சென்னை ரியல் எஸ்டேட் - Chennai real estate

  • Home
  • India
  • Chennai
  • சென்னை ரியல் எஸ்டேட் - Chennai real estate

சென்னை ரியல் எஸ்டேட் - Chennai real estate Chennai No 1 Property Portal. Provides in-depth information on buying, selling and renting out properties in Chennai. POST YOUR ADS HERE FREE OF COST.

WHENEVER YOU THINK OF REAL ESTATE INVESTMENTS, TEMPORARY AS WELL AS PERMANENT, WE ARE ALWAYS AT YOUR SERVICE TO THE FULLEST EXTENT.

ஒரு மனிதன் அவன் வாழ்நாளில் கனவிலும், நினைவிலும் நினைப்பது தனக்கென்று ஒரு சொந்த வீடு வேண்டும் என்பதைத்தான்.அதற்காக மனிதன் பல வழிகளில் முயற்சிக்கிறான்,கடைசியாக அவன் நாடுவது ரியல் எஸ்டேட்.தற்போது பெருகிவரும் தொழில்களில் இவை முக்கிய பங்கு வகிக்கிறது.இதற்கு சிக்கலாக இருப்

பது எகிறிக் கிடக்கும் ரியல் எஸ்டேட் விலை,மற்றொன்று ரியல் எஸ்டேட் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவது.அதாவது நில மோசடி செய்வது.அதனால் நாம் வீடு அல்லது நிலம் வாங்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,அதற்கான வழிமுறைகளை நாம் முறையாக பின்பற்ற வேண்டும்.

இதற்காக தற்போது பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் இணையதளங்கள் உள்ளன.அதில் சிறந்த நிறுவனத்தை தேர்வு செய்வது நம் கையில் தான் உள்ளது.இதற்கு ஒரு சரியான இணையதளம்.

15/10/2018

New .....

27/09/2018
ஃப்ளாட் சதுர அடி விலை: இதை மட்டும் கவனித்தால் போதுமா?சங்கர ஸ்ரீனிவாசன், சிஓஓ, realtycompass.com அடுக்குமாடிக் குடியிருப்...
28/02/2016

ஃப்ளாட் சதுர அடி விலை: இதை மட்டும் கவனித்தால் போதுமா?

சங்கர ஸ்ரீனிவாசன், சிஓஓ, realtycompass.com

அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்குபவர்களில் பெரும்பான்மையானோர், ஒரு சதுர அடிக்கான விலை குறைவாக இருந்தால், வீட்டின் விலை மலிவாக இருப்பதாக நினைக்கிறார்கள். அப்படி இருந்தால் தாராளமாக வாங்கலாம். அதனால் லாபமே கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், பல சமயங்களில் இந்த நினைப்பு தவறாகவே இருக்கிறது.
ஒரு சதுர அடிக்கான விலையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. வீடு வாங்குபவர்கள் வீட்டின் உரிமையைப் பெறும் தேதி, நிலத்தின் பிரிக்கப்படாத பங்கு (U.D.S), வழங்கப்படுகிற வசதிகள் மற்றும் கட்டுமானத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், பொதுப் பயன்பாட்டு இடங்கள் உள்ளிட்டவை ஒரு சதுர அடிக்கான விலையை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும்.
'புராஜெக்ட் ஏ’ என்பது 4 தளங்களில் சம அளவுள்ள 73 அபார்ட்மென்ட்களைக் கொண்டது என்று வைத்துக்கொள்வோம். இந்தத் திட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 89,000 சதுர அடி. கட்டுமானப் பரப்பளவு (பில்ட்-அப் ஏரியா) 76,650 சதுர அடி மற்றும் மொத்த மேற்பரப்பளவு (சூப்பர் பில்ட்-அப் ஏரியா) 1,02,200 சதுர அடி.

