Dr S P’s Legal Awareness World - Dr B R Ambedkar Law Associates

Dr S P’s Legal Awareness World - Dr B R Ambedkar Law Associates We provide Legal Consultation and Awareness for Public as well Advocates.

திருமணத்திற்குப் பிறகு ஆதார் பெயர் மாற்றம் – இப்போது எளிது..!இ-சேவை மையங்களுக்கு அலைய வேண்டாம் ❌உங்கள் மொபைலிலேயே ஆன்லைன...
23/03/2026

திருமணத்திற்குப் பிறகு ஆதார் பெயர் மாற்றம் – இப்போது எளிது..!
இ-சேவை மையங்களுக்கு அலைய வேண்டாம் ❌
உங்கள் மொபைலிலேயே ஆன்லைனில் மாற்றிக்கொள்ளலாம் 📲

எப்படி..? 👇

1️⃣ UIDAI அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று Aadhaar எண்ணை உள்ளிட்டு OTP மூலம் Login செய்யவும்
2️⃣ “Update Aadhaar Online” தேர்வு செய்யவும்
3️⃣ புதிய பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவும்
4️⃣ தேவையான ஆவணங்களை Upload செய்யவும்
5️⃣ SRN எண்ணை வைத்து Status Track செய்யலாம் (7–10 நாட்களில் Update ஆகும்)

⚠️ முக்கியம்: ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் செயல்பாட்டில் இருக்க வேண்டும்!

On the International Day of Women Judges,we salute the courage, wisdom, and integrity of women who uphold justice and st...
10/03/2026

On the International Day of Women Judges,
we salute the courage, wisdom,
and integrity of women
who uphold justice and
strengthen the rule of law.

- Dr.B.R.Ambedkar Law Associates.
📚💙⚖️👩‍⚖️

Cheque Bounce (காசோலை திரும்புதல்) வழக்குகளில் நோட்டீஸ் அனுப்பும்போது கவனிக்க வேண்டிய சட்ட அம்சங்கள்:Cheque Bounce வழக்க...
09/03/2026

Cheque Bounce (காசோலை திரும்புதல்) வழக்குகளில் நோட்டீஸ் அனுப்பும்போது கவனிக்க வேண்டிய சட்ட அம்சங்கள்:

Cheque Bounce வழக்குகள் பெரும்பாலும் Negotiable Instruments Act, 1881 சட்டத்தின் Section 138 of the Negotiable Instruments Act கீழ் பதிவு செய்யப்படுகின்றன. எனவே, நோட்டீஸ் தயாரிக்கும் போது சில முக்கியமான சட்ட அம்சங்கள் சரியாக குறிப்பிடப்பட வேண்டும்.

1. சட்டபூர்வமான கடன் (Legally Enforceable Debt)
Section 138 of the Negotiable Instruments Act படி, காசோலை ஒரு சட்டபூர்வமான கடன் அல்லது பொறுப்பு (legally enforceable debt or liability) காரணமாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். எனவே நோட்டீஸில்:
• தரப்புகளுக்கிடையிலான அறிமுகம் / பழக்கம்
• கடன் வழங்கப்பட்ட சூழ்நிலை
• கடன் வழங்கிய நபரின் பொருளாதார திறன்
போன்ற விஷயங்களை தெளிவாக குறிப்பிடுவது முக்கியம்.

2. கடன் வழங்கப்பட்ட விவரங்கள்
நோட்டீஸில் பின்வரும் விவரங்கள் துல்லியமாக இருக்க வேண்டும்:
• கடன் வழங்கப்பட்ட இடம்
• தேதி மற்றும் நேரம்
• கடன் தொகை
• சாட்சிகள் (இருந்தால்)
• கடன் வழங்கப்பட்ட நோக்கம்

இந்த விவரங்கள் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய உதவும்.

https://chat.whatsapp.com/FUYcvyZldwB8KSvuZ2kkQ9?mode=hq1tcli

3. காசோலை வழங்கப்பட்ட சூழ்நிலை
ஒரு முக்கியமான சட்ட வித்தியாசம் உள்ளது:
• கடன் வாங்கும்போதே காசோலை வழங்கப்பட்டது என்று கூறுவது
• கடன் வாங்கிய பிறகு பணம் கேட்டபோது காசோலை வழங்கப்பட்டது என்று கூறுவது

இந்த இரண்டு சூழ்நிலைகளும் வழக்கின் வாதங்களை மாற்றக்கூடியவை. ஏனெனில் காசோலை கடன் பாதுகாப்பாக (security) கொடுக்கப்பட்டதா அல்லது கடன் திருப்பிச் செலுத்துவதற்காக கொடுக்கப்பட்டதா என்பது நீதிமன்றத்தில் முக்கியமாக பார்க்கப்படும்.

4. சட்டநடவடிக்கை காலவரம்பு (Time Limits)
Section 138 of the Negotiable Instruments Act படி:
• காசோலை திரும்பியதை அறிந்த 30 நாட்களுக்குள் சட்ட நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
• நோட்டீஸ் பெற்ற நபர் 15 நாட்களுக்குள் தொகையை செலுத்த வேண்டும்.
• அந்த 15 நாட்களுக்குள் பணம் செலுத்தவில்லை என்றால், அதன் பிறகு 30 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்.

