Adv Karthi Salem

Adv Karthi Salem Adv Karthi Salem

தொடர்ந்து வருகின்ற 2026 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியும் நாட்குறிப்பும் அன்பானவர்களுக்கும்💕 மரியாதைக்குரியவர்களுக்கும்🙏15ம்...
11/12/2025

தொடர்ந்து வருகின்ற 2026 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியும் நாட்குறிப்பும் அன்பானவர்களுக்கும்💕 மரியாதைக்குரியவர்களுக்கும்🙏15ம் ஆண்டாக வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்த பொழுது🙏🙏🙏

28/12/2024

விழிப்புணர்வு பதிவு ..........நண்பர் அரசாங்க ஊழியர், அவர் மனைவியும் அரசாங்க ஊழியர். நண்பருக்கு 2 தங்கச்சி.

நண்பரோட அம்மா பேருல 4 ஏக்கர் விவசாய நிலம் இருக்கு, ஒரு வீடு இருக்கு, அப்பா பேருல 4 ஏக்கர் விவசாய நிலம் இருக்கு, ஒரு வீடு இருக்கு. மொத்தம் 8 ஏக்கர் நிலமும் குத்தகைக்கு விட்டு இருந்தாங்க.

நண்பருக்கு கலயாணம் ஆச்சி, தங்கைகளுக்கும் கல்யாணம் ஆச்சி, அப்போ குடும்பதுக்குள்ள பேசி ஒரு முடிவு செஞ்சி இருக்காங்க, என்னனா? 2 வீடு இருக்கு, அதை தங்கச்சிகளுக்கு ஆளுக்கு ஒரு வீடு குடுத்துடலாம், பையனுக்கு அப்பா அம்மா பேருல இருக்குற 8 ஏக்கர் விவசாய நிலமும் குடுத்துட்டுல்லாம்னு.

ஏன் அப்படி முடிவு செஞ்சாங்கன்னா? நண்பர் பொண்ணு கட்டி இருக்குற வீடு ஒரே பொண்ணு, மாமியார் பேருல ஒரு வீடு இருக்கு, 2 ஏக்கர் விவசாய நிலம் இருக்கு, மாமனார் இல்லை, எப்படியும் அந்த வீடு நண்பருக்கு தானே வர போகுது, அப்படினு இவங்க கிட்ட இருக்குற வீட்டை தங்கச்சிங்களுக்கு ஆளுக்கு ஒரு வீடு குடுக்கலாம்னு பேசி முடிவு பண்ணி, 2 வீட்டையும் ஆளுக்கு ஒரு வீட்டை பத்திரபதிவு செஞ்சி குடுத்துட்டாங்க.

கொஞ்ச நாள்ல மாமியார் மருமகள் பிரச்சனை ஆரம்பிச்சிடிச்சி, இந்த பிரச்சனைகளுக்கு நடுவுல நண்பருக்கு ரெண்டு ஆண் குழந்தையும் பிறந்தது.

வேலைக்கு போகும் ஆகாத மருமகள், பேரப்பிள்ளை பாத்துக்க வேண்டிய சூழ்நிலை, கொஞ்ச நாள்ல மாமியார் மருமகள் பிரச்சனை முத்தி போச்சி, இதுக்கு மேல ஒன்னா இருக்க முடியாதுனு நண்பருக்கு ஒரு அளவுக்கு புரிஞ்சி போச்சி, நண்பரும் எவளோ சமாளிச்சு பாத்தார், ஒன்னும் வேலைக்கு ஆகல, இதுல ஜெயிக்கிற ஆம்பள ரொம்ப கம்மி.

நண்பரோட மாமியாருக்கு ஒரு சொந்த வீடு இருக்கே, அங்க போயிட்டாங்க நண்பரும் அவர் மனைவியும், பிள்ளைகளும்.

சும்மா ஆடும் ஆத்தாக்காரிக்கு கால்ல சலங்கை கட்டி விட்டது போல ஆகிடிச்சி, பையன் மாமியார் வீட்டோட போனது.