இந்தத் திட்டத்தில் உள்ள அடுக்குமாடி வீடுகள் குடியேறுவதற்குத் தயாராக உள்ளன. இதில் டென்னிஸ் விளையாட்டு அரங்கம், மின்சார பேக்- அப் வசதி, ஜிம் போன்றவை உள்ளன. இந்தத் திட்டத்தில் வீட்டை வாங்க வேண்டுமெனில், ஒரு சதுர அடிக்கான விலை ரூ.6,300-ஐ சொல்கிறார்கள்.
இதன் அருகே உள்ள மற்றொரு திட்டம் 'புராஜெக்ட் பி’ இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இதில் 3 தளங்களுடன், சம அளவுள்ள 58 அபார்ட்மென்ட்கள் கட்டப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 46,400 சதுர அடி. கட்டுமானப் பரப்பு 58,000 சதுர அடி, சூப்பர் பில்ட்-அப் 72,500 சதுர அடி. இது மார்ச் 2017-ல் முடிவடைந்து உரிமை ஒப்படைக்கப்படும். இதில் நீச்சல் குளம், மின்சார பேக்-அப் வசதி ஆகியவை உள்ளன. இதில் வீடு வாங்க வேண்டுமெனில் ஒரு சதுர அடிக்கான விலை ரூ.5,700 என்கிறார்கள்.
இந்த அமைவிடத்தில் தோராயமான நில மதிப்பு ஒரு சதுர அடிக்கு ரூ.3,000. இப்போது நாம் இந்தத் திட்டங்களின் கார்பெட் பரப்பளவின் அடிப்படையில் ஒரு சதுர அடிக்கு என்ன உண்மையான விலையை வழங்குகிறார்கள் எனப் பார்ப்போம். (பார்க்க அடுத்த பக்கத்தில் உள்ள அட்டவணை)
சதுர அடி விலையானது கீழ்க்கண்ட விதங்களில் சரிசெய்யப்பட்டுள்ளது. எப்படி சரிசெய்யப்பட்டுள்ளது என்பதைக் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.
வீட்டின் உரிமையைப் பெறும் நாள்!
வீட்டின் உரிமையைப் பெறும் தேதியில் உள்ள வித்தியாசமானது ஒரு சதுர அடிக்கான விலையில் சரிசெய்யப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையைப் பெறும் தேதியில் தாமதம் ஏற்பட்டால், சதுர அடி விலையை அதிகரிக்க வேண்டும். ஏனெனில், வாடகை, இஎம்ஐ மீதான வட்டி, குறித்த காலத்துக்குள் முடிவடையாத திட்டத்துக்கான ரிஸ்குகள் ஆகியவை ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவேதான் தற்போதைய தேதியிலிருந்து ஒவ்வொரு மாதமும் தாமதமாவதற்கும் ஒரு சதுர அடிக்கான விலையில் 1 சதவிகிதம் அதிகரிக்கப்படுகிறது.
புராஜெக்ட் ஏ உடனடியாகக் குடியேறும் வகையில் உள்ளது. ஆகவே, ஒரு சதுர அடிக்கான விலையை சரிசெய்யத் தேவையில்லை. புராஜெக்ட் பி மார்ச் 2017-ல் (34 மாதங்கள்) ஒப்படைக்கப்படவிருப்பதால் ஒரு சதுர அடிக்கான விலையில் ரூ.1,938 உயர்த்தப்பட்டுள்ளது.
நிலத்தின் பிரிக்கப்படாதப் பங்கு!
பல அடுக்குமாடிக் குடியிருப்பு, நிலத்தில் கட்டப்படுவதால், தனிநபருக்கு என எந்த நிலப்பகுதியையும் இனம் காணமுடியாது. ஆனால், அவரது அபார்ட்மென்ட் பரப்பளவுக்கு விகிதாசார அடிப்படையில் நிலப்பங்கினைப் பெறமுடியும். இதனை 'யூடிஎஸ்’ என்கிறார்கள். இது சதுர அடி பரப்பு அதிகமாக அதிகமாக அவருக்கு அதிக பங்கு நிலம் கிடைக்கும். நிலப்பரப்பு விலை உயரும். கட்டட மதிப்பு குறையும். திட்டம் ஏ-ஐ திட்டம் பி-வுடன் ஒப்பிடும்போது, சூப்பர் பில்ட்-அப் ஏரியா பரப்பில் அதிக யூடிஎஸ் கிடைக்கும். ஆகவே, திட்டம் பி-ல் நிலப்பரப்புக்கான சூப்பர் பில்ட்-அப் ஏரியாவின் ஒரு சதுர அடி விலையில் ரூ.242 உயர்த்தப்பட்டுள்ளது.

கார்பெட் ஏரியா!
கார்பெட் ஏரியா என்பது வீட்டில் நாம் நடமாடும் அல்லது புழங்கக்கூடிய பகுதி. அடுத்து, பிளிந்த் ஏரியா. இது கார்பெட் ஏரியா மற்றும் சுவர்கள் சேர்ந்ததாகும். இந்த பிளிந்த் ஏரியா என்பது கார்பெட் ஏரியா + 10% ஆகும். சூப்பர் பில்ட்-அப் ஏரியாவில் கார்பெட் ஏரியா + பொதுப் பயன்பாட்டு இடங்கள் (மாடிப்படி, லிஃப்ட், தாழ்வாரம், நுழைவாயில்) ஆகியவை அடங்கும். இது சாதாரணமாக கட்டுமானப் பரப்பளவு + 10 சதவிகிதமாக இருக்கும். சூப்பர் கட்டுமான பரப்பளவில் (ஒரு சதுர அடிக்கான விலை இதற்குப் பொருந்தும்) கார்பெட் பரப்பளவானது சுமார் 75% இருக்கும்.
சூப்பர் பில்ட்-அப் பரப்பளவில் கார்பெட் பரப்பளவு அதிக சதவிகிதம் இருந்தால், வீடு வாங்குபவருக்கு சிறந்தது. ஏனெனில், அவர் செலவிடும் பணத்துக்கு அவருக்கு அதிக புழங்குமிடம் (வாழ்விடம்) கிடைக்கிறது.

