Agmal's VIEW

இன்று தேசத்தில் தலைப்பு செய்தியாக மாறிய இரண்டு தலைவர்கள்..ஒருவர் கபில் சிபல்இரண்டாமவர் பிருந்தாகாரத்தில்லி ஜஹாங்கீர்புரி...
21/04/2022

இன்று தேசத்தில் தலைப்பு செய்தியாக மாறிய இரண்டு தலைவர்கள்..

ஒருவர் கபில் சிபல்
இரண்டாமவர் பிருந்தாகாரத்

தில்லி ஜஹாங்கீர்புரி பகுதியில் இஸ்லாமிய குடியிருப்புகளை ஆக்ரமிப்புகள் என்ற பெயரில் உடைப்பதற்காக திட்டமிட்ட தில்லி மாநகராட்சியின் நாசகார சதி திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்கினார் காங்கிரஸ் தலைவர் கபில் சிபல்...

அந்த தடை உத்தரவு மயிருக்கு சமானம் என்று பிஜேபி ஆளும் தில்லி மாநகராட்சி அமித்ஷாவின் காவல்துறையின் உதவியோடு ஜஹாங்கீர்புரியின் பள்ளிவாசல்கள் உட்பட உடைத்து துவங்கியபோது அந்த புல்டோசர்களின் முன்னால் உச்சநீதிமன்றத்தின் தடை உத்தரவை காட்டி இடிக்க விடமாட்டோம் என்று நெஞ்சுரத்தோடு எதிர்த்து நின்றார் தோழர் பிருந்தா காரத்....

ஆங்கிலேய சர்வாதிகாரத்தை மிஞ்சும் சங்கிபரிவார் சர்வாதிகாரத்தை எதிர்த்து நின்று தோற்கடிக்க எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து நின்றால் சாத்தியமே என்பது தான் இந்த சம்பவங்கள் சொல்லும் செய்தி...

நன்றிகள் கபில் சிபல் மற்றும் பிருந்தா காரத்திற்கு..

சட்டி சட்டியாக சோறு ஆக்கிப் போடுவதை நிறுத்தி விட்டு... சமுதாய மக்களுக்கு கல்வியைவழங்க ஜமாஅத்துகள் முன் வர வேண்டும்.முஸ்ல...
06/04/2022

சட்டி சட்டியாக சோறு ஆக்கிப் போடுவதை நிறுத்தி விட்டு... சமுதாய மக்களுக்கு கல்வியை
வழங்க ஜமாஅத்துகள் முன் வர வேண்டும்.

முஸ்லிம் சமுதாயத்திடம் உள்ள செல்வம்,
நல்ல தரமான உயர் கல்வி நிறுவனங்களை
உருவாக்குவதற்கு பயன்படட்டும்,

யாரையும் அண்டிப்பிழைக்க வேண்டிய
அவசியம் இல்லை,

நம்மை விட எண்ணிக்கையில்
குறைந்த ஒரு சிறுபான்மை சமுதாயம்
எப்படி சொந்தக் காலில்
தலை நிமிர்ந்து நிற்க முடிகிறது?

இட ஒதுக்கீடு கோரவில்லை,
அரசு வேலைக்காக காத்திருக்கவில்லை;

கொடி பிடிக்கவில்லை,
கோஷங்கள் எழுப்பவில்லை,

பொது வெளியில் இறங்கி
ஆர்ப்பாட்டங்கள் நடத்தவில்லை,

சூடான விவாதங்களில் பங்கெடுப்பதில்லை
அரசியல் கட்சிகள் இல்லை,
வாக்குகள் சேகரிப்பதில்லை

தங்களுக்குத் தேவையான வேலை வாய்ப்பை
தாங்களே உருவாக்கிக் கொள்கிறார்கள்,

கல்வி நிறுவனங்களை கையில் வைத்திருப்பதால்
கவலை இல்லாமல் வாழ்கின்றனர்,

தர்காக்களில் கொடி ஏற்றுவதையும்
சட்டி சட்டியாக சோறு ஆக்கிப் போடுவதையும்
நிறுத்தி விட்டு ,

வசதியுள்ள ஜமாஅத் துகள்
சமுதாய மக்களுக்கு உயர் கல்வியை
வழங்க முன் வர வேண்டும்,

கோடி கோடியாக கொட்டிக்கிடக்கும்
சொத்துக்களை கல்விக்காக பயன்படுத்த வேண்டும்,

நமது சமுதாயத்தில்
சோற்றுக்கு வழியில்லாதவர்களை விட
கல்விக்கு வழியில்லாதவர்களே அதிகம்.