5. சட்ட முன்னூக்கம் (Presumption)
Section 139 of the Negotiable Instruments Act படி, காசோலை வழங்கியவர் அது ஒரு கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக வழங்கியதாக நீதிமன்றம் முதலில் கருதும். ஆனால் எதிர்பார்ப்பு தரப்பு அதை மறுக்க முயற்சி செய்யலாம். எனவே நோட்டீஸ் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்.

முடிவாக, Cheque Bounce வழக்குகளில் அனுப்பப்படும் சட்ட நோட்டீஸ் மிகவும் முக்கியமான ஆவணம். அதில் சம்பவ விவரங்கள் சரியாகவும் சட்ட ரீதியாகவும் குறிப்பிடப்படாவிட்டால், பின்னர் வழக்கின் பலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

— Dr.B.R.Ambedkar Law Associates ⚖️📚💙
Dr S P’s Legal Awareness World - Dr B R Ambedkar Law Associates Dr.S.P

⚖️ வழக்கறிஞர் உறவுகளுக்கு ஓர் முக்கிய நினைவூட்டல்:அண்மையில் Provisional Voters List வெளியிடப்பட்டுள்ளது. Declaration cor...
19/02/2026

⚖️ வழக்கறிஞர் உறவுகளுக்கு ஓர் முக்கிய நினைவூட்டல்:

அண்மையில் Provisional Voters List வெளியிடப்பட்டுள்ளது. Declaration correction, CoP corrections உள்ளிட்ட காரணங்களால் பலரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் இருக்கலாம்.

எனவே,
• பெயர் / இனிஷியல் பிழை இருந்தாலோ
• விவரங்களில் திருத்தம் தேவைப்பட்டாலோ
• பெயர் விடுபட்டிருந்தாலோ
• எதிர்ப்பு / மறுப்பு தெரிவிக்க விரும்பினாலோ, நாளைக்குள் அவசியமாக விண்ணப்பம் செய்து முடிக்க வேண்டும்.

தங்களுடைய விண்ணப்பக் கடிதங்களை உயர்மட்ட தேர்தல் குழுவிற்கு (High Power Election Committee) விரைவு தபால் மூலம் அனுப்பவும்.

மேலும், 📧 [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் அனுப்புவது நல்லது.

🗓 28.02.2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்.

ஆகையால், விடுபட்டோர் மற்றும் திருத்தம் செய்ய விரும்புவோர் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

முனைவர்.பொன்.சுப. பாண்டிக்குமார் @ Dr.S.P
Dr S P’s Legal Awareness World - Aram L.A.W Office

ஒரு வழக்கில் Co-accused (உடன் குற்றம் சாட்டப்பட்டவர்) அளிக்கும் வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாக வைத்து, வேறு எந்த உறுத...
11/02/2026

ஒரு வழக்கில் Co-accused (உடன் குற்றம் சாட்டப்பட்டவர்) அளிக்கும் வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாக வைத்து, வேறு எந்த உறுதிப்படுத்தும் சாட்சியமும் இல்லாமல் ஒருவரை தண்டிக்க முடியாது என்பது இந்திய குற்றவியல் சட்டத்தின் நிலையான கோட்பாடு. Co-accused confession என்பது தனித்து நிற்கும் ஆதாரம் அல்ல; அது independent corroboration (சுயாதீன உறுதிப்படுத்தும் சாட்சியம்) இல்லாமல் தண்டனைக்கு பயன்படுத்த முடியாது.

இந்த வழக்கில், குற்றத்தில் சம்பந்தமில்லாத ஒருவரை பொய் வழக்கில் இணைக்க, சில போலீஸ் அதிகாரிகள் பொய்ச் சாட்சியம் அளித்தது நீதிமன்ற கவனத்திற்கு வந்தது. இது Criminal Justice System-ஐ பாதிக்கும் மிகக் கடுமையான செயலாகும் என நீதிமன்றம் கண்டித்துள்ளது. இதனால், அந்த பொய்ச் சாட்சியத்தை அளித்த போலீஸ் அதிகாரிகள் மீது முழுமையான விசாரணை நடத்த Director General of Police (DGP) அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும், பொய்ச் சாட்சியங்களின் காரணமாக வழக்கில் சேர்க்கப்பட்டு மன உளைச்சல், சமூக அவமதிப்பு மற்றும் சட்டப் பாதிப்பு அடைந்த நபருக்கு, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் இணைந்து ரூ.10,00,000 (பத்து லட்சம் ரூபாய்) நஷ்டயீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டது.

https://chat.whatsapp.com/FUYcvyZldwB8KSvuZ2kkQ9?mode=gi_t

சட்ட ரீதியாக,
Evidence Act, 1872 – Section 30ன் படி, Co-accused confession மிக மிக வரையறுக்கப்பட்ட அளவிலேயே பயன்படுத்த முடியும்; அது தனித்து தண்டனைக்கான ஆதாரமாக இருக்க முடியாது.
பொய்ச் சாட்சியம் அளித்தால், IPC Sections 191 & 193 (False Evidence & Punishment for False Evidence) பொருந்தும்.
போலீஸ் அதிகாரிகள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பொய் வழக்கில் சிக்கவைத்தால், அது Article 21 – Right to Life and Personal Libertyயின் வெளிப்படையான மீறலாகும்.

Supreme Court – Kashmira Singh v. State of Madhya Pradesh, AIR 1952 SC 159
Co-accused confession alone cannot be the foundation for conviction; it requires strong independent corroboration.