இறுதியாக, சூப்பர் கட்டுமான பரப்புக்கான ஒரு சதுர அடி விலை கார்பெட் பரப்பளவுக்கான ஒரு சதுர அடி விலையாக மாற்றப்படுகிறது. ஏனெனில், வீடு வாங்குபவர் அங்குதான் வசிக்கப்போகிறார். இந்த விதத்தில் திட்டம் ஏ-க்கான கார்பெட் பரப்பானது ஒரு சதுர அடிக்கு ரூ.8,400 எனவும், திட்டம் பி-ல் சதுர அடி விலை ரூ.8,826 ஆகவும் இருக்கிறது.
இந்த இரு திட்டங்களுக்கான ஒரு சதுர அடிக்கான விலையை ஒப்பிடும்போது மேற்கண்டவை தவிர, வீடு வாங்குபவர்கள் கட்டுமான நிறுவனங்கள் வழங்கும் இதர வசதிகளையும், கட்டுமான பொருட்களின் தரம் மற்றும் எந்த அமைவிடத்தில் இந்தத் திட்டம் அமையப்போகிறது என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். மேலும், மேற்கண்ட கணக்கீட்டுக்கு சாத்தியமாகக்கூடிய உரிமையைப் பெறும் தேதியைக் கருத்தில்கொள்ள வேண்டுமே தவிர, அதற்காக கட்டுமான நிறுவனங்கள் அறிவிக்கும் தேதியை அல்ல.

இந்தக் கணக்கீட்டின்படி, புராஜெக்ட் ஏ-ல் ஒரு சதுர அடி அடுக்குமாடிக் குடியிருப்பு விலை ரூ.8,400 ஆகவும், புராஜெக்ட் பி-ல் இது 8,826-ஆகவும் உள்ளது. அந்த வகையில் புராஜெக்ட் ஏ-ல் பில்டர் சொன்ன விலை 6,300 ரூபாய், புராஜெக்ட் பி-ல் பில்டர் சொன்ன விலை 5,700 ரூபாய். இங்கே அதிகமாக சதுர அடி சொன்ன புராஜெக்ட்-ஏ-ல் வீடு வாங்குவதுதான் லாபகரமாக இருக்கும்.

முன்னணியில் 50 இடங்கள்... அதில் மூன்று சென்னை ஏரியா!இந்திய அளவில் வீடுகள் விற்பனை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்...
28/02/2016

முன்னணியில் 50 இடங்கள்... அதில் மூன்று சென்னை ஏரியா!

இந்திய அளவில் வீடுகள் விற்பனை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள, மக்கான் டாட் காம் (
www.makaan.com) என்கிற ரியல் எஸ்டேட் விற்பனை வலைதளம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வின் படி இந்திய அளவில் மக்கள் அதிகம் விரும்பும் முதல் 50 இடங்களை பட்டியலிட்டிருக்கிறது. இந்த பட்டியலில் சென்னையின் தென் பகுதியைச் சேர்ந்த துரைப்பாக்கம், மேற்கு பகுதியைச் சேர்ந்த போரூர் மற்றும் மற்றொரு தென்பகுதியான பல்லாவரம் ஆகிய மூன்று ஏரியாக்களும் இடம்பெற்றிருக்கின்றன. மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரூ, குர்கான், நொய்டா, பூனே, அகமதாபாத், ஹைதராபாத் போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

முன்னணியில் உள்ள 50 இடங்களில் நொய்டா முதல் இடத்தையும், இதற்கு அடுத்தடுத்த இடங்களை மும்பையின் செம்பூர், பாந்த்ரா ஆகிய பகுதிகளும் பிடித்திருக்கின்றன. இப்ப்டியாக ஆறாவது இடத்தில் சென்னையின் துரைப்பாக்கம், போரூர் (28-வது இடம்) மற்றும் 35-வது இடத்தில் பல்லாவரம் ஆகிய ஏரியக்கள் இடம் பிடித்திருக்கின்றன.

வீட்டுக் கடன்... சுலபமாக திரும்பச் செலுத்த 3 வழிகள்!லட்சக்கணக்கான தொகையை மொத்தமாக புரட்டி வீடு வாங்க முடியாது என்பதாலும்...
26/01/2016

வீட்டுக் கடன்... சுலபமாக திரும்பச் செலுத்த 3 வழிகள்!

லட்சக்கணக்கான தொகையை மொத்தமாக புரட்டி வீடு வாங்க முடியாது என்பதாலும், திரும்பக் கட்டும் மாதத் தவணைக்கு வட்டி மற்றும் அசலில் வரிச் சலுகை கிடைக்கிறது என்பதாலும் பலர் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்கவே பலரும் விரும்புகிறார்கள்.

இந்தியாவில் 15, ஆண்டுகள், 20 ஆண்டுகளுக்கு என வீட்டுக் கடன் வாங்கி இருந்தாலும் அதனை சராசரியாக எட்டு ஆண்டுகளில் கட்டி முடித்துவிடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வீட்டுக் கடனை தேர்ந்தெடுத்த காலம் வரை கட்டினால், கட்டும் வட்டி அதிகமாக இருக்கும். இதனை ஓர் உதாரணம் மூலம் பார்க்கலாம்.