கொஞ்ச நாள்ல நண்பரோட அப்பாவும் இறந்து போயிட்டார், இதுக்கு நடுவுல மாமியார் மருமகளுக்குள்ள சுத்தமா பேச்சி வார்த்தை இல்லாம போயிடிச்சி, புள்ளை பிரிஞ்சி தனியா போனதும், நண்பரோட அம்மா போயி பொண்ணுங்க வீட்ல செட்டில் ஆகிடிச்சி. அண்ணிக்கு.... அம்மா கிட்ட பேச்சி வார்த்தை இல்லமா போனதும், 2 பொண்ணுங்களுக்கு சொல்லவா வேணும்? எரியிற தீயில நல்லா எண்ணெய் ஊத்தி விட்டுட்டாங்க. நண்பர் மட்டும் அடிக்கடி தங்கச்சி வீட்டுக்கு போயி அம்மாவை பாத்துட்டு வருவார்.

8 ஏக்கர் குத்தகை பணம்னு பையன் கண்ணுல ஒரு ரூபாய் கூட காட்டாது ஆத்தாகாரி, வருஷ வருஷம் ஏதோ ஒரு செலவு கணக்கு சொல்லி, நண்பர் கிட்ட காசு குடுத்ததே இல்ல அம்மா, நண்பரும் சரி அம்மா தானே? அந்த காசு வந்து நமக்கு ஒன்னும் ஆக போறது இல்ல, நாமளும் நம் மனைவியும் நல்ல சம்பளம் வாங்குறோமேனு விட்டுடுவார்.

ஆனா பொண்டாட்டி அப்படி விடுவாளா? உங்க அம்மா எல்லா காசும் உங்க தங்கச்சி தான் தராங்க, வருஷ வருஷம் ஏதோ ஒரு செலவு கணக்கு சொல்றாங்க உங்க கிட்டனு புருஷன் பொண்டாட்டிக்குள்ள அடிக்கடி சண்டை வரும்.
கூட நண்பரோட மாமியார் வேற இருக்கு, சொல்லவா வேணும்? பொண்டாட்டியும் மாமியாரும் சேந்து அடிச்சா, ஒரு ஆம்பள எப்படி சமாளிப்பான்?

அந்த 8 ஏக்கர் நிலம் நண்பர் பேருக்கு இன்னும் பத்திரம் ஆகல, அம்மா அப்பா பேருலயே இருக்கு, என் பேருக்கு பத்திரம் பண்ணி குடுங்கன்னு நண்பர் கேட்டுகிட்டே இருக்கார் இதோ அதோனு இழுத்தடிச்சிக்கிட்டே இருந்தாங்க, நண்பர் பேருக்கு பத்திரபதிவு பண்ணனும்னா? அம்மா & 2 தங்கச்சியும் கையெழுத்து போடணும்.

இப்படியே போயிக்கிட்டு இருக்கும் போதும், 3 வருஷம் முன்னாடி வந்த புயல்ல, சேதாரம் ஆனா விவசாய நிலத்துக்கு நிவாரணம் தராங்கனு நண்பர் நிவாரணம் வாங்கலாம்னு போயி இருக்கார், அப்போ சிட்டா அடங்கல் வாங்கிட்டு வாங்கனு சொல்லி இருக்காங்க.

நண்பர் VAO ஆபீஸ்ல சிட்டா அடங்கல் வாங்க போயி இருக்கார், அப்போ தான் அவருக்கு தெரிய வருது, அம்மா பேருல இருந்த 4 ஏக்கர் நிலம் தங்கச்சிகளுக்கு ஆளுக்கு 2 ஏக்கர் பத்திரபதிவு செஞ்சி குடுத்து இருக்கு ஆத்தாக்காரினு. அதுவும் 2 வருஷம் முன்னாடியே.

அம்மா இப்படி செஞ்சது தெரிஞ்சா எப்படி இருக்கும் பையனுக்கு? எவளோ பெரிய துரோகம் செஞ்சி இருக்கு அந்த அம்மா.

இந்த விஷயத்தை போயி பொண்டாட்டி கிட்ட சொன்னா என்ன ஆகும்?

ஆத்தாக்காரி தான் இப்படி செஞ்சான்னா? 2 தங்கச்சிக்கு எங்க போச்சி அறிவு? தங்கச்சிய கட்டிக்கிட்டானுங்களே 2 பேரு அவனுங்க கூட கமுக்கமா இருந்து இருக்கானுங்க, கொடுமை என்னனா? இந்த 2 வருஷமா அண்ணன் கிட்ட பேசிகிட்டு பழகிக்கிட்டு தான் இருக்காளுங்க 2 தங்கச்சியும், தங்கச்சி புருஷங்களும்.

இந்த சம்பவம் நண்பருக்கும் அவர் மனைவிக்கும் பெரிய சண்டையே நடந்துச்சி.