Supreme Court – Haricharan Kurmi v. State of Bihar, AIR 1964 SC 1184
Co-accused statement is not substantive evidence and cannot be relied upon without corroboration.

Supreme Court – State of Haryana v. Bhajan Lal, 1992 Supp (1) SCC 335
பொய்யான, பழிவாங்கும் நோக்கில் தொடுக்கப்படும் வழக்குகள் நீதிமன்றத்தால் தடுக்கப்பட வேண்டும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Supreme Court – D.K. Basu v. State of West Bengal, (1997) 1 SCC 416
போலீஸ் அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக நஷ்டயீடு வழங்க நீதிமன்றத்திற்கு முழு அதிகாரம் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.

Article 20(3) – Constitution of India, 1950 states: “No person accused of any offence shall be compelled to be a witness against himself.”

இந்த பிரிவு, ஒரு குற்றச்சாட்டுக்குட்பட்ட நபரை தன்னைத் தானே குற்றம் சாட்டும் வகையில் சாட்சி அளிக்க கட்டாயப்படுத்தக் கூடாது என்ற அடிப்படை உரிமையை வழங்குகிறது. இது Self-Incrimination எதிரான பாதுகாப்பாகும். ஒரு நபர் மீது குற்றச்சாட்டு இருப்பின், போலீஸ் அல்லது எந்த அதிகாரியும் அவரை மிரட்டி, அழுத்தம் கொடுத்து, கட்டாயமாக வாக்குமூலம் பெற முடியாது. மௌனம் காக்கும் உரிமையும் இதன் கீழ் பாதுகாக்கப்படுகிறது.

இந்த உரிமை அமலுக்கு வர மூன்று அம்சங்கள் அவசியம்: அந்த நபர் “accused of an offence” ஆக இருக்க வேண்டும்; அவரிடமிருந்து பெறப்படும் தகவல் கட்டாயப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்; அது அவரை எதிர்த்து சாட்சியமாக பயன்படுத்தப்படக்கூடியதாக இருக்க வேண்டும்.

வாய்மொழி அல்லது எழுத்து வடிவில் கட்டாயப்படுத்தப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் Article 20(3)க்கு எதிரானது. ஆனால் கைரேகை, கையெழுத்து மாதிரி, இரத்த மாதிரி போன்ற உடல் சார்ந்த ஆதாரங்களை அளிப்பது self-incrimination ஆகாது என்று உச்சநீதிமன்றம் விளக்கியுள்ளது.

State of Bombay v. Kathi Kalu Oghad (1961) வழக்கில் கைரேகை போன்ற physical evidence self-incrimination அல்ல என்று தீர்ப்பளிக்கப்பட்டது. Nandini Satpathy v. P.L. Dani (1978) வழக்கில் விசாரணையின் போது மௌனம் காக்கும் உரிமையும் Article 20(3) பாதுகாப்பில் அடங்கும் என்று கூறப்பட்டது. Selvi v. State of Karnataka (2010) வழக்கில் Narco Analysis, Polygraph, Brain Mapping போன்ற பரிசோதனைகளை சம்மதமின்றி நடத்துவது அரசியலமைப்பு மீறல் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

எளிமையாகச் சொன்னால், Article 20(3) என்பது ஒரு குற்றச்சாட்டுக்குட்பட்ட நபரின் மரியாதை, சுதந்திரம் மற்றும் நியாயமான விசாரணை உரிமையை பாதுகாக்கும் முக்கியமான அரசியலமைப்பு பாதுகாப்பாகும். மௌனம் காக்கும் உரிமை ஒரு குற்றமல்ல; அது ஒரு அடிப்படை உரிமை.

முனைவர்.பொன்.சுப.பாண்டிக்குமார்
M.A.,B.Ed.,M.Phil.,Ph.D.,LL.B. (AILAJ).
All India Lawyers' Association for Justice - AILAJ
Dr S P’s Legal Awareness World - Aram L.A.W Office

காசோலை கொடுத்தவர் தேதியிட்டு காசோலை வழங்குகிறார். Negotiable Instruments Act, 1881 – Section 138(a)-ன் படி, காசோலை வழங்க...
10/02/2026

காசோலை கொடுத்தவர் தேதியிட்டு காசோலை வழங்குகிறார். Negotiable Instruments Act, 1881 – Section 138(a)-ன் படி, காசோலை வழங்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள் காசோலை பெற்றவர் அதை வங்கியில் செலுத்தி பணத்தை வசூலிக்க வேண்டும். முன்பு இந்த கால அளவு ஆறு மாதமாக இருந்தது. இந்த சட்ட நிலைமை Reserve Bank of India Circulars மற்றும் Section 138 Explanation மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

https://www.facebook.com/profile.php?id=100089596503256&mibextid=wwXIfr&mibextid=wwXIfr

காசோலை பெற்றவர் காசோலையை வங்கியில் செலுத்தும்போது, காசோலை கொடுத்தவரின் கணக்கில் போதுமான பணம் இல்லை, அல்லது கணக்கு முடக்கப்பட்டுள்ளது, அல்லது “Funds Insufficient” என்ற காரணங்களால் வங்கி காசோலையை திருப்பி அனுப்பி அதற்கான Bank Return Memo வழங்கினால், அது Section 138-ன் கீழ் குற்றமாக கருதப்படும். “Account Closed”, “Payment Stopped”, “Refer to Drawer” போன்ற காரணங்களும் Section 138-க்கு உட்படும் என Supreme Court – NEPC Micon Ltd. v. Magma Leasing Ltd., (1999) 4 SCC 253 மற்றும் Laxmi Dyechem v. State of Gujarat, (2012) 13 SCC 375 வழக்குகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