* கடன் தொகை ரூ. 25 லட்சம்

* திரும்பக் கட்டும் காலம் 30 ஆண்டுகள் (360 மாதங்கள்)

* வட்டி: 10%

* மாதத் தவணை ரூ. 21,939

இங்கே வாங்கும் கடனோ ரூ.25 லட்சம் தான். ஆனால், அதற்கு கட்டும் வட்டியோ ஏறக்குறைய ரூ.54 லட்சம். (பார்க்க: அட்டவணை 1)

இப்படி கடைசி வரைக்கும் கடனைக் கட்டுவதற்கு பதில் சில உத்திகளைப் பின்பற்றி வட்டியைக் கணிசமாக மிச்சப்படுத்தலாம். அவை பற்றி...

(1) மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை அதிகரித்துக் கட்டுதல்!

மாதத் தவணை ரூ.21,939 என்பதற்கு பதில் கூடுதலாக மாதம் ரூ.3,061 அதிகரித்து ரூ.25,000 ஆக கட்டி வந்தால், வீட்டுக் கடன் 360 மாதங்களுக்கு பதிலாக 216-வது மாதத்திலே முடிந்துவிடும். இங்கே வட்டிக்காக செல்லும் தொகை ரூ.29 லட்சம்தான். அதாவது, மாதம் ரூ.3,061 அதிகரித்து கட்டுவதன் மூலம் வட்டியில் ரூ.25 லட்சம் மிச்சமாகும்.(பார்க்க : அட்டவணை 2)

(2) ஆண்டு தோறும் தவணை அதிகரித்து கட்டுதல்!

முதல் ஆண்டு மட்டும் ஆரம்பத்தில் கட்டும் வீட்டுக் கடனுக்கு உரிய தவணையை கட்டி விட்டு, அதன்பிறகு ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை அதிகரித்து வரும்பட்சத்தில் வட்டி கணிசமாக மிச்சமாகும். அதாவது, முதல் ஆண்டு தவிர, அடுத்து வரும் ஆண்டுகளில் தவணையை மாதம் ரூ.5,000 வீதம் அதிகரித்து கட்டி வந்தால், வீட்டுக் கடன் 360 மாதங்களுக்கு பதில் 103 மாதங்களிலேயே முடிந்துவிடும். இங்கே வட்டிக்கு செல்லும் தொகை சுமார் ரூ.15 லட்சம்தான். வட்டியில் சுமார் ரூ.38.5 லட்சம் மிச்சமாகும். (பார்க்க : அட்டவணை 3)

(3) ஆண்டுதோறும் கூடுதல் தொகை கட்டுதல்!

வீட்டுக் கடன் தவணை தொகையை அப்படியே கட்டிவரும் நிலையில் இரண்டாம் ஆண்டு முதல் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை அதிகரித்து வருவது மூலமும் வீட்டுக் கடனுக்கான வட்டியில் கணிசமாக ஒரு தொகையை மிச்சப்படுத்த முடியும். உதாரணமாக ஒருவர், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கூடுதலாக அசலைக் கட்டி வருகிறார் என்றால், அவரது கடன் 159-வது மாதத்தில் முடிந்துவிடும். இங்கே வட்டிக்கு செல்லும் தொகை ரூ.19.21 லட்சம்தான். வட்டியில் சுமார் ரூ.34.77 லட்சம் மிச்சமாகும். (பார்க்க : அட்டவணை 4)

உங்களுக்கு ஏற்ற வழிமுறைகளை பின்பற்றி வீட்டுக் கடனை விரைந்து அடைக்க முயலுங்கள்!

தமிழ் நாடு சென்னையில், நரிகொறவர் எனும் பழங்குடியினர் சமுதாயத்தினருக்கு மறுகுடியமர்விற்க்காக, தமிழக அரசு வீடு கட்டி கொடுத...
04/06/2015

தமிழ் நாடு சென்னையில், நரிகொறவர் எனும் பழங்குடியினர் சமுதாயத்தினருக்கு மறுகுடியமர்விற்க்காக, தமிழக அரசு வீடு கட்டி கொடுத்திட வேண்டி, இவ்விண்ணப்பத்தை கையொப்பமிட்டும் பகிர்ந்தும் உதவிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம் !! நன்றி !!

https://www.change.org/p/the-district-collector-chennai-tamil-nadu-the-managing-director-tamil-nadu-slum-clearance-board-the-secretary-to-government-housing-and-urban-development-department-the-chief-secretary-to-go-to-receive-the-permission-from-state-government-to-en

To, Date: 11 – Mar – 2015 The Hon’ble District Collector, M. Singaravelar Maaligai, 62, Rajaji Salai, Chennai - 600001, Tamil Nadu. Phone : 044-25228025, Fax : 044-25228025 Email: < [email protected]

ஃப்ளாட் சதுர அடி விலை: இதை மட்டும் கவனித்தால் போதுமா?அடுக்குமாடிக் குடியிருப்பு  வீடு வாங்குபவர்களில் பெரும்பான்மையானோர்...
22/02/2015

ஃப்ளாட் சதுர அடி விலை: இதை மட்டும் கவனித்தால் போதுமா?

அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்குபவர்களில் பெரும்பான்மையானோர், ஒரு சதுர அடிக்கான விலை குறைவாக இருந்தால், வீட்டின் விலை மலிவாக இருப்பதாக நினைக்கிறார்கள். அப்படி இருந்தால் தாராளமாக வாங்கலாம். அதனால் லாபமே கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், பல சமயங்களில் இந்த நினைப்பு தவறாகவே இருக்கிறது.
ஒரு சதுர அடிக்கான விலையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. வீடு வாங்குபவர்கள் வீட்டின் உரிமையைப் பெறும் தேதி, நிலத்தின் பிரிக்கப்படாத பங்கு (U.D.S), வழங்கப்படுகிற வசதிகள் மற்றும் கட்டுமானத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், பொதுப் பயன்பாட்டு இடங்கள் உள்ளிட்டவை ஒரு சதுர அடிக்கான விலையை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும்.
'புராஜெக்ட் ஏ’ என்பது 4 தளங்களில் சம அளவுள்ள 73 அபார்ட்மென்ட்களைக் கொண்டது என்று வைத்துக்கொள்வோம். இந்தத் திட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 89,000 சதுர அடி. கட்டுமானப் பரப்பளவு (பில்ட்-அப் ஏரியா) 76,650 சதுர அடி மற்றும் மொத்த மேற்பரப்பளவு (சூப்பர் பில்ட்-அப் ஏரியா) 1,02,200 சதுர அடி.

இந்தத் திட்டத்தில் உள்ள அடுக்குமாடி வீடுகள் குடியேறுவதற்குத் தயாராக உள்ளன. இதில் டென்னிஸ் விளையாட்டு அரங்கம், மின்சார பேக்- அப் வசதி, ஜிம் போன்றவை உள்ளன. இந்தத் திட்டத்தில் வீட்டை வாங்க வேண்டுமெனில், ஒரு சதுர அடிக்கான விலை ரூ.6,300-ஐ சொல்கிறார்கள்.

இதன் அருகே உள்ள மற்றொரு திட்டம் 'புராஜெக்ட் பி’ இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இதில் 3 தளங்களுடன், சம அளவுள்ள 58 அபார்ட்மென்ட்கள் கட்டப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 46,400 சதுர அடி. கட்டுமானப் பரப்பு 58,000 சதுர அடி, சூப்பர் பில்ட்-அப் 72,500 சதுர அடி. இது மார்ச் 2017-ல் முடிவடைந்து உரிமை ஒப்படைக்கப்படும். இதில் நீச்சல் குளம், மின்சார பேக்-அப் வசதி ஆகியவை உள்ளன. இதில் வீடு வாங்க வேண்டுமெனில் ஒரு சதுர அடிக்கான விலை ரூ.5,700 என்கிறார்கள்.

இந்த அமைவிடத்தில் தோராயமான நில மதிப்பு ஒரு சதுர அடிக்கு ரூ.3,000. இப்போது நாம் இந்தத் திட்டங்களின் கார்பெட் பரப்பளவின் அடிப்படையில் ஒரு சதுர அடிக்கு என்ன உண்மையான விலையை வழங்குகிறார்கள் எனப் பார்ப்போம். (பார்க்க அட்டவணை)
சதுர அடி விலையானது கீழ்க்கண்ட விதங்களில் சரிசெய்யப்பட்டுள்ளது. எப்படி சரிசெய்யப்பட்டுள்ளது என்பதைக் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.
வீட்டின் உரிமையைப் பெறும் நாள்!
வீட்டின் உரிமையைப் பெறும் தேதியில் உள்ள வித்தியாசமானது ஒரு சதுர அடிக்கான விலையில் சரிசெய்யப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையைப் பெறும் தேதியில் தாமதம் ஏற்பட்டால், சதுர அடி விலையை அதிகரிக்க வேண்டும். ஏனெனில், வாடகை, இஎம்ஐ மீதான வட்டி, குறித்த காலத்துக்குள் முடிவடையாத திட்டத்துக்கான ரிஸ்குகள் ஆகியவை ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவேதான் தற்போதைய தேதியிலிருந்து ஒவ்வொரு மாதமும் தாமதமாவதற்கும் ஒரு சதுர அடிக்கான விலையில் 1 சதவிகிதம் அதிகரிக்கப்படுகிறது.