M.அக்மல் கசாலி BE.,BL.,
வழக்கறிஞர்
திருநெல்வேலி

முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் பாரபட்சமின்றி விடுதலையை வலியுறுத்திநெல்லை மேலப்பாளையத்தில் எ...
26/03/2022

முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் பாரபட்சமின்றி விடுதலையை வலியுறுத்தி
நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்திய மாபெரும் ஒற்றைக் கோரிக்கை ஆர்ப்பாட்டம்!

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படியும், அரசமைப்பு சட்டப்பிரிவு 161ன் படியும், 10 ஆண்டுகள் கழித்த முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் கருணையோடு உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக, நெல்லை மேலப்பாளையத்தில் இன்று (மார்ச்.26) மாபெரும் ஒற்றைக் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென்மண்டல நிர்வாகி தமிழினியன், பச்சைத் தமிழகம் கட்சியின் நிறுவனர் சுப.உதயகுமார், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் வழக்கறிஞர் பசும்பொன் பண்டியன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி உரை நிகழ்த்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் உரை நிகழ்த்திய எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக், ஆயுள் சிறைவாசிகள் விடுதலையைப் பொறுத்தவரை தற்போது சட்டத்தின் தடையோ அல்லது நீதிமன்றத்தின் தடையோ எதுவும் இல்லாத சூழலில், முழுக்க முழுக்க அது தமிழக அரசின் கைகளின் மட்டுமே உள்ள விஷயமாகும் என்பதால், கடந்த காலங்களைப் போலல்லாமல், பாரபட்சம் பாராமல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை கழித்த அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும். மற்ற கைதிகளைப் போன்று கருணை அடிப்படையில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கும், 7 தமிழர்களுக்கும் விடுதலையை தமிழக அரசு சாத்தியமாக்க வேண்டும். அதன்படி வெளியிடப்பட்ட சிறைவாசிகள் விடுதலை தொடர்பான தமிழக அரசின் அரசாணையை திரும்பப்பெற்று, பாரபட்சம் இல்லாத புதிய அரசாணையை வெளியிட்டு, அனைத்து சிறைவாசிகளையும் தமிழக அரசு விரைவாக விடுதலை செய்ய வேண்டும். திமுக அரசு மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள முஸ்லிம் சமூகத்தை தொடர் ஏமாற்றத்திற்கு ஆளாக்க கூடாது என தெரிவித்தார்.

மேலும், ஆட்சியமைத்து 9 மாதங்கள் ஆகியும், ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் கமிஷன் அமைப்பதை தாண்டி, அரசாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்த அவர், சமீபத்தில் பேரறிவாளன் ஜாமீன் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டும், அமைச்சரவை தீர்மானத்தையும் கருத்தில் கொண்டும் தான் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு, தமிழக சிறைகளில் நீண்ட நாள் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் ஆயுள் சிறைக் கைதிகள் உள்ளிட்ட அனைத்து ஆயுள் சிறைக் கைதிகளுக்கும் ஜாமீன் வழங்குவதோடு, அவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய, கமிஷன்களை அமைப்பதை தாண்டி, அமைச்சரவை தீர்மானத்தை இயற்றவும் முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழக முதல்வர் இந்த கோரிக்கையின் நியாயங்களை உணர்ந்து பாரபட்சமின்றி அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

சகோதரர் திருமாவளவன் அவர்க்ளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ....!
22/03/2022

சகோதரர் திருமாவளவன் அவர்க்ளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ....!

*இந்தியாவில் நோயாளிகளின் உரிமைகள்(Tamil)**Patients' RIGHTS in India(English)**புதிய புத்தகம்*========================நோய...
21/03/2022

*இந்தியாவில் நோயாளிகளின் உரிமைகள்(Tamil)*
*Patients' RIGHTS in India(English)*
*புதிய புத்தகம்*
========================
நோயாளிகளுக்கு இவ்வளவு உரிமைகளா என ஆச்சரியப்படவைக்கும் அரிய புத்தகம். ஒவ்வொருவர் வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய பொக்கிஷம்.

தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக செல்லும், மருந்துக்கடைகளில் மருந்து வாங்கச் செல்லும், மருத்துவ பரிசோதனைகளுக்கு செல்லும், மருத்துவ ஆய்வுகளுக்கு தங்களை அர்ப்பணித்துக்கொள்ளும், மருத்துவராக, வழக்கறிஞராக, செவிலியராக பணிபுரியும் மற்றும் பொதுமக்கள் ஒவ்வொருவரும் வாங்கி, படித்து, தங்கள் உரிமைகளை தெரிந்து பாதுகாத்து பயனடய இந்த நூல் ஒரு வழிகாட்டி ஆகும்.

X###xx

இந்த நூலை நோயாளர்கள் தங்களுக்கு உள்ள உரிமைகளை அறிந்து கொள்ள உதவும் ஓர் திறவுகோல் எனலாம். அதே நேரத்தில் மருத்துவர்கள், மருத்துவமனை நிருவாகம், மருத்துவ தொழில் ஆகியவற்றுக்கு இந்த நூல் தம்மை இன்னும் செம்மைப்படுத்திக் கொள்ள உதவும் ஓர் உரைகல் எனலாம்.அனைவர் வீட்டிலும், மருத்துவமனையிலும் இருக்க வேண்டிய ஓர் அற்புத நூல்.

- வழக்குரைஞர் பி.ஆர்.ஜெயராஜன்
Shri Pathi Rajan Publishers

இந்தியாவில் நோயாளிகளின் உரிமைகள் புத்தகத்தில் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) விவரிக்கப்பட்டுள்ளநோயாளிகளின் உரிமைகள்:

> தகவல் தெரிந்துகொள்ளும் உரிமை

> மருத்துவப்பதிவு மற்றும் மருத்துவ அறிக்கைகளை பெறும் உரிமை

> அவசர சிகிச்சைக்கான உரிமை

> பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சைக்கு நோயாளியிடம் ஒப்புகை பெறும் உரிமை

> ரகசியம் காத்தல், கண்ணியம், தனியுரிமை காத்தலுக்கான உரிமை

> இரண்டாவது ஆலோசனை பெறுவதற்கான உரிமை

> கட்டணங்களில் வெளிப்படைத் தன்மைக்கான உரிமை

> பாகுபாடில்லா சிகிச்சைக்கான உரிமை

> பாதுகாப்பான மற்றும் தரமான சிகிச்சைக்கான உரிமை

> மாற்று சிகிச்சை முறையை நாடுவதற்கான உரிமை

> மருந்து வாங்கும் இடத்தை தேர்வு செய்வதற்கான உரிமை

> பரிந்துரை மற்றும் இடமாறுதலுக்கான உரிமை

> மருத்துவ ஆய்வுகளின்போது பாதுகாப்பு பெறும் உரிமை

> நோயாளியின் விருப்பத்தின்பேரில் வெளியேறும் உரிமை

> நோயாளியின் ஆரோக்கிய கல்விக்கான உரிமை

> புகார் தெரிவித்தல் மற்றும் மேல்முறையீட்டிற்கான உரிமை

> இறந்த நோயாளிகளின் உரிமைகள்

> மருத்துவ கவனக்குறைவால் மரணம் ஏற்பட்டிருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால் செய்யவேண்டியவை

> நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை

> அரசின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன்பெறும் உரிமை

> கொரோனா ஊரடங்கு காலத்தில் நோயாளிகளுக்கான உரிமைகள்

>நோயாளிகளின் உரிமைகளுக்கான மக்கள்

இயக்கம்

> நோயாளிகளின் கடமைகள்

> நோயாளிகளுக்கான சரிபார்ப்பு பட்டியல்

> சிறைவாசிகளின் ஆரோக்கிய உரிமைகள்

> தடுப்பூசி செலுத்திய பின் ஏற்படும் பாதகமான எதிர்வினைகள் (AEFI)



> மருத்துவ அறிக்கைகளை பெறுவதற்கான மாதிரி விண்ணப்பம்

> மருத்துவ கோப்பின் மாதிரி



> தகவல் பெறும் உரிமைச்சட்ட மாதிரி விண்ணப்பம்

> புகார் தெரிவிக்கவேண்டிய முகவரிகள்

பதிப்பாளர்:
Civilian Voice Publishers

Tamil book MRP Rs.290/-
Discount price Rs.230/-

English book MRP Rs. 315/-
Discount price Rs.252/-
Shipping free anywhere in India

20 சதவீத டிஸ்கவுண்ட் மற்றும் இலவச தபால் செலவுடன் வாங்க...