வங்கி மெமோ பெற்ற தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள், காசோலை பெற்றவர், காசோலை கொடுத்தவருக்கு சட்டப்படியான அறிவிப்பை வழங்க வேண்டும். இது Negotiable Instruments Act, 1881 – Section 138(b)-ன் கீழ் கட்டாயமான நடைமுறையாகும். சட்ட அறிவிப்பு வழங்கப்படாத நிலையில் Section 138 வழக்கு தொடங்க முடியாது என்பது Supreme Court – K.R. Indira v. Dr. G. Adinarayana, (2003) 8 SCC 300 வழக்கில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சட்ட அறிவிப்பை காசோலை கொடுத்தவர் பெற்ற நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்குள், அவர் முழுத் தொகையையும் செலுத்த வேண்டும். இந்த பதினைந்து நாட்கள் அவகாசம் Section 138(c)-ன் கீழ் காசோலை கொடுத்தவருக்கு வழங்கப்படும் ஒரு சட்ட வாய்ப்பாகும். இந்த காலக்கெடு முடிந்த பிறகே குற்றம் உருவாகும் (cause of action arises) என Supreme Court – Sadanandan Bhadran v. Madhavan Sunil Kumar, (1998) 6 SCC 514 வழக்கில் கூறப்பட்டுள்ளது.

பதினைந்து நாட்கள் முடிந்தும் பணம் செலுத்தப்படவில்லை என்றால், அந்த நாளிலிருந்து முப்பது நாட்களுக்குள், காசோலை பெற்றவர் சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். இந்த காலக்கெடு Negotiable Instruments Act, 1881 – Section 142(b)-ன் படி கட்டாயமானது. காலக்கெடு மீறப்பட்டால் வழக்கு maintainable அல்ல என்பது Supreme Court – Dashrath Rupsingh Rathod v. State of Maharashtra, (2014) 9 SCC 129 வழக்கில் விளக்கப்பட்டுள்ளது (பின்னர் jurisdiction குறித்து சட்ட திருத்தம் செய்யப்பட்டாலும், limitation principle தொடர்கிறது).

பொதுவாக நடைபெறும் ஒரு பெரிய தவறு என்னவென்றால், காசோலை திரும்பி வந்தபின், காசோலை கொடுத்தவர் “இன்னும் ஒரு மாதத்தில் பணத்தை கொடுத்து விடுகிறேன்” என்று கூறுவதை நம்பி, சட்ட அறிவிப்பை 30 நாட்களுக்குள் அனுப்பாமல் இருப்பதாகும். இவ்வாறு Section 138(b)-ல் குறிப்பிடப்பட்ட காலக்கெடு தவறினால், அந்த திரும்பிய காசோலையை வைத்து வழக்கிட முடியாது என்பது பல தீர்ப்புகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், காசோலை செல்லுபடியாகும் காலம் மூன்று மாதம் இருப்பதால், அந்த காலத்திற்குள் மீண்டும் ஒருமுறை அதே காசோலையை வங்கியில் செலுத்தலாம். மீண்டும் காசோலை திரும்பி வந்த பிறகு, புதிய காரணம் (fresh cause of action) உருவாகும் என்றும், அதன்பின் சட்ட அறிவிப்பும் வழக்கும் தொடரலாம் என்றும் Supreme Court – MSR Leathers v. S. Palaniappan, (2013) 1 SCC 177 வழக்கில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

காசோலை வழங்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாத காலத்திற்குள், எத்தனை முறை வேண்டுமானாலும் காசோலையை வங்கியில் செலுத்தலாம். ஆனால் கடைசி பதினைந்து நாட்களில் காசோலை தாக்கல் செய்து அது திரும்பி வந்தால், காசோலை கொடுத்தவர் கூறும் வாய்மொழி வாக்குறுதிகளை நம்பாமல் உடனடியாக சட்ட அறிவிப்பு அனுப்புவது பாதுகாப்பானது. ஏனெனில் Section 138 ஒரு strict liability offence என Supreme Court – Rangappa v. Sri Mohan, (2010) 11 SCC 441 வழக்கில் கூறப்பட்டுள்ளது.

காசோலை வழங்கியவர் இறந்துவிட்டால், வாடிக்கையாளர் மற்றும் வங்கிக்கிடையிலான உறவு ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது என்பதால், வாடிக்கையாளர் இறந்த பிறகு வங்கி அவரது கணக்கிலிருந்து பணத்தை கழிக்க முடியாது. “Drawer expired” என்ற காரணத்தால் காசோலை திரும்பினாலும், அதன் அடிப்படையில் Section 138-ன் கீழ் குற்றவியல் வழக்கு தொடர முடியாது. ஏனெனில் சட்ட அறிவிப்பு காசோலை வழங்கியவருக்கே அனுப்பப்பட வேண்டும், மேலும் இறந்த நபரின் மீது குற்றவியல் வழக்கு தொடர முடியாது என்பது Supreme Court – State of Kerala v. Narayani Amma Kamala Devi, AIR 1962 SC 1530 மற்றும் பொதுக் குற்றவியல் கோட்பாடுகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