ஊருல 4 பெரியவங்களை கூட்டி பஞ்சாயத்து வெச்சி, அப்பா பேருல இருக்குற 4 ஏக்கரையும் ஆட்டைய போட்டுட போறாங்கனு நண்பர் பேருல பத்திரபதிவு செஞ்சி முடிச்சாங்க.

பஞ்சாயத்துல ஆத்தாக்காரி என்ன சொல்லிச்சி தெரியுமா? என்ன அம்போனு விட்டுட்டு மாமியார் வீட்டோட போயிட்டான், என் பொண்ணுங்க தான் என்ன பாத்துக்கிட்டாங்கனு சொல்லிச்சி, இந்த வார்த்தை செமயா எடுபட்டுச்சு பஞ்சாயத்துல.

நிலம் எல்லாம் அண்ணனுக்கு சொல்லி ஆளுக்கு ஒரு வீட்டையும் ஆட்டைய போட்டுட்டு, ஆளுக்கு 2 ஏக்கர் நிலத்தையும் அடிச்சிக்கிட்டு போயிடிச்சிங்க, 2 தங்கச்சியும்.

இதுவே நண்பரோட அப்பா உயிரோட இருந்து இருந்தா, இந்த 3 பொம்பளைங்க சேந்து இவளோ ஆட்டம் போட்டு இருப்பாங்களா? செவுல்ல 2 அப்பு அப்பிட்டு மூடிக்கிட்டு இருங்கடீனு சொல்லி இருப்பார்.

கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி என் புள்ள, என் புள்ளனு உருகுவாளுங்க, இந்த ஆத்தாக்காரிங்க, கடைசில நம்ப வெச்சி கழுத்தை அறுத்துடுங்க.

எப்போவுமே பையனை திட்டிகிட்டே இருந்தாலும், கோவத்தை வெளிப்படுத்துக்கிட்டே இருந்தாலும், அப்பா எப்போவும் இப்படி ஒரு காரியத்தை செய்யமாட்டார்.

எல்லா அம்மாவும் இல்ல, நிறைய அம்மாக்கள் மருமகளை சீண்டினா நம்ம பையன் தான் disturb ஆவான்னு புரிஞ்சிகிட்டு பக்குவமா நடந்துப்பாங்க. அதனால் மூத்த குடிமக்களே நீங்கள் நல்ல நிலையில் இருக்கும் பொழுது தங்களுடைய குழந்தைகளுக்கு சேர வேண்டிய சொத்துக்களை நல்லவிதமாக பிரித்துக் கொடுத்து விடுங்கள் மகிழ்ச்சியாவது மிஞ்சும் நன்றி 🙏🙏🙏🙏🙏வக்கீல் கார்த்தி சேலம்

"ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து வாங்கி விடுங்கள் " என்று பேசுவது சர்வ சாதாரணமாகிவிட்டது இப்போது !🧡✨மிக கொடூர சூழலில் ...
11/12/2024

"ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து வாங்கி விடுங்கள் " என்று பேசுவது சர்வ சாதாரணமாகிவிட்டது இப்போது !🧡✨

மிக கொடூர சூழலில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு விவாகரத்து தேவையே ! அதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் அன்பில் இசைந்து செல்ல வேண்டிய விஷயங்களுக்கு கூட ஈகோ பார்த்துக் கொண்டும், குடும்ப உறவுகளின் வற்புறுத்தலுக்கும் நண்பர்களின் தேவையற்ற ஆலோசனைகள் ஆகியவை இளம் வயதினர் அதிகம் விவாகரத்தை நாடி செல்ல காரணமாகி விடுகிறது. ஆணைச் சார்ந்து பெண் வாழும் சுழலும் இப்போது இல்லை.

இது மிகப் பெரிய காரணம் எனலாம்.

"உனக்கு என்ன கை நிறைய சம்பாதிக்கிற.

உன்னால் உன்னையும் உன் பிள்ளைகளையும் பார்த்துக் கொள்ள முடியும். யோசிக்காதே.

தைரியமாய் முடிவெடு" என்று ஆலோசனைகள் அதிகம் கொடுத்து கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பணம் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமே வாழ்க்கை இல்லை. அதையும் மீறி பல விஷயங்கள் இருக்கின்றது.

உங்களுக்கு வேறுறொரு கணவன் கிடைக்கலாம்.அல்லது கணவனென்றால் வேறொரு மனைவி கிடைக்கலாம்.

ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் அப்பாக்களோ அல்லது அம்மாக்களோ நிச்சயம் கிடைக்க மாட்டார்கள்.

பார்ன் சுவாலோ என்ற சின்னச் சிறு பறவையினம் இனப்பெருக்கத்திற்காக 8300 கி.மீ.,கடலின் மீது பயணம் செய்கிறது. அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் ஓய்வெடுத்து பறந்து வேறொரு நாட்டில் தன் இனத்தை விருத்தி செய்துக் கொண்டு அங்கிருந்து மீண்டும் கடலின் மேலே தன் குஞ்சுகளுடன் பயணம் செய்து தன் சொந்த நாட்டை அடையும்.

ஒரு நல்வாழ்வை தன் குஞ்சுகளுக்கு கொடுக்க ஒரு பறவை இவ்வளவு போராடுகிறது. பேரன்பு இருந்தால் மட்டுமே இந்த பயணம் சாத்தியம்.

சிறு சிறு விஷயத்திற்கும் சண்டையிட்டுக் கொண்டும், சகிப்புத் தன்மை அற்றும் அல்லது பிற ஈர்ப்பில் மனம் மயங்கியும் ஏன் இந்த வாழ்வை தொடருகிறோம் என்று கசப்புடனும் இருக்கும் தம்பதியினர் அனைவருமே இந்த பறவையின் பயணத்தில் கற்றுக் கொள்ள நிறையவே உள்ளது.

தன் இனத்தை நல்லவிதமாக உருவாக்குவதில் இத்தனை போராட்டங்கள் ஒரு பறவையின் வாழ்விலேயே உண்டென்றால் மனித வாழ்வில் இதைக்காட்டிலும் அதிக போராட்டங்கள் இருக்கும்.

சிலர் பெண்களிடம் பெண்ணியம் பெண் விடுதலை என்று அதிகம் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள் ஆணாதிக்கம் மிகுந்த ஆண்வர்க்கம் என்றால் அவள் மீண்டும் வாழ்வை பெற்றுக் கொள்ள காத்திருக்கும் வர்க்கமும் இதே ஆணாதிக்கம் மிகுந்த ஆண்வர்க்கம்தானே. மாற்றப் படவேண்டியது மனங்களே. எதையும் எதிர் கொள்ளும் தைரியம்தான்.

தன் கணவனிடமே தன் சுயத்தை நிரூபிக்க முடியாமல் தோல்வியுறும் பெண் வேறு ஒரு ஆணிடம் தன் சுதந்திரத்தை எப்படி மீட்டெடுப்பாள்?

அதே போன்று ஒரு பெண்ணிடம் அன்பை பெற சக்தியற்ற ஒருவன் வேறொரு பெண்ணில் தன் அன்பை எப்படி பெற முடியும்?

அனைவரிடமும் சிறு சிறு அளவில் அல்லது பெரிய அளவிலும் குறைகள் இருக்கலாம்.பேரன்பு கண் கொண்டு காணில் அனைத்தும் சாத்தியமே !

மேலைநாடுகள் போல் சுதந்திர வாழ்வு அல்லது வேறு துணை தேடிக்கொள்ளுதல் என்று இப்போது மேற்கோள் காட்டிக் கொண்டிருக்க இயலாது.

குடும்பம் அமைப்பினை தொலைத்து வெளியில் தேடியவர்கள் இப்போது மகிழ்ச்சி என்பது அவரவர் குடும்பத்தில் மட்டுமே சாத்திய படும் என்ற உண்மையை உணர்ந்து 'ஒரே பெற்றோர்' என்ற வாழ்வை பிள்ளைகளுக்கு கொடுக்க துவங்கி இருக்கிறார்கள்.

அங்கு சில கீழ் தட்டு மக்களே விவாகாரத்துக்கள் இன்னும் அதிகமாக பெற்றுக் கொண்டிருக்கின்றனர் என்று கூறுகிறார்கள்.

இனம் காப்பதில்,துணையை தேர்வு செய்வதில் பிற உயிரினங்களுக்கு இருக்கும் தெளிவு நமக்கு இருக்கிறதா என்று சுய பரிசோதனை செய்துக் கொள்வோம் ! அறிவென்பது மகிழ்ச்சியை இருக்கும் இடத்திலேயே உருவாக்கிக் கொள்ளுதலிலும் அதற்கேற்ப மாற்றங்களை அழகாய் கொண்டு வருவதிலும் அடங்கும்தானே !

Address

Salem
636002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adv Karthi Salem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share