13/12/2025
ஏற்ப்புடமை
தேசவழமையானது யாழ்ப்பாண மாகாண மலபார் நிரந்தரவாசிகளுக்கு ஏற்படையதான சட்டம் என கூறமுடியும். யாழ்ப்பாண மாகாணம் என்பது தற்போதுள்ள வடமாகணம் ஆகும்.
தேசவழமையானது இலங்கைக்கு வெளியே செல்லுபடியாகுமா? என்ற வினாவிற்கு "ஆம்" என கூறலாம்.
உதாரணமாக, இலங்கையில் திருமணமானது கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்ற தேவைப்பாடு கிடையாது. எனவே வழக்காற்று திருமணங்களை இலங்கைக்கு வெளியே எண்பிக்க தேவைப்படுமிடத்து, தேசவழமையினால் ஆளப்படும் ஆட்களுக்கு அவ்வாறு செய்யமுடியும். ஏனேனில் தேசழமையானது ஆள்சார் சட்டம். இடம்சார் சட்டம் இரு பண்புகளைக் கொண்டது. ஆள்சார் சட்டம் என்பது அவ்வாட்களைப் பின்தொடர்ந்து செல்லக்கூடியதாகும் தேசவழமை ஒழுங்கு விதி 6 யாழ்ப்பாண மாகண மலபார் நிரந்தரவாசிகளின் வழக்காறுகள் முழுமையான வழுக்கொண்டனவாக கருதப்பட வேண்டும் எனவும்,
விதி 7 எல்லா பிணக்குகளும் இவ் கோவைக்கிணங்கவே தீர்மாணிக்க பட வேண்டும் என ஏற்ப்பாடு செய்கின்றது.
யாழ்ப்பாணத் திருமண உரிமைகள் மற்றும் வழியுரிமைகள் கட்டளை சட்டம் 1947 ஆம் ஆண்டின் 57ஆம் இலக்கக் கட்டளைச் சட்டத்தினால் திருத்தப்பட்டுள்ளது.
இக் சட்டத்தின் 3 டாம் பிரிவானது திருமணத்தின் மூலமாக பெண்களுக்கு தேசவழமையானது ஏற்புடமையவதையும் ஏற்புடமையாகாததையும் ஏற்பாடு. செய்கின்றது. இதனடிப்படையில் தேசவழமையால் ஆளப்படும் பெண் ஒருவர் தேசவழமையால் ஆளப்படாத ஆண் ஒருவரை திருமணம் செய்வாராயின் திருமணம் வலிதான காலப்பகுதியில் அப் பெண் தேசவழமையினால் ஆளப்படமாட்டார்.மாறாக தேசவழமையால் ஆளப்படும் ஆண் ஒருவர் தேசவழமையால் ஆளப்படாத பெண் ஒருவரை திருமணம் செய்வாராயின் திருமணம் வலிதான காலப்பகுதியில் அப் பெண் தேசவழமையினால் ஆளப்படுவார்.
இடம்சார் சட்டம் என்பது எவ்விடயபரப்பில் இச்சட்டம் ஏற்புடையதாகும் என்பதில் உள்ளது இது தேசவழமையில் அமைந்துள்ள சகல காணிகளுக்கும் ஏற்ப்புடையதாகும். அதாவது யார் காணியின் உரிமையாளர் என்பது பெருத்தமற்றதாகும் உதாரணமாக கண்டிய சிங்களவர் ஒருவர் வடமாகணத்தில் காணியினை வாங்குமிடத்து அக் காணி தொடர்பில் தேசவழமை ஏற்படமையாகும் வழியுரிமை தொடர்பில் கண்டிய சட்டமே ஏற்ப்படையதாகும்.
⚠️ முக்கிய குறிப்பு: இந்தப் பதிவு சட்ட விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. இது உங்களின் தனிப்பட்ட சட்ட ஆலோசனையாக அமையாது.
#சட்டவிழிப்புணர்வு
#ஏற்ப்புடமை