https://chat.whatsapp.com/FUYcvyZldwB8KSvuZ2kkQ9?mode=gi_c

ஆனால், காசோலை வழங்கியவரின் வாரிசுதாரர்கள் மீது Civil law-ன் கீழ் வழக்கு தொடரலாம். இறந்தவர் விட்டுச் சென்ற சொத்துகள் இருந்தால், அந்த சொத்துகளின் அளவிற்கு மட்டுமே வாரிசுதாரர்களின் பொறுப்பு இருக்கும் என்பது Supreme Court – Gurmail Singh v. State of Punjab, (2013) 14 SCC 581 உள்ளிட்ட தீர்ப்புகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இறந்தவருக்கு எந்தவித சொத்தும் இல்லையெனில், வாரிசுதாரர்கள் தனிப்பட்ட முறையில் அந்த கடனை அடைக்க சட்டப்படி கட்டாயப்படுத்த முடியாது.

முனைவர்.பொன்.சுப. பாண்டிக்குமார்
M.A.,B.Ed.,M.Phil.,Ph.D.,LL.B.

#அனைத்திந்திய_நீதிக்கான_வழக்கறிஞர்_சங்கம்,
தேனி மாவட்டம்.

08/02/2026

Follow Dr.S.P's WhatsApp channel. Dr.S.Pandikumar.,M.A.,B.Ed.,M.Phil.,Ph.D., LL.B. | Social Reformer | Former Professor | Lawyer⚖️| Wanderer

🇮🇳 Advocate for Social Justice | Environmentalist | Youth Mentor | 📚 Scholar | Speaker | Independent Political Voice – Theni

🌱 Founder – Vithaikal People Empowerment Trust, Bodhinayakanur.
📍 Updates on Law | Education | RTI | Public Welfare
🗳️ Voice of the Marginalised | Ground Realities | Legal Awareness
State General Council Member – AICCTU Legal Adviser for Auto Unions.
🔔 Join for insights, petitions, campaigns & civic action.. Join 42 followers for the latest updates.

வாட்ஸ்அப், மெட்டா நிறுனவனங்களுக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை! . ⚖️📚💙  |   |   |
04/02/2026

வாட்ஸ்அப், மெட்டா நிறுனவனங்களுக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

.
⚖️📚💙 | | |

“பொது நில ஆக்கிரமிப்பு இனி சிவில் பிரச்சினை அல்ல – இது குற்றவியல் தண்டனைக்கு உட்பட்டது . FIR கட்டாயம்.” – Madras High Co...
03/02/2026

“பொது நில ஆக்கிரமிப்பு இனி சிவில் பிரச்சினை அல்ல – இது குற்றவியல் தண்டனைக்கு உட்பட்டது . FIR கட்டாயம்.” – Madras High Court, 20.06.2024.

If a Government Servant issues false documents or certificates, or officially records false information, criminal prosec...
02/02/2026

If a Government Servant issues false documents or certificates, or officially records false information, criminal prosecution can be initiated under the following provisions:

Bharatiya Nyaya Sanhita (BNS), 2023:
Sections 198, 206, 227, 228, 336, 337, 338, 318 & 61 (Equivalent IPC Sections: 167, 177, 191, 192, 193 & 420)

Such acts constitute serious criminal offences and attract both criminal liability and disciplinary action.

அரசு ஊழியர் பொய்யான ஆவணங்கள்/சான்றிதழ்கள் வழங்கினால், அல்லது பொய்யான தகவல்களை அதிகாரபூர்வமாக பதிவு செய்தால்,
BNS Sections 198, 206, 227, 228, 336, 337, 338, 318 & 61 (IPC Sections 167, 177, 191, 192, 193, 420) ஆகியவற்றின் கீழ் கிரிமினல் வழக்கு தொடர முடியும்.

– Dr.S.Pandikumar, M.A.,B.Ed.,M.Phil.,Ph.D.,LL.B.,
📞 9994572933 | 9790198008.
📧 [email protected].

இந்து திருமணத்தின் செல்லுபடியாகும் அடிப்படை நிபந்தனைகள்: (இந்து திருமணச் சட்டம்,1955-பிரிவு 5)இந்து திருமணச் சட்டம், 195...
04/01/2026

இந்து திருமணத்தின் செல்லுபடியாகும் அடிப்படை நிபந்தனைகள்: (இந்து திருமணச் சட்டம்,1955-பிரிவு 5)

இந்து திருமணச் சட்டம், 1955ன் பிரிவு 5ன் படி, கீழ்க்கண்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டாலே ஒரு இந்து திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும். இதே சட்டத்தின் பிரிவு 13ன் கீழ், இந்நிபந்தனைகள் மீறப்பட்டால் விவாகரத்திற்கும் வழிவகை உள்ளது.

1. ஒரே துணைத் திருமணம் (Monogamy): திருமணத்தின் போது, இருவரிலும் யாருக்கும் மற்றொரு உயிருடன் இருக்கும் துணை இருக்கக்கூடாது.
🔹 உயிருடன் இருக்கும் கணவன் அல்லது மனைவி இருப்பினும் மீண்டும் திருமணம் செய்தால்,
➡️ அந்தத் திருமணம் செல்லாது (Void Marriage)
➡️ இந்திய குற்றவியல் சட்டம், பிரிவுகள் 494 & 495ன் கீழ் தண்டனைக்குரியது.

