Hindu Advocates Front இந்து வழக்கறிஞர் முன்னணி

  • Home
  • India
  • Chennai
  • Hindu Advocates Front இந்து வழக்கறிஞர் முன்னணி

Hindu Advocates Front இந்து வழக்கறிஞர் முன்னணி இந்துக்களுக்காகாக வாதாட, போராட, பரிந்து பேச இந்து வழக்கறிஞர் முன்னணி

7 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கொடுங்குற்றம் இழைக்காத இந்து சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்.கோவையில் நடைபெற்ற...
29/05/2026

7 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கொடுங்குற்றம் இழைக்காத இந்து சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்.

கோவையில் நடைபெற்ற இந்து வழக்கறிஞர் முன்னணி மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..

தீர்மானம்-3:

தமிழக சிறைகளில் ஆயிரக்கணக்கான இந்து சிறைவாசிகள் உள்ளார்கள். இதில் பலர் வழக்குகளில் வாதாட வழக்கறிஞர் வைக்க கூட முடியாமல் ஏழை சிறைவாசிகள்.

குறிப்பாக உணர்ச்சி வசப்பட்டு சூழ்நிலை காரணமாக குற்றம் செய்தவர்கள். இவர்களில் 7 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கொடுங்குற்றம் இழைக்காத இந்து சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்.

#கோவை #மாநிலசெயற்குழு #இந்துவழக்கறிஞர்முன்னணி

அனைத்து நீதிமன்றங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களை விரைவாக நிரப்பிட வேண்டும். கோவையில் நடைபெற்ற இந்து வழக்கறிஞர் முன்னணி...
29/05/2026

அனைத்து நீதிமன்றங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களை விரைவாக நிரப்பிட வேண்டும்.

கோவையில் நடைபெற்ற இந்து வழக்கறிஞர் முன்னணி மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..

தீர்மானம்-2:

நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களையும், நீதிமன்ற ஊழியர்கள் காலிபணியிடங்களையும் விரைவாக நிரப்பிட வேண்டும்.

இதன் மூலம் நீண்ட நாட்களாக தேக்கமடைந்துள்ள லட்சக்கணக்கான வழக்குகள் தீர்க்கப்படும். இதனால் சாதாரண பொதுமக்கள் நீதிமன்றத்துக்கு வந்து நீதி பெறுவதற்கு ஏற்படும் இன்னல்களுக்கும், சிரமங்களுக்கும் தக்க தீர்வு ஏற்படும்.

#கோவை #மாநிலசெயற்குழு #இந்துவழக்கறிஞர்முன்னணி

வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதியை தமிழக அரசு 25 லட்சமாக உயர்த்தித் தரவேண்டும்...கோவையில் நடைபெற்ற இந்து வழக்கறிஞர் முன்னணி...
29/05/2026

வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதியை தமிழக அரசு 25 லட்சமாக உயர்த்தித் தரவேண்டும்...

கோவையில் நடைபெற்ற இந்து வழக்கறிஞர் முன்னணி மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..

தீர்மானம்-1

தமிழகத்தில் தொடர்ந்து வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடைபெற்று வருகின்றது. பிற மாநிலங்களில் வழக்கறிஞர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளது போல, தமிழகத்திலும் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்திட வேண்டும்..

வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதியை தமிழக அரசு 25 லட்சமாக உயர்த்தித் தரவேண்டும்...

#கோவை #மாநிலசெயற்குழு #இந்துவழக்கறிஞர்முன்னணி

வழக்கறிஞர் சமுதாயத்திற்கே களங்கம்… முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவ...
28/04/2026

வழக்கறிஞர் சமுதாயத்திற்கே களங்கம்…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி திருப்பெரும்புதூர் அருகே மனித வெடிகுண்டால் படுகொலை செய்யபட்டார்.

சம்பந்தபட்ட பலர் கைதாகி மரண தண்டனை விதிக்கபட்டது, கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக மாற்றபட்டது, அப்படி ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளன் விடுதலை கோரி மனு செய்தது உரிய சமயத்தில் முடிவெடுக்கவில்லை என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு சிறையில் இருந்து விடுதலை அளித்தது..

எனவே பேரறிவாளன் சிறையில் இருந்து விடுவிக்கபட்டது நிரபராதி என்பதால் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்..

இந்நிலையில் மேற்படி பேரறிவாளன் வழக்கறிஞராக தன்னை பதிவு செய்துகொண்டுள்ளான்,

ஏற்கனவே வழக்கறிஞர் தொழிலில் போலிகளும், குற்ற சம்பவத்தில் ஈடுபடும் சமூக விரோதிகளும் மலிந்துவிட்ட நிலையில், முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் தண்டனை பெற்ற நபர் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளது வழக்கறிஞர் சமூகத்தின் மாண்புக்கு இழுக்கு என்றால் மிகையில்லை.

இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கும் சட்டங்கள் இல்லை என்பது ஆக சிறந்த அவலம்.

எனவே இனியாவது இந்திய பார் கவுன்ஸில் மற்றும் மத்திய மாநில அரசுகள் குற்றவாளிகள் வழக்கறிஞராக பதிவு செய்வதை தடுக்கும் வகையில், சட்ட விதிகளை உருவாக்கி வழக்கறிஞர் சமுதாயத்தின் மாண்பை காக்க வேண்டும் என்பதே அனைத்து வழக்கறிஞர்களின் எதிர்பார்ப்பு!!

தர்மம் காக்க, நீதி தழைக்க..சட்ட போராட்டம் நடத்தும் வழக்கறிஞர்களின்வாதம் வெல்லட்டும்,வாழ்வு ஒளிரட்டும்..வழக்கறிஞர் சமுதாய...
14/04/2026

தர்மம் காக்க, நீதி தழைக்க..
சட்ட போராட்டம் நடத்தும் வழக்கறிஞர்களின்
வாதம் வெல்லட்டும்,
வாழ்வு ஒளிரட்டும்..

வழக்கறிஞர் சமுதாயத்திற்கு இந்து வழக்கறிஞர் முன்னணியின்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!

#புத்தாண்டு #சித்திரை01 #ஸ்ரீபராபவ #இந்துவழக்கறிஞர்முன்னணி

திருச்செந்தூர் கோயிலில் வழக்கறிஞர்கள் ஆய்வு..ஆளுநரிடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பு..திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி த...
17/03/2026

திருச்செந்தூர் கோயிலில் வழக்கறிஞர்கள் ஆய்வு..
ஆளுநரிடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பு..

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களிடம், குறைகளை கேட்டறிந்த இந்து வழக்கறிஞர் முன்னணி பொறுப்பாளர்கள்...

இது குறித்த அறிக்கையினை தமிழக ஆளுநரிடம் விரைவில் தாக்கல் செய்ய உள்ளனர்..

மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் அவர்கள் வழிகாட்டுதலின்படி, மாநில செயலாளரும் மத்திய அரசு வழக்கறிஞருமான கா.குற்றாலநாதன் அவர்கள் தலைமையில்

வழக்கறிஞர்கள் குழு:
A.வெற்றிவேல்
M.பேச்சிமுத்து
M.நாகராஜன்
T.கண்ணன்
நா.மணிகண்டமகாதேவன்
E.சிவபெருமாள்
M.மருது
P.இளையராஜா
P.சுபாஷ்
E.இசக்கி லட்சுமி ஜெயராம்திவான்

ஆகியோரை கொண்ட வழக்கறிஞர்கள் குழுவினர் திருச்செந்தூரில் தங்கும் விடுதி, அன்னதான கூடம், நாழிக்கிணறு, முடிகாணிக்கை செலுத்தும் இடம், பொது தரிசனம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.

அந்தந்த கட்டடங்களில் உள்ள கண்காணிப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் சந்தித்து அங்குள்ள நடைமுறைகள் குறித்தும் கேட்டறிந்தனர்..

16/03/2026

சிறுபான்மை சமூகத்தை திருப்திபடுத்த, பெரும்பான்மை சமூகத்தை ஒதுக்குவதா??

16/03/2026

தீர்ப்பை மதிக்கவில்லை என்றால், நீதிமன்றமே ஆட்சியை கலைக்க பரிசீலனை செய்ய முடியும்.. |

15/03/2026

நீதித்துறை உத்தரவை மதிக்காத அரசு அதிகாரிகள்.

நீதியும் இறைவனும் வெவ்வேறாக முடியாது!ஆதியை பழிப்பவன் அரசனாக முடியாது!திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற தொடர்ந்து போராடும்...
14/01/2026

நீதியும் இறைவனும் வெவ்வேறாக முடியாது!
ஆதியை பழிப்பவன் அரசனாக முடியாது!
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற தொடர்ந்து போராடும் வழக்கறிஞர்களை வாழ்த்துவோம்!
சட்டத்தை அவமதித்த தி.மு.கவை வீழ்த்துவோம்!

இந்து வழக்கறிஞர் முன்னணியின் சார்பாக அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

இந்து வழக்கறிஞர் முன்னணி – தமிழ்நாடு.

#பொங்கல் #தைத்திருநாள்

Address

No. 58, Ayya Mudali Street, Chinthadri Pet
Chennai
600002

Alerts

Be the first to know and let us send you an email when Hindu Advocates Front இந்து வழக்கறிஞர் முன்னணி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share