21/05/2026
பத்து ரூபாய் இயக்கத்தின் தலைவர் யார் ???
தனிமனிதன் யாரையும் பத்து ரூபாய் இயக்க தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒட்டு மொத்த உழவர் பெருமக்களை தொழிலாளர்களை பத்து ரூபாய் இயக்கம் தன்னுடைய வழிகாட்டி கொள்கை தலைவனாக ஏற்றுக் கொண்டுள்ளது.
பத்து ரூபாய் இயக்கத்தில் மூன்று வகையான தலைவர்கள் உள்ளனர்.அவை
1. கொள்கை தலைவர்கள்
2. நிர்வாக தலைவர்கள்
3. அதிகாரமிக்க தலைவர்கள்
1. கொள்கை தலைவர்கள்:-
உலககில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு கொடுக்கும் விவசாயிகளை கடவுளுக்கு நிகராக போற்றுகின்றோம் மானம் காக்க உடை கொடுக்கும் நெசவாளர்களையும் நமக்காக உழைக்கும் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் சட்டமும் நிர்வாகமும் ஏட்டளவில் மதித்தாலும் இந்தியா விடுதலை பெற்று 79 ஆண்டுகள் ஆகியும் உண்மையில் இவர்களுக்கு சுதந்திரத்தின் லாபமோ விடுதலையின் பயனோ சென்றடையாமல் இருப்பதால் கடைகோடி தொழிலாளர்களுக்கும் சம நீதி எளிமைமையாக கிடைக்க வேண்டும் என்ற கொள்கையுடைய பத்து ரூபாய் இயக்கம்
" சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை"
என்ற வள்ளுவன் வாக்கிற்கு இணங்க ஒட்டு மொத்த தொழிலாளர்களின் முதல்வனான உழவர் பெருமக்களை பத்து ரூபாய் இயக்கம் தன்னுடைய தலைவனாக ஏற்றுக் கொன்டுள்ளது.
ஆகவே பத்து ரூபாய் இயக்கத்தின் ஊராட்சி அளவிலான கிளை அமைப்பு, ஊராட்சி ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் தலைவர் என்று ஒரு பதவி கிடையாது.
ஒட்டு மொத்த உழவர் பெருமக்களை தொழிலாளர்களை பத்து ரூபாய் இயக்கம் தன்னுடைய வழிகாட்டி கொள்கை தலைவனாக ஏற்றுக் கொண்டுள்ளது.
2. நிர்வாக தலைவர்கள்
நிர்வாக தலைமை பொறுப்புகளில் பலர் மாநில மாவட்ட கிளை என்று பல மட்டங்களில் இருந்தாலும் அவர்கள் பொறுப்பாளர்கள் மட்டுமே ஆனால் அவர்கள் பத்து ரூபாய் இயக்க தலைவர்கள் இல்லை.
3.அதிகாரமிக்க தலைவர்கள்:-
ஒவ்வொரு உறுப்பினரும் அவருக்கும், அவருடைய ஊருக்கும் அவர் மட்டுமே தலைவர் ஆவார். அவருடன் அவருக்கு இணையாக நாம் அணைவரும் சக தலைவர்களாக இணைந்து செயல்படுவோம். ஒருவருக்கு மேல் மட்டத்திலோ அவருக்கு கீழாகவோ எந்த தலைவரும் கிடையாது.
கிளை கூட்டங்களில் உள்ளூர் தொடர்பாக எடுக்கும் முடிவுகள் மட்டுமே இறுதியானது.
Dr நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர்
வழக்கறிஞர்
மாநில பொதுச் செயலாளர்
பத்து ரூபாய் இயக்கம்
094456 75801