புராஜெக்ட் ஏ உடனடியாகக் குடியேறும் வகையில் உள்ளது. ஆகவே, ஒரு சதுர அடிக்கான விலையை சரிசெய்யத் தேவையில்லை. புராஜெக்ட் பி மார்ச் 2017-ல் (34 மாதங்கள்) ஒப்படைக்கப்படவிருப்பதால் ஒரு சதுர அடிக்கான விலையில் ரூ.1,938 உயர்த்தப்பட்டுள்ளது.
நிலத்தின் பிரிக்கப்படாதப் பங்கு!
பல அடுக்குமாடிக் குடியிருப்பு, நிலத்தில் கட்டப்படுவதால், தனிநபருக்கு என எந்த நிலப்பகுதியையும் இனம் காணமுடியாது. ஆனால், அவரது அபார்ட்மென்ட் பரப்பளவுக்கு விகிதாசார அடிப்படையில் நிலப்பங்கினைப் பெறமுடியும். இதனை 'யூடிஎஸ்’ என்கிறார்கள். இது சதுர அடி பரப்பு அதிகமாக அதிகமாக அவருக்கு அதிக பங்கு நிலம் கிடைக்கும். நிலப்பரப்பு விலை உயரும். கட்டட மதிப்பு குறையும். திட்டம் ஏ-ஐ திட்டம் பி-வுடன் ஒப்பிடும்போது, சூப்பர் பில்ட்-அப் ஏரியா பரப்பில் அதிக யூடிஎஸ் கிடைக்கும். ஆகவே, திட்டம் பி-ல் நிலப்பரப்புக்கான சூப்பர் பில்ட்-அப் ஏரியாவின் ஒரு சதுர அடி விலையில் ரூ.242 உயர்த்தப்பட்டுள்ளது.

கார்பெட் ஏரியா!
கார்பெட் ஏரியா என்பது வீட்டில் நாம் நடமாடும் அல்லது புழங்கக்கூடிய பகுதி. அடுத்து, பிளிந்த் ஏரியா. இது கார்பெட் ஏரியா மற்றும் சுவர்கள் சேர்ந்ததாகும். இந்த பிளிந்த் ஏரியா என்பது கார்பெட் ஏரியா + 10% ஆகும். சூப்பர் பில்ட்-அப் ஏரியாவில் கார்பெட் ஏரியா + பொதுப் பயன்பாட்டு இடங்கள் (மாடிப்படி, லிஃப்ட், தாழ்வாரம், நுழைவாயில்) ஆகியவை அடங்கும். இது சாதாரணமாக கட்டுமானப் பரப்பளவு + 10 சதவிகிதமாக இருக்கும். சூப்பர் கட்டுமான பரப்பளவில் (ஒரு சதுர அடிக்கான விலை இதற்குப் பொருந்தும்) கார்பெட் பரப்பளவானது சுமார் 75% இருக்கும்.
சூப்பர் பில்ட்-அப் பரப்பளவில் கார்பெட் பரப்பளவு அதிக சதவிகிதம் இருந்தால், வீடு வாங்குபவருக்கு சிறந்தது. ஏனெனில், அவர் செலவிடும் பணத்துக்கு அவருக்கு அதிக புழங்குமிடம் (வாழ்விடம்) கிடைக்கிறது.

இறுதியாக, சூப்பர் கட்டுமான பரப்புக்கான ஒரு சதுர அடி விலை கார்பெட் பரப்பளவுக்கான ஒரு சதுர அடி விலையாக மாற்றப்படுகிறது. ஏனெனில், வீடு வாங்குபவர் அங்குதான் வசிக்கப்போகிறார். இந்த விதத்தில் திட்டம் ஏ-க்கான கார்பெட் பரப்பானது ஒரு சதுர அடிக்கு ரூ.8,400 எனவும், திட்டம் பி-ல் சதுர அடி விலை ரூ.8,826 ஆகவும் இருக்கிறது.
இந்த இரு திட்டங்களுக்கான ஒரு சதுர அடிக்கான விலையை ஒப்பிடும்போது மேற்கண்டவை தவிர, வீடு வாங்குபவர்கள் கட்டுமான நிறுவனங்கள் வழங்கும் இதர வசதிகளையும், கட்டுமான பொருட்களின் தரம் மற்றும் எந்த அமைவிடத்தில் இந்தத் திட்டம் அமையப்போகிறது என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். மேலும், மேற்கண்ட கணக்கீட்டுக்கு சாத்தியமாகக்கூடிய உரிமையைப் பெறும் தேதியைக் கருத்தில்கொள்ள வேண்டுமே தவிர, அதற்காக கட்டுமான நிறுவனங்கள் அறிவிக்கும் தேதியை அல்ல.

இந்தக் கணக்கீட்டின்படி, புராஜெக்ட் ஏ-ல் ஒரு சதுர அடி அடுக்குமாடிக் குடியிருப்பு விலை ரூ.8,400 ஆகவும், புராஜெக்ட் பி-ல் இது 8,826-ஆகவும் உள்ளது. அந்த வகையில் புராஜெக்ட் ஏ-ல் பில்டர் சொன்ன விலை 6,300 ரூபாய், புராஜெக்ட் பி-ல் பில்டர் சொன்ன விலை 5,700 ரூபாய். இங்கே அதிகமாக சதுர அடி சொன்ன புராஜெக்ட்-ஏ-ல் வீடு வாங்குவதுதான் லாபகரமாக இருக்கும்.

ரியல் எஸ்டேட் : சென்னை முதலிடம் !!!செப்டம்பர் மாதத்தோடு முடிந்த மூன்றாவது காலாண்டில் ரியல் எஸ்டேட் துறையில் 166  புதிய ப...
25/11/2014

ரியல் எஸ்டேட் : சென்னை முதலிடம் !!!

செப்டம்பர் மாதத்தோடு முடிந்த மூன்றாவது காலாண்டில் ரியல் எஸ்டேட் துறையில் 166 புதிய புராஜெக்டுகள் தொடங்கப்படுள்ளதாக ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான
குஷ்மேன் வாக்ஃபீல்டு தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் இந்த திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது என்றும், சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 45 புராஜெக்டுகளும், அகமதாபாத்தில் மிக குறைவாக 5 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதகாவும் தெரிவித்துள்ளது அந்த நிறுவனம்.

குடியிருப்புச் சந்தைகள் குறித்து இந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவின்படி, கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் கட்டுமான நிறுவனங்கள் அறிவித்த திட்டங்களில் 21 சதவிகித திட்டங்கள் கைவிடப்பட்டிருக்கிறது என்று தெரிய வந்திருக்கிறது.

ஆய்வு நடத்தப்பட்ட இந்த எட்டு நகரங்களில் வாங்கக்கூடிய விலையில் வீடு கட்டுவது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 50 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்தப் பிரிவில் தேவை என்பது அதிகமாக இருந்தாலும், பல்வேறு காரணங்களினால் வாங்கக்கூடிய விலையில் வீடுகளை கட்டித் தரமுடியவில்லை என பில்டர்கள் தரப்பில் சொல்வதையும் இந்த ஆய்வு எடுத்துக் கூறியிருக்கிறது.

நடுத்தரப் பிரிவில் புதிய கட்டுமானத் திட்டங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 14% குறைந்துள்ளன. அதிக விலை கொண்ட வீடுகள் கட்டுவதுகூ கடந்த ஆண்டைவிட 10 சதவிகிதம் குறைந்துள்ளது என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

இது குறித்து பேசிய குஷ்மேன் வாக்ஃபீல்டு நிறுவனத்தின் இணை இயக்குநர் ஸ்வேதா ஜெயின், "எல்லா நகரங்களிலும் ரியல் எஸ்டேட் சந்தை தொய்வாக இருந்தாலும், மக்கள் வீடு வாங்குவதற்கான முனைப்புகளில்தான் உள்ளனர். இதனால் சற்று மெதுவாகத்தான் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி கண்டு வருகிறது. புதிய திட்டங்களை அறிவிக்கும் கட்டுமான நிறுவனங்கள் மக்களின் விருப்பங்களையும் தேவைகளையும் தெரிந்துகொண்டு அறிவிக்க வேண்டும். முக்கியமாக, சின்ன சின்னத் திட்டங்கள் தொடங்குவதில் ஆர்வம் காட்ட வேண்டும்'' என்றும் தெரிவித்துள்ளார்.

ரியல் எஸ்டேட்டை பொறுத்தவரையில், கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுக்க மந்தநிலைதான் காணப்படுகிறது. குறிப்பாகச் சொல்லவேண்டும...
23/07/2014

ரியல் எஸ்டேட்டை பொறுத்தவரையில், கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுக்க மந்தநிலைதான் காணப்படுகிறது. குறிப்பாகச் சொல்லவேண்டும் எனில், மெட்ரோ நகரங்களில் கடந்த ஓராண்டில் ரியல் எஸ்டேட் விலை 20-30% வீழ்ச்சி கண்டிருக்கிறது.

ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்த அளவுக்கு விலை வீழ்ச்சி ஏற்படவில்லை என்றாலும், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத இடங்களில் போடப்பட்ட லே-அவுட்களில் மனைகள், மறுவிற்பனை விலை இல்லாமல் மந்தநிலையில் காணப்படுகிறது.

புதிய லே-அவுட்களில் மனை விலை, பழைய லே-அவுட் மறுவிற்பனை விலையைவிடக் குறைவாகப் பல இடங்களில் காணப்படுகிறது. அந்த வகையில் மனையில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் என்பது பலரின் பரிந்துரையாக இருக்கிறது.

ரியல் எஸ்டேட் முதலீட்டில் லாபம் பார்க்க வேண்டும் எனில், சில அடிப்படை விஷயங்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அதாவது, குறுகிய காலத் தேவைக்கு உள்ள தொகையை மனை முதலீட்டில் போடக் கூடாது. அதாவது, இந்தப் பணம் இன்னும் 10-15 ஆண்டு களுக்குத் தேவையில்லை என்கிற சூழலில்தான் மனையை முதலீட்டு நோக்கிலோ, பிற்காலத்தில் வீடு கட்டும் நோக்கத்திலோ வாங்க வேண்டும்.