2. மனநலம் (Soundness of Mind)-திருமணத்தின் போது இருவரும்:
• செல்லுபடியாகும் சம்மதம் வழங்கக்கூடிய மனநிலையில் இருக்க வேண்டும்
• திருமண வாழ்வுக்கும், சந்ததிப் பெருக்கத்திற்கும் தகுதி இல்லாத அளவிற்கு கடுமையான மனநோய் இருக்கக்கூடாது
• மீண்டும் மீண்டும் ஏற்படும் பைத்தியக்காரத் தன்மை (Recurrent Insanity) இருக்கக்கூடாது

🔹 இந்நிபந்தனை மீறப்பட்டால், திருமணம் ரத்து செய்யக்கூடியது (Voidable Marriage) ஆகும்.

3. குறைந்தபட்ச வயது (Minimum Age):
• மணமகன் – 21 வயது
• மணமகள் – 18 வயது

🔹 வயது கணக்கீடு – திருமண நாளின் அடிப்படையில்
🔹 வயது குறைவு திருமணத்தை தானாகவே செல்லாதது ஆக்காது;
➡️ ஆனால் குழந்தை திருமணத் தடைச் சட்டம், 2006ன் கீழ் தண்டனைக்குரியது.

4. தடைசெய்யப்பட்ட உறவு & சபிண்ட உறவு (Prohibited & Sapinda Relationship):
திருமணம் செய்யும் இருவரும்:
• தடைசெய்யப்பட்ட உறவினர்கள் ஆக இருக்கக்கூடாது.
• Sapinda உறவினர்கள் ஆக இருக்கக்கூடாது.(Sapinda உறவு என்பது இந்து சட்டத்தில் இரத்தத் தொடர்பு (blood relationship) அடிப்படையில் உருவாகும் நெருங்கிய உறவினர்களை குறிக்கும்.
இந்து திருமணச் சட்டம், 1955 – பிரிவு 3(f) இல் Sapinda உறவு தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.)

🔹 ஆனால்,
➡️ இரு தரப்பினருக்கும் பொருந்தும் சட்டபூர்வமான மரபு / வழக்கம் (Custom) இருந்தால்,
➡️ அத்தகைய திருமணம் செல்லுபடியாகும்.

5. முறையான திருமணச் சடங்குகள் (Proper Ceremonies)
திருமணம்:
• இரு தரப்பினரின் மரபுப்படி
• வழக்கமான திருமணச் சடங்குகளுடன்
நடைபெற வேண்டும்.

🔹 சப்தபதி (7 அடிகள்) நடைபெறும் மரபில்,
➡️ ஏழாவது அடியை எடுத்து வைத்தவுடன் திருமணம் முழுமை பெறுகிறது.

சட்ட விளைவுகள் (Legal Consequences)

✅ சட்ட நிபந்தனைகள் பூர்த்தி → செல்லுபடியாகும் இந்து திருமணம்

❌ நிபந்தனைகள் மீறல் →
• Void / Voidable Marriage
• குற்றவியல் தண்டனை
• விவாகரத்து வழக்கு (பிரிவு 13)

“திருமணம் என்பது மரபு மட்டுமல்ல; அது சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் ஒரு உரிமை மற்றும் பொறுப்பு.”

கணவன்–மனைவி இருவரும் விவாகரத்து கோரக்கூடிய காரணங்கள்:

(இந்து திருமணச் சட்டம், 1955 – பிரிவுகள் 13, 13(2), 13-B, 14)

இந்து திருமணச் சட்டம், 1955, கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் சட்டபூர்வமான விவாகரத்து உரிமைகளை வழங்குகிறது. அவை பின்வருமாறு:

🔹 பொதுவான காரணங்கள் – பிரிவு 13(1)

1. தவறான பாலியல் உறவு – 13(1)(i)
திருமணத்திற்குப் பிறகு, தன் துணையைத் தவிர வேறு ஒருவருடன் தன்னிச்சையாக பாலியல் உறவு கொண்டால்.

2. கொடுமை – 13(1)(ia)
உடல் அல்லது மன ரீதியாக துன்புறுத்தல், அவமதிப்பு, மிரட்டல் போன்ற கொடுமையான நடத்தை.

3. பிரிந்து வாழ்தல் – 13(1)(ib)
நியாயமான காரணமின்றி, குறைந்தது 2 ஆண்டுகள் தொடர்ந்து துணையை கைவிட்டு தனியாக வாழ்தல்.

4. மத மாற்றம் – 13(1)(ii)
இந்து மதத்தை விட்டு வேறு மதத்திற்கு முறையாக மாறுதல்.

5. மனநலக் குறைபாடு – 13(1)(iii)
குணப்படுத்த முடியாத அல்லது சேர்ந்து வாழ முடியாத அளவுக்கு தீவிரமான மனநோய்.

6. தொழுநோய் – 13(1)(iv)
குணப்படுத்த முடியாத, தீவிர தொழுநோய் (சட்டத் திருத்தங்களுக்கு உட்பட்டது).

7. பால்வினை நோய் – 13(1)(v)
பரவும் தன்மை கொண்ட கடுமையான பால்வினை நோய்.

8. சந்நியாசம் / உலகத் துறவு – 13(1)(vi)
மத ஒழுங்கின்படி உலக வாழ்க்கையைத் துறந்து சந்நியாசம் எடுத்தல்.

9. காணாமற்போந்ததாக கருதல் – 13(1)(vii)
7 ஆண்டுகள் தொடர்ந்து உயிருடன் இருப்பது குறித்து எந்த தகவலும் இல்லாத நிலை.

