02/09/2022
தேடல் 97 (02.09.2022) வெள்ளிக்கிழமை
(ஸதகத்துல் ஜாரியா ) குடி நீர் இணைப்பு பெற்றுத்தருமாறு கோரிக்கை
கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலக எல்லைக்குள் மஜீட் புரம் கிராம சேவர் பிரிவில் 03 பெண் பிள்ளைகளின் தாய் குடிநீர் இணைப்புப் பெற்றுக் கொள்ள விண்ணப்பித்துள்ளார்.
அதற்கிணங்க இறக்காமம் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு ரூபா. 16624/- உம் இறக்காமம் பிரதேச சபைக்கு பாதையை வெட்ட குறித்த ஒரு தொகைப் பணமும் செலுத்த வேண்டியுள்ளது.
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்குள் இப் பணத்தை மொத்தமாக செலுத்த முடியாதுள்ளதாகவும் எதிர்வரும் 23/10/2022 ம் திகதிக்குள் பணம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அத் தாய் Asraf TV க்கு தெரிவித்தார்.
"உங்களில் யார் நற்செயல்களால் சிறந்தவர் என சோதிப்பதற்காகவே நாம் வாழ்வையும் மரணத்தையும் ஏற்படுத்தியுள்ளோம்" என அல்லாஹ் சூறா முல்க் 2 வது வசனத்தில் குறிப்பிடுகின்றான்.
நிலையான தர்மம் ஸதக்கத்துல் ஜாரியா நீர் இணைப்பு பெற்றுக் கொடுத்தல் என்பதால் யாராவது ஒருவர் முன்வந்து எங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தினால் ஏனைய வேலைகளை களத்தில் முன் நின்று செய்து கொடுத்து நீர் இணைப்பைப் பெற்றுக் கொடுக்க நாம் தயாராகவுள்ளோம்.
எனவே இந் நீர் இணைப்பை நீங்கள் அல்லது உங்களின் மரணித்த தாய் தந்தை சார்பாக பெற்றுக் கொடுத்து அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக் கொள்ள நீங்கள் அழைக்க வேண்டியது
0756260552 வட்அப்
0773134563 call
உங்களால் முடியாவிட்டால் பரவாயில்லை அதிகம் பகிருங்கள் யாராவது ஒருவர் முன்வரலாம் உங்களின் பகிர்வால் ஒருவர் முன் வந்தால் உங்களுக்கும் அதே நன்மை கிடைக்கும்
அல்ஹம்துலில்லாஹ்
Note
Woman who does not want to express himself