மேலும், இடைப்பட்ட காலத்தில் எதிர்பாராதவிதமாக மனை விலை இறங்கினால் கவலைப்படக் கூடாது. காரணம், ரியல் எஸ்டேட் என்பது நீண்ட காலத்தில்தான் லாபம் தரும்.
ஆனால், குறுகியகாலத்தில் விலை இறக்கத்தைச் சந்திக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட விஷயமாக இருக்கிறது.

ரியல் எஸ்டேட் நிலவரம் பொதுவாகவே சுணக்கமாக இருப்பதால், மனை விலையை பேரம்பேசி விலையைக் குறைக்க முடியும். அதுவும், மொத்த பணமும் தயாராக வைத்திருக்கும் நிலையில் விலையில் கணிசமாகப் பேரம் பேச முடியும்.

இனி, தமிழகம் முழுக்க மனை முதலீட்டுக்கு ஏற்ற முக்கிய இடங்களைக் தந்துள்ளோம்.

முதலீட்டில் 50% லாபம் பெற ரியல் எஸ்டேட் தான் பெஸ்ட் சாய்ஸ்.....கடந்த பத்து ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறை பல மடங்கு உயர்ந...
05/04/2014

முதலீட்டில் 50% லாபம் பெற ரியல் எஸ்டேட் தான் பெஸ்ட் சாய்ஸ்.....

கடந்த பத்து ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறை பல மடங்கு உயர்ந்துள்ளது. சதாரன குப்பை நிலம் கூட இப்போது பிளாட் போட்டு விற்கின்றனர். மண் மீதான ஆசை யாரையும் விட்டு வைக்கவில்லை. நிலத்தின் மீதான முதலீடு நம் எதிர்காலத்தை பெரிய அளவில் உதவும். ஆனால் இன்றளவும் ரியல் எஸ்டேட் மீதான அச்சம் அதிகளவில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த வளர்ச்சி சாமானிய மக்களுக்கு சொந்த வீடு என்னும் கனவை எட்டும் உயரத்தில் கொண்டு வந்துள்ளது. இது உண்மையில் மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

விட்டு மனை முதலீட்டாளர்களை கவரும் வகையிலும் சாதரண மக்களின் விட்டு மனை கனவை நினவாக்கும் வகையில் மத்திய அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்தது.

வங்கி கடன்கள்
முதல் முறையாக ரியல் எஸ்டேட் அல்லது விட்டு மனையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 1.5 இலட்சம் முதல் 2.5 இலட்சம் வரை எளிமையான முறையில் வங்கிகள் கடன் வழங்க உத்தரவு பிறப்பித்தது. இது ஒவ்வொருவரின் வீடு வாங்கும் கனவை நினவாக்கு மிகபெரிய உதவியாக இருக்கும்.

வர்த்தகம் உயர்வு
பில்டர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் வீட்டு மனைகள் மற்றும் வீடுகளின் விலையை குறைத்து கொண்டு வருகிறது. இதனால் இத்துறையின் வளர்ச்சியும் வர்த்தகமும் உயர்ந்துள்ளது.

குறைவான விலையில் வீட்டு மனைகள்
மேலும் கடந்த சில காலாண்டுகளாக ரியல் எஸ்டேட் துறை மிதமான வேகத்தில் செல்கிறது. இதனால் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் 30 இலட்சம் முதல் 60 இலட்சம் வரை விற்கப்படுகிறது.சாதகமான வழிமுறைகள் வாடிக்கையாளர்களுக்கு சாதகமான ஒழுங்குமுறை சீர்திருத்தங்களால் ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படை தன்மை, ஒற்றை வழி அனுமதி, வரி சார்ந்த சீர்திருத்தங்கள், இடைதரகர்களின் தலையிடு ஆகியவை களையப்பட்டுள்ளதால் ரியல் எஸ்டேட் துறை மீண்டும் பாதுகாப்பான வளர்ச்சியை அடையும் என தெரிகிறது.

லாபம் நிச்சயம்
தற்போது உள்ள சூழ்நிலையில் வீடுகளை வாங்க நினைப்பவர்கள் சரியான இடத்தில் சரியான முறையில் முதலீடு செய்தால் அதிகப்படியான லாபம் அடையலாம். ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் கூறுகையில் அடுத்த 3 வருடத்தில் ரியல் எஸ்டேட் யாரும் நினைக்காத உயரத்தை எட்டும் என கூறுகின்றனர்.

50% லாபம்
இந்த தருனத்தில் முதலீடு செய்யதால் 50 சதவீதத்திற்கு அதிகமாக லாபம் அடையலாம் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

புதிய வீடு உங்கள் கையில்
இதனால் வருகிற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பட்ஜெட் தாக்கல் ரியல் எஸ்டேட் துறைக்கு சாதகமான அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நீங்கள் வாங்கு வீட்டிற்கு ஈஎம்ஐ செலுத்தி வாடகைக்கு செல்வதை விட, ஈஎம்ஐ செலுத்தி வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்.

பெண்களுக்கு வட்டியில் 0.25 சதவீதம் தள்ளுபடியும் உண்டு.

Address

100 Ft Road
Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when சென்னை ரியல் எஸ்டேட் - Chennai real estate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category