Law is supreme

Law is supreme இந்த குழு பாமரனும் சட்டம் அறிந்து கெ?

https://youtu.be/c0Vm6hUMmsM
19/07/2022

https://youtu.be/c0Vm6hUMmsM

சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லி.....

17/07/2022

உயர் நீதிமன்றம் தவிர, இதர கீழமை நீதிமன்றங்களில் 1976-ம் ஆண்டு முதல் அலுவல்மொழி சட்டத்தில் (Offici​al Langu​ages Act 1956)​ .- திருத்தம் 4 ஏ மற்றும் 4 பி-ன் கீழ் சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் உள்ள எல்லா நீதிமன்றங்களிலும் தமிழ் வழக்காடு மொழியாக உத்தரவாதம் பெற்றும்கூட, அந்தச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தபோது சிக்கல் ஏற்பட்டது.

ஒரு முன்சீப் நீதிமன்றத் தீர்ப்பு தமிழில் எழுதப்பட்டபோது, அது சட்டப்படி தீர்ப்பே அல்ல என்று அந்த வழக்கில் (1978(2)MLJ 442 Ram​ayee Vs Muniy​andi) தீர்ப்பு வந்த பிறகே ​1982-p ​(Go Ms​ 9,​ 19th Jan 1982)​ சட்டம் அமலாகி கீழமை நீதிமன்றங்களில் தமிழ்மொழி வழக்காடு மொழியாக அந்தஸ்து பெற்றது.

இருப்பினும், தமிழ் தெரியாத இதர மொழி பேசும் நீதிபதிகளுக்கு ஒரு சிறப்பு அனுமதி மூலம் ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுத ஓர் அனுமதி இருந்தது.

அப்போது தமிழில் அவர்கள் பரிபாலனம் செய்யும் சட்டங்கள் இயற்றப்படாததாலும், அவர்களுக்குத் தமிழ் தெரியாத காரணத்தாலும் இருந்த இச்சிறப்பு அனுமதி, பின்னாளில், கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் சொந்த விருப்பத்தில் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ தீர்ப்பு எழுதலாம் என்று அப்போது தலைமை நீதிபதி யான கே.ஏ. சாமியால் சுற்றறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது. அலுவலக மொழிச் சட்டத் திருத்தத் துக்கு முரணான இந்தச் சுற்றறிக்கை இப்போதும் நிலுவையில் உள்ளது.

இந்த சுற்றறிக்கை சட்டத்துக்குப் புறம்பானது. இதை இன்றுவரை யாரும் எதிர்த்து வழக்கு தொடுக்கவில்லை.

சட்டம் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் இது தொடர்பாக மேல் நடவடிக்கைகளை எடுத்து, தீர்ப்புகள் தமிழில் வர முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ப. தனேஷ் பாலமுருகன்
அட்வகேட்
திருவைகுண்டம்
தூத்துக்குடி மாவட்டம்
செல் - 8870009240

16/07/2022

பெண்கள் தாலியை கழற்றினால் அது கணவருக்கு செய்யும் கொடுமையாகும். விவாகரத்து வழங்கலாம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு. தாலி பெண்களுக்கு வேலியா? இது ஆணாதிக்க சிந்தனை கொண்ட தீர்ப்பு.

நீதிபதிகள் விஎம் வேலுமணி, எஸ்.சவுந்தர் அடங்கிய அமர்வின் முன் விவாகரத்து வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. ஈரோடு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக உள்ள சி.சிவகுமார் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரியிருந்தார். ஆனால், அவரது விவாகரத்து மனுவை கடந்த 2016-ஆம் ஆண்டு குடும்பநல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை ரத்து செய்யக் கோரி சிவகுமார் உயர் நீதிமன்றத்தை அனுகினார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிவகுமாரின் மனைவியிடம் நடந்த விசாரணையின்போது, அவர் தாலியை கழட்டிவைத்தது உண்மைதான் என ஒப்புக் கொண்டார். தாலி செயினை மட்டுமே லாக்கரில் வைத்துள்ளதாகவும், தாலி தன்னிடமே உள்ளதாகவும் கூறினார். இருப்பினும், தாலியை கழட்டிவைக்கும் செயலே கவனிக்கத்தக்கது என்று நீதிமன்றம் கூறியது.

முன்னதாக, அந்தப் பெண்ணின் வழக்கறிஞர் "இந்து திருமண சட்டம் 7ஐ சுட்டிக்காட்டி தாலி கட்டுவது அவசியமில்லை. ஆகையால் ஒருவேளை தனது கட்சிக்காரர் அவ்வாறு செய்திருந்தாலும் கூட அது திருமண வாழ்வில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது" என்று வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள், " நம் நாட்டில் தாலி கட்டுