக்குறிதான்.

“சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதமே விளக்கு' என்றார் பேரறிஞர் அண்னா.
அவரது கூற்றைப்போலவே ஏழை, எளிய, அடித்தட்டு மக்களுக்கு சட்டம் என்பது இன்றளவும் இருட்டறையாகவே உள்ளது. அவர்களின் வாழ்வில் இருள் விலக உணவு, உடை, இருப்பிடம்,வேலை போன்று சட்டவிழிப்புணர்வும் மிகவும் அவசியம் என்கின்றனர் சமூக மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள்.

இதுகுறித்து சட்டம் சார்ந்த சமூக
மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: கல்வியறிவின்மை என்பது ஒரு நபரின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பெரும் தடையாக இருக்கும். இந்த கல்வி அறிவு இல்லாத பாமர மக்களுக்குகூட சட்டம் சார்ந்த விழிப்புணர்வு என்பது மிகவும் முக்கியம். இந்த அறிவும், விழிப்புணர்வும் ஓரளவு இல்லாவிட் டாலும் சமூகத்தில் தனக்கு இழைக்கப்படும் அநீதிகளை அடையாளம் காணமுடியாமல் போய்விடும். சட்டம் சார்ந்த அடிப்படை மனிதஉரிமைகள் குறித்து அறியாமல் இருப்பதே இதற்கு காரணம்.

இதேபோல் சட்டம் சார்ந்த விழிப்புணர்வு இல்லாததால் அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகளை பெறுவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. அரிய சமூக நலத்திட்டங்கள் பல இருந்தும் அது முழுமையாக மக்களை சென்றடைவதில்லை. இதற்கு அவர்களிடம் அடிப்படை சட்டவிழிப்புணர்வு இல்லாததும், அல்லது ஏற்படுத்தப்படாமல் இருப்பதும் ஒரு முக்கிய காரணம். நமக்கு தீங்கு இழைப்பவர் எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும் சட்டத்தின் துணையோடு அவர்களுக்கு தக்கபாடம் புகட்ட முடியும்.

இதற்கு உதாரணமான சம்பவங்கள் நாடு முழுவதும் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது. வழக்கறிஞரின் சிறந்தவாதம் தான். ஒருவருக்கான நீதியை பெற்றுத்தருகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அந்த வழக்கறிஞரை அணுகும் பாதிக்கப்பட்ட நபர், ஓரளவு சட்டவிழிப்புணர்வு உள்ளவராகவும் இருப்பது பல்வேறு வழக்குகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மனிதவாழ்க்கைக்கு தேவைப்படாத அல்லது விலக்கி வைக்கப்பட வேண்டியவை எல்லாம் அவர்களுக்கு எளிதாக கிடைக்கிறது. ஆனால் சமூகத்தில் சக மனிதர்களோடு கம்பிரமாக நடைபோட வைக்கும் சட்டம் சார்ந்த விழிப்புணர்வும். அதன் சேவைகள் எளிதாக கிடைப்பது இன்றுவரை குதிரைக்கொம்பாகவே உள்ளது.
எனவே அனைத்து
தரப்பு மக்களிடமும் சட்டம் சார்ந்த அடிப்படை அறிவு குறித்த பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிபது அது சார்ந்த அனைவருக்குமான கடமையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

மாணவர்களிடம் விழிப்புணர்வு தேவை

இலவச உதவிக்கு அரசு ஆணையம் ஜனநாயக நாடான இந்தியாவில் சட்டத்தின் முன்பு அனைவரும் சரிசமம். ஏழைகள், எழுத்தறிவு இல்லாதவர்கள், சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று அனைவருக்கும் சமநீதி கிடைக்க வேண்டும். அவர்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள இலவச சட்டஉதவி அளிக்க வேண்டும். இதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 39-ஏ.,மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நோக்கத்தை நிறைவேற்றி வைக்க இந்திய அரசு, தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தை 1987ம் ஆண்டு ஏற்படுத்தியது. இதேபோல் இந்திய நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்கும், உரிய நிவாரணம் பெறுவதற்கும் லோக் அதாலத்துகள் (மக்கள்நீதிமன்றங்கள்) என்ற அமைப்பை, உயர்நீதிமன்றத்தின் அனுமதியுடன் 1986ம் ஆண்டு முதல் சட்டப்பணிகள் ஆணையம் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிப்புகளுக்கு தீர்வு தரும் பல சட்டங்கள்'
"இந்தியாவில் சாலைபோக்குவரத்து சட்டம் (2015),
தகவல் தொழில்நுட்ப சட்டம் (2000), நிலஅபகரிப்பு சட்டம் (2011). நிலசீர்திருத்தசட்டம்(1961),
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம் (2013),
பாலியல் குற்றங்களில் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (2012) ,
பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல் (பாலின தேர்வு தடைச்சட்டம் 1992)
பொதுச்சேவைகளை பெறும் உரிமை சட்டம், மருத்துவ கருக்கலைப்பு சட்டம் (1971),
மோட்டார் வாகனச்சட்டம், வணிக குறியீடுகள் சட்டம் (1999) வன்கொடுமை தடுப்புச்சட்டம், வருமான வரிச்சட்டம் (1961)
அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம், இந்தியக்கூலி வழங்கல் சட்டம், ஊழல் தடுப்புச்சட்டம் (1988),
குழந்தை தொழிலாளர் சட்டம் என்று ஏராளமான சட்டங்கள் உள்ளது.

மனிதர்களுக்கு மட்டுமன்றி உயிரினங்களுக்கான சட்டங்களும் அமலில் உள்ளது. மேற்கண்ட சட்டங்களை அடிப்படையாக வைத்தே பாதிக்கப்பட்டோருக்கு உரிய தீர்ப்பை நீதிமன்றங்கள் அளித்து வருகிறது," என்கின்றனர் மூத்த சட்டஆலோசகர்கள்.

"இனிவரும் காலங்களில் கம்ப்யூட்டர் அறிவும், நவீன உபகரணங்களை செயல்படுத்தும் திறனும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டியது அவசியமாக மாறக்கூடும்.
அதேபோல் அதிகரிக்கும் மக்கள் தொகையும் பல்வேறு பாதிப்புகளுக்கு காரணமாக அமையும். இவை அனைத்தையும் சமாளித்து சராசரி மனிதராக வாழ்வதற்கு கல்வி மட்டுமே போதாது. நிச்சயமாக சட்டங்கள் குறித்த அடிப்படை அறிவும் தேவை என்ற நிலை உருவாகும். இதை கருத்தில் கொண்டு பள்ளிப்பருவத்திலேயே மாணவர்களுக்கு சட்டம் குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தற்போது இந்த விழிப்புணர்வானது ஒரு பகுதியாக மட்டுமே உள்ளது. மாணவர்களுக்கு கிடைக்கும் சட்டவிழிப்புணர்வு, அவர்கள் மூலம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் சென்று சேரும்," என்கிறர் ம.பெஞ்சமின் ரொனால்டுராபின்சன் வழக்கறிஞர்

வழக்கில் சிக்கிய வாகனத்தை ரெக்கவரி செய்வது எப்படி?வழக்கில் சிக்கிய (Case Property) வாகனத்தை மீட்டெடுக்க சில சட்ட நடைமுறை...
26/05/2025

வழக்கில் சிக்கிய வாகனத்தை ரெக்கவரி செய்வது எப்படி?

வழக்கில் சிக்கிய (Case Property) வாகனத்தை மீட்டெடுக்க சில சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

1. போலீஸில் விண்ணப்பிக்க (Zimma Application)
🔹வாகனம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒரு Zimma Application (பொறுப்பு மனு) அளிக்கலாம்.

🔹இந்த மனுவில் வாகன உரிமையாளர் ஆதாரம் (RC, Insurance, DL) மற்றும் பறிமுதல் விவரங்களை குறிப்பிட வேண்டும்.

2. நீதிமன்றத்தில் மனு அளிக்க (Release Petition in Court)
🔹வாகனம் நீதிமன்றத்தால் கைப்பற்றப்பட்டிருந்தால், BNSS 497 பிரிவுகளின் கீழ் Release Petition தாக்கல் செய்யலாம்.

🔹நீதிமன்றம் வாகன உரிமையை உறுதி செய்தபின் விடுவிப்பதற்கான உத்தரவு (Order for Interim Custody) வழங்கும்.

🔹இந்த உத்தரவுடன் போலீசிடம் சென்று வாகனத்தை மீட்கலாம்.

3. மோசடி வழக்கில் மீட்பது
🔹வாகனம் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தால், முதலில் வழக்கு முடியும் வரை நீதிமன்ற அனுமதி தேவை.

🔹சில நேரங்களில் Hypothecation (கடன் இருப்பது) பிரச்சினை இருந்தால், வங்கி/நிதி நிறுவனம் முன் நிபந்தனை உடன்படிக்கை செய்யலாம்.

4. RTO மற்றும் காவல் துறையின் அனுமதி
🔹சில வழக்குகளில், RTO அல்லது போலீஸ் துறையிடம் வாகனத்தை மீட்டெடுக்கும் முன் அனுமதி பெற வேண்டும்.

🔹போக்குவரத்து விதிமீறல், ரஜிஸ்ட்ரேஷன் பிரச்சினைகள் இருந்தால், முடிக்க வேண்டும்.

5. மேல்முறையீடு செய்வது
🔹கீழ் நீதிமன்றத்தில் மனு நிராகரிக்கப்படும் பட்சத்தில், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

முக்கியமானவை:
✔ சட்டப்படி உரிமையை நிரூபிக்க ஆவணங்கள் தயார் செய்ய வேண்டும்.
✔ நீதிமன்ற உத்தரவின்றி போலீஸ் வாகனத்தை விடுவிக்க முடியாது.
✔ சட்ட ஆலோசனை எடுத்து முன்னேறலாம்.

சட்டப்படி நடந்து கொண்டால் வாகனத்தை மீட்க முடியும்!

லோக் ஆயுக்தா என்ன? யாருக்கு எதிராக புகார் அளிக்கலாம்? எப்படி?🔴லோக் ஆயுக்தா என்றால் என்ன?லோக் ஆயுக்தா என்பது ஒரு சுயாதீன ...
15/04/2025

லோக் ஆயுக்தா என்ன? யாருக்கு எதிராக புகார் அளிக்கலாம்? எப்படி?

🔴லோக் ஆயுக்தா என்றால் என்ன?

லோக் ஆயுக்தா என்பது ஒரு சுயாதீன விசாரணை அமைப்பு. இது, அரசு ஊழியர்கள், அதிகாரிகள் அல்லது அரசியல் பதவியில் உள்ளவர்கள் ஊழல் செய்தால், அவர்களுக்கு எதிராக பொதுமக்கள் புகார் அளிக்க வசதி அளிக்கிறது.

---

🔴எப்போது புகார் அளிக்கலாம்?

🔹ஒருவர் அரசு ஊழியராக இருந்தபோது,

🔹ஊழல் தடுப்பு சட்டம், 1988ன் கீழ் தண்டனைக்குரிய ஊழல் போன்ற தவறான செயல்களில் ஈடுபட்டிருக்கிறார் என்ற நம்பிக்கையுடன்,

🔹அவருக்கு எதிராக தகவல், சாட்சியங்கள் இருந்தால்,

🔹அவருக்கு எதிராக தமிழ்நாடு லோக் ஆயுக்தாவிடம் புகார் அளிக்கலாம்.

---

🔴யாருக்கு எதிராக புகார் அளிக்கலாம்?

🔹அமைச்சர்கள், முதலமைச்சர்,

🔹அரசு துறை அதிகாரிகள்,

🔹நகராட்சி, மாவட்ட வளர்ச்சி அலுவலர்கள்,

🔹பொது துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள்,

🔹சட்டப்படி பதவியில் உள்ள எந்தவொரு அரசு ஊழியருக்கும் புகார் அளிக்கலாம்.

(இவை அனைத்தும் தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம், பிரிவு 12ன் கீழ் வருகிறது.)

---

🔴யாருக்கு எதிராக புகார் அளிக்க முடியாது?

🔹பிரிவு 13-இன் கீழ் சில சிறப்பு அதிகாரிகளுக்கு எதிராக, சட்டம் கூடிய தடை விதிக்கிறது.

🔹4 ஆண்டுகளுக்கு மேல் பழைய தவறுகள் குறித்த புகார்களை பரிசீலிக்க முடியாது.
(தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம், பிரிவு 40)

---

🔴எப்படி புகார் அளிப்பது?

🔹படிவம்: "அட்டவணை V" எனப்படும் குறிப்பிட்ட படிவத்தில் உங்கள் புகாரை எழுத வேண்டும்.
பதிவிறக்கம் செய்ய:
Form Download - tamilnadulokayukta.tn.gov.in/documents/forms

🔹விதி: இது தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்ட விதிகள், 2018 – விதி 22ன் கீழ் வருகிறது.

🔹புகார் எழுதியவரின் விபரங்கள், புகாரின் விவரங்கள், ஆதாரங்கள், சாட்சிகள் ஆகியவற்றுடன்,

🔹தபால் / நேரில் / ஆன்லைன் வாயிலாக புகார் அளிக்கலாம்.

---

🔴முக்கிய குறிப்புகள்:

🔹புகாரில் உண்மை தகவல்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும்.

🔹தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கம், அல்லது பொய் புகார் இருந்தால், அது சட்ட ரீதியாக தண்டிக்கப்படக்கூடியது.

---
உதவி தேவைப்பட்டால்,
tamilnadulokayukta.tn.gov.in இணையதளத்தில் மேலும் பார்க்கலாம்.

உங்கள் உரிமையை அறிந்து செயல்படுங்கள். ஊழலை ஒழிக்க ஒவ்வொருவரும் முன்னெடுக்கலாம்!

“எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள். எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பு அளியுங்கள். ‘எனக்கு மேலே ஒருவரும் இல்லை; எனக...
14/04/2025

“எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள். எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பு அளியுங்கள். ‘எனக்கு மேலே ஒருவரும் இல்லை; எனக்குக் கீழேயும் ஒருவரும் இல்லை’ என்பதை மனித விழுமியமாக மாற்றுங்கள்"
தெளிவும் தீட்சையும் கொண்ட மாண்புமிகு அம்பேத்கர் அய்யா அவர்களின் பிறந்த நாளில், நாம் வணங்கி மகிழ்வோம்!

தீண்டாமை, சமதர்மம், கல்வி, சமுதாய நீதி… இவை அனைத்திற்கும் அடித்தளம் அமைத்தவர் அம்பேத்கர்.
அவர் வாழ்ந்த காலத்தில் அநீதியும் அவமதிப்பும் ஒருபடி மேலாக இருந்தபோதும்,
அவை அனைத்தையும் தன்னம்பிக்கையாலும், கல்வியாலும், சட்ட அறிவாலும் எதிர்த்து நியாயத்தின் வெற்றியைப் பெற்றவர்.

இன்றும் நம் சமூகத்தில் தீண்டாமை, சாதியப் பாகுபாடு, அரசியலியல்களில் மதவாதம், இவை தொடரும் ஒரு நிலைமை உள்ளது.
அந்த நிலையை மாற்ற நாம் ஒவ்வொருவரும் மாற்றத்திற்கான ஓர் ஒளியாக இருக்க வேண்டும்.

அம்பேத்கர் அய்யாவின் நினைவில்,
இன்றைய நாள் நாம் ஒவ்வொருவரும்:

• தீண்டாமையை எதிர்த்து,
• சமத்துவத்தை மேம்படுத்தி,
• கல்வியால் எழுச்சி பெறும் சமூகத்தை உருவாக்கி,
• ஒவ்வொருவரும் மனிதராக மதிக்கப்பட வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வை பரப்பி,
ஒரு புதிய ஒளிக்காலத்தை நோக்கி பயணிப்போம்.

ஜெய் பீம்! வாழ்க அம்பேத்கார் புகழ்!

Address

Padmanabhapuram Court
Thuckalay
629175

Opening Hours

Monday 6:30am - 8:30pm
Tuesday 6:30am - 8:30pm
Wednesday 6:30am - 8:30pm
Thursday 6:30am - 8:30pm
Friday 6:30am - 8:30pm
Saturday 6:30am - 8:30pm
Sunday 8:30am - 4:30pm

Telephone

+919787176573

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ம பெ ரொ ராபின் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to தமிழ்நாடு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ம பெ ரொ ராபின்:

Share