சட்டம்

சட்டம் முக்கிய செய்திகள், நீதிமன்ற தீர்ப்புகள், சட்டம் சார்ந்த விழிப்புணர்வு பதிவுகள், மனுக்கள் பதிவிடப்படும், Follow This Page.

09/02/2026
30/01/2026

திருப்பூர் மாவட்டம் ருத்ரபாளையம் பகுதியில் நிலம் தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே பிரச்சனை இருந்ததாக தெரிகிறது. ருத்ரபாளையத்தில் உள்ள ஒரு வீட்டை இடிக்க உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் லாரியில் வந்துள்ளனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இரு தரப்பினருக்கிடையே கைகலப்பு ஏற்பட்டதாக தெரிய வருகிறது. ஒருவருக்கொருவர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதலை சமாளிக்க முடியாமல் வீட்டை இடிக்க வந்தவர்கள் தப்பி ஓடி உள்ளனர்.மேலும் சிலர் வந்த வாகனத்தில் தப்பி செல்ல முயற்சித்த போது வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டு ஆயுதங்களோடு மிரட்டி தாக்கியதாக தெரிகிறது.

14/01/2026

“பாம்பு கடித்துவிட்டது” என அரசு மருத்துவமனைக்கு வந்த நபர்... ‘பாம்பு எங்கே?’ என நிருபர் கேட்க, அவர் ஜாக்கெட் ஜிப்பைத் திறந்து பாம்பை வெளியே எடுத்து காட்டினார்.

தலைமை காவலர்  #சரவணன் அவர்கள் ரோந்து பணியில் இருந்தபொழுது அபிதா தேனீக்கடையில் மூச்சுப் பேச்சு இல்லாமல் மயங்கிய நிலையில் ...
14/01/2026

தலைமை காவலர் #சரவணன் அவர்கள் ரோந்து பணியில் இருந்தபொழுது அபிதா தேனீக்கடையில் மூச்சுப் பேச்சு இல்லாமல் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தையை அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடி மருத்துவமனையில் சேர்த்து அந்த குழந்தையின் உயிரை காப்பாற்றினார்
மனிதநேயம் உள்ள இந்த காவலரை வாழ்த்துவோம்🙏🙏

13/01/2026

குழந்தை உயிரை காப்பாற்றிய தலைமை காவலர் திரு. சரவணன்


கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பெரியார் நகரில், உள்ள அபிதா கூல்ட்ரிங்க்ஸ் கடையில், தனது 1 1/2 வயது குழந்தையை வைத்துக்கொண்டு பெண்மணி ஒருவர், டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது குழந்தை திடீரென சரிந்து கீழே விழுந்த நிலையில், மூச்சில்லாமல், சுயநினைவு இழந்தது. அப்போது குழந்தையின் தாய் கத்தி கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது கடைக்குள் வந்த விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் சரவணன் என்பவர், சிறிதும் யோசிக்காமல், குழந்தையை தூக்கிக்கொண்டு, சுமார் 1/2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள, காமாட்சி தனியார் மருத்துவமனைக்கு ஓடி சென்று, மருத்துவரிடம் காண்பித்துள்ளார். உடனடியாக மருத்துவர்கள் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததின்பேரில், குழந்தை மீண்டும் உயிர் பெற்றது. இதுகுறித்த சிசிடிவி வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளத்தில் வெளியாகி உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட தலைமை காவலர் சரவணன் செயலை கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Post :

09/01/2026

நமது நிலம் நமதே விவாசியிகள் சங்கம் சார்பாக போராடியபோது

பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய 15,000 ரூபாய் லஞ்சம்.. கையும் களவுமாக சிக்கிய  ஆத்தூர் வட்டாசிட்சியர் அலுவலக முதுநிலை ஆய்வ...
08/01/2026

பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய 15,000 ரூபாய் லஞ்சம்.. கையும் களவுமாக சிக்கிய ஆத்தூர் வட்டாசிட்சியர் அலுவலக முதுநிலை ஆய்வாளர் பெரியசாமி ... லஞ்ச ஒழிப்பு போலீசார் அழைத்துச் சென்றபோது தனக்கு மயக்கம் வருவதாக கூறினாலும் சரிங்க வாங்க மருத்துவமனை சென்று பரிசோதித்து விட்டு போகலாம்ன்னு கூட்டி சென்றனர் 😁😁😁😁

( மூன்று மாதத்தில் ஓய்வு பெற உள்ளநிலையில் சிக்கியுள்ளார் என்பது கூடுதல் தகவல் )

~ ஏன்டா சம்பளமே எப்படியும் மாசம் 2 லட்சம் கிட்ட வரும் எதுக்கு இந்த வேலை? 😁😁

05/01/2026

வெளிமாநிலம்
Follow For More.

Address

Chennai
600003

Alerts

Be the first to know and let us send you an email when சட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category