Gpay
phonePe
Paytm
BHIM
WhatsApp pay
ஆகியவற்றின் மூலம் 9500933864 என்ற எண்ணிற்கு
பணம் செலுத்திவிட்டு கீழ்க்கண்ட வாட்சப் எண்ணிற்கு
பணம் செலுத்திய விவரத்துடன் தங்கள் பெயர் முகவரி ஆகியவற்றை அனுப்பவும்.
WhatsApp 9500933864

Website http://civilianvoice.in

E-mail : [email protected]

அமேசானில் வாங்க...

இந்தியாவில் நோயாளிகளின் உரிமைகள் https://www.amazon.in/dp/9355934440/ref=cm_sw_r_apan_glt_i_S47YZ9Y5D0SYK9C1CC2H

flipkart ல் வாங்க....

https://dl.flipkart.com/dl/patients-rights-india/p/itm5ff4b68545b49?pid=9789354939112&cmpid=product.share.pp&_refId=PP.846c3740-795b-47d6-b5f8-377c8ba2c605.9789354939112&_appId=CL

தமிழ் நாட்டில் ஹிஜாப் பிரச்சனை கிடையாது தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்....! #நன்றி விரைவில் அரசாணை எதிர...
20/03/2022

தமிழ் நாட்டில் ஹிஜாப் பிரச்சனை கிடையாது
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்....!

#நன்றி விரைவில் அரசாணை எதிர் பார்க்கிறோம்

| |

எத்தனை வகையான Smart Ration Card உள்ளது? அதற்கு என்ன என்ன பொருள்கள் வழங்கப்படும் என்பதை அறிந்து கொள்ள
14/03/2022

எத்தனை வகையான Smart Ration Card உள்ளது? அதற்கு என்ன என்ன பொருள்கள் வழங்கப்படும் என்பதை அறிந்து கொள்ள

#சட்டம் , #சட்டம்உங்கள்பார்வைக்கு, #சட்டம்அனைவருக்கும்பொதுவானது, , , , , , , , , , ...

போக்குவரத்து விதிமீறல்களுக்கு தற்போது அமலில் உள்ள அபராதங்கள் (Fines) பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?
14/03/2022

போக்குவரத்து விதிமீறல்களுக்கு தற்போது அமலில் உள்ள அபராதங்கள் (Fines) பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

#சட்டம் , #சட்டம்உங்கள்பார்வைக்கு, #சட்டம்அனைவருக்கும்பொதுவானது, , , , , , , , , , ...

ரேசன் கடைகளில் நடக்கும்  குற்றங்கள், பித்தலாட்டங்கள் பற்றி எவ்வாறு,யாரிடம்  புகார் அளிப்பது?
14/03/2022

ரேசன் கடைகளில் நடக்கும் குற்றங்கள், பித்தலாட்டங்கள் பற்றி எவ்வாறு,யாரிடம் புகார் அளிப்பது?

#சட்டம் , #சட்டம்உங்கள்பார்வைக்கு, #சட்டம்அனைவருக்கும்பொதுவானது, , , , , , , , , , ...

https://youtu.be/JSY5SVXwFcs
07/03/2022

https://youtu.be/JSY5SVXwFcs

Helmet(தலைக்கவசம்) போடாமல் வாகனம் ஓட்டலாமா?மது அருந்திவிட்டு(Drunken drive), வாகனம் ஓட்டுவது குற்றமா ?,ஒரு குற்றத்திற்கு அதே ....

பட்டம் பறக்க விட்டால் குற்றமா?,கீழே இருந்து பொருள்கள் எடுத்தால் குற்றமா?வினோதமான சட்டங்கள் Part-1
05/03/2022

பட்டம் பறக்க விட்டால் குற்றமா?,கீழே இருந்து பொருள்கள் எடுத்தால் குற்றமா?வினோதமான சட்டங்கள் Part-1

05/03/2022

ஒருவரை கைது செய்தால் காவல்துறை என்ன செய்ய வேண்டும்

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

Address

201-C/1, Trivandrum Road, Samathanapuram
Palayamkottai
627002

Telephone

+919994755501

Website

Alerts

Be the first to know and let us send you an email when Agmal's VIEW posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Agmal's VIEW:

Share