🔹 மனைவிக்கான கூடுதல் உரிமைகள் – பிரிவு 13(2)

1. முன்னைய திருமணத்தை மறைத்தல் – 13(2)(i)
கணவனுக்கு ஏற்கனவே மனைவி உயிருடன் இருப்பதை மறைத்து திருமணம் செய்திருந்தால்.

2. பாலியல் குற்றங்களில் தண்டனை – 13(2)(ii)
கணவர் பாலியல் பலாத்காரம், சொடோமி போன்ற குற்றங்களில் தண்டிக்கப்பட்டிருந்தால்.

3. ஜீவனாம்ச உத்தரவு மீறல் – 13(2)(iii)
நீதிமன்ற ஜீவனாம்ச உத்தரவினையும் மீறி, மனைவியை புறக்கணித்து தனியாக வாழ்ந்தால்.

🔹 பரஸ்பர சம்மத விவாகரத்து – பிரிவு 13-B
• கணவன்–மனைவி இருவரும் மனங்கலந்த சம்மதத்துடன் சேர்ந்து வாழ முடியாது என்று முடிவு செய்தால்.
• குறைந்தது 1 வருடம் தனித்தனியாக வாழ்ந்திருக்க வேண்டும்.
• நீதிமன்றம் இரண்டு கட்டங்களில் விசாரணை செய்து விவாகரத்தை வழங்கும்.

🔹 ஒரு வருடத் தடை & விதிவிலக்கு – பிரிவு 14
• திருமணம் நடந்த நாளிலிருந்து 1 வருடம் நிறைவு பெறுமுன் பொதுவாக விவாகரத்து மனு தாக்கல் செய்ய முடியாது.
• ஆனால் அதிக கொடுமை அல்லது விசேஷ சூழ்நிலை இருந்தால், நீதிமன்ற அனுமதியுடன் முன்பே மனு தாக்கல் செய்யலாம்.

https://chat.whatsapp.com/FUYcvyZldwB8KSvuZ2kkQ9

🔹 நீதிமன்றம் கவனிக்கும் கூடுதல் காரணங்கள் / சட்ட அம்சங்கள்:

1. திருமணப் பொறுப்பு நிறைவேற்ற மறுத்தல் (Refusal to Cohabit)
ஒரு துணை தொடர்ந்து, காரணமின்றி,
• சேர்ந்து வாழ மறுத்தால்,
• கணவன்–மனைவி உறவை முழுமையாக நிராகரித்தால்,
இது மன கொடுமையாக (Mental Cruelty) கருதப்பட்டு விவாகரத்துக்கு காரணமாகலாம்.

2. தொடர்ச்சியான அவமதிப்பு & அவமரியாதை
• துணையின் குடும்பத்தினரை இழிவுபடுத்துதல்
• பொதுமக்கள் முன் அவமானப்படுத்துதல்
• சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புதல்
→ இவை அனைத்தும் Mental Cruelty எனக் கருதப்படுகிறது.

3. பொய் குற்றச்சாட்டுகள்
• பொய் பாலியல் குற்றங்கள்
• பொய் Dowry வழக்குகள்
• ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்
நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால்,
அது கொடுமை (Cruelty) ஆகும்.

4. திருமணத்தை உடைக்கக் கூடிய அடிமைத்தனங்கள்
• அதிக மது பழக்கம்
• போதைப் பொருள் அடிமைத்தனம்
• சூதாட்ட பழக்கம்
குடும்ப வாழ்வை பாதிக்கும் அளவிற்கு இருந்தால்,
விவாகரத்துக்கு காரணமாகலாம்.

5. பொருளாதார புறக்கணிப்பு
• வேலை செய்யக்கூடிய நிலையிலும் துணையை பராமரிக்க மறுத்தல்
• குடும்ப செலவுகளைத் திட்டமிட்டு தவிர்த்தல்
→ இது கொடுமை + Desertion ஆக கருதப்படும்.

6. பாலியல் மறுப்பு / அசாதாரண பாலியல் வற்புறுத்தல்
• தொடர்ச்சியான பாலியல் மறுப்பு
• விருப்பமின்றி அசாதாரண செயல்களை வற்புறுத்துதல்
இவை நீதிமன்றங்களில் மன & உடல் கொடுமை என பார்க்கப்படுகிறது.

7. திருமணத்திற்கு முன் மறைக்கப்பட்ட முக்கிய உண்மைகள்

உதாரணமாக:
• முன்பிருந்த திருமணம்
• குழந்தை இருப்பது
• கடுமையான நோய்கள்
• குற்றப் பின்னணி
இவை மறைக்கப்பட்டிருந்தால்,
திருமணம் மோசடியாக நடைபெற்றது எனக் கருதலாம்.

8. சீரழிந்த திருமண உறவு (Irretrievable Breakdown of Marriage)
• நீண்ட காலம் வழக்குகள்
• மீண்டும் சேர வாய்ப்பே இல்லாத நிலை

⚠️ இது தற்போது நேரடியாக சட்டப்பிரிவாக இல்லாவிட்டாலும், உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் இதை அடிப்படையாக கொண்டு விவாகரத்து வழங்கியுள்ளது.

9. குழந்தையின் நலன் (Welfare of Child)
• குழந்தைக்கு பாதுகாப்பற்ற சூழல்
• பெற்றோரின் தொடர்ச்சியான சண்டைகள்
→ விவாகரத்து வழங்கலாமா என்பதில் நீதிமன்றம் முக்கியமாகக் கணக்கும்.

10. சமரசம் தோல்வியடைந்தால்..
• Family Court–ல் கட்டாய சமரச முயற்சி தோல்வியடைந்தால்
→ வழக்கு விசாரணை தொடரப்படும்.

⚖️ முக்கிய சட்டக் குறிப்பு:
“விவாகரத்து என்பது தண்டனை அல்ல;
தாங்க முடியாத உறவிலிருந்து வழங்கப்படும் சட்டபூர்வமான விடுதலை.”

📌 ஒவ்வொரு வழக்கும் அதன் உண்மைகள், ஆதாரங்கள், சாட்சிகள் மீது தான் தீர்மானிக்கப்படுகிறது.

📌 ஒரு காரணம் தனியாக போதாமலிருந்தாலும், பல காரணங்கள் சேர்ந்து விவாகரத்துக்கு அடிப்படையாகலாம்.

https://www.facebook.com/share/17hRTvs6t9/?mibextid=wwXIfr

⚖️ விவாகரத்து – முக்கிய வழக்குத் தீர்ப்புகள் (Case Laws)

🔹 1. Mental Cruelty (மன கொடுமை)

📌 V. Bhagat v. D. Bhagat (1994) 1 SCC 337
👉 தொடர்ந்து அவமானம், பொய் குற்றச்சாட்டுகள், மரியாதை இழப்பு
= Mental Cruelty
👉 உடல் வன்முறை இருக்க வேண்டிய அவசியமில்லை.

📌 Samar Ghosh v. Jaya Ghosh (2007) 4 SCC 511
👉 மன கொடுமை என்னென்ன என்பதை உச்சநீதிமன்றம் விரிவாக பட்டியலிட்டது:
• தொடர்ச்சியான அவமதிப்பு
• பொது இடங்களில் அவமானப்படுத்தல்
• அன்பு, உறவு முழுமையாக இல்லாமை
👉 விவாகரத்துக்கு போதுமான காரணம்

🔹 2. False Allegations / False Criminal Cases

📌 K. Srinivas Rao v. D.A. Deepa (2013) 5 SCC 226
👉 கணவன் மீது
• பொய் Dowry வழக்கு
• ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்
= கடுமையான மன கொடுமை
👉 விவாகரத்து வழங்கப்பட்டது.

🔹 3. Desertion (கைவிடுதல்)

📌 Bipinchandra Jaisinghbhai Shah v. Prabhavati (AIR 1957 SC 176)
👉 Desertion நிரூபிக்க:
1. உடல்பூர்வமாக கைவிடுதல்
2. நிரந்தரமாக விலகும் நோக்கம்
👉 2 ஆண்டுகள் தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.

🔹 4. Sexual Refusal / Denial of Conjugal Rights

📌 Narendra v. K. Meena (2016) 9 SCC 455
👉 காரணமின்றி தொடர்ச்சியான பாலியல் மறுப்பு
= Mental Cruelty
👉 கணவனுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது.

🔹 5. Irretrievable Breakdown of Marriage

📌 Naveen Kohli v. Neelu Kohli (2006) 4 SCC 558
👉 நீண்ட கால வழக்குகள்
👉 மீண்டும் சேர வாய்ப்பே இல்லை
= திருமணம் முற்றிலும் சிதைந்தது
👉 விவாகரத்து வழங்கப்பட்டது.

📌 Satish Sitole v. Ganga (2008) 7 SCC 734
👉 10 ஆண்டுகளுக்கும் மேலான பிரிவு
👉 திருமணம் பெயரளவில் மட்டுமே
= Divorce justified.

🔹 6. Mutual Consent Divorce – Cooling Period Waiver

📌 Amardeep Singh v. Harveen Kaur (2017) 8 SCC 746
👉 6 மாத Cooling Period
= கட்டாயமல்ல
👉 வழக்கு சூழ்நிலை பார்த்து நீதிமன்றம் விலக்கு அளிக்கலாம்.

🔹 7. Wife’s Special Rights – Section 13(2)

📌 Raj Talreja v. Kavita Talreja (2017) 14 SCC 194
👉 பொய் குற்றச்சாட்டுகள்
👉 கணவன் மீது களங்கம்
= Mental Cruelty

🔹 8. One Year Bar – Section 14 (Exception)

📌 Sureshta Devi v. Om Prakash (1991) 2 SCC 25
👉 கடுமையான கொடுமை இருந்தால்
👉 1 வருடத்திற்கு முன்பும் விவாகரத்து மனு அனுமதி.

இந்து திருமணச் சட்டம், 1955,
கணவன்–மனைவி இருவருக்கும் சட்டபூர்வமான விடுதலைக்கு வழி செய்கிறது.
உரிமையை அறிந்தால் மட்டுமே, துன்பமான உறவிலிருந்து சட்டப்படி விடுபட முடியும்.

Dr.S.Pandikumar.,M.A.,B.Ed.,M.Phil.,Ph.D.,LL.B.
Dr S P’s Legal Awareness World - Aram L.A.W Office

03/01/2026

Address

Dr. B. R. Ambedkar Law Associates (Advocates & Legal Consultants) 29, Municipal Shopping Complex, Opposite Combined Court Building
Bodinayakkanur
625513

Telephone

+919994572933

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr S P’s Legal Awareness World - Dr B R Ambedkar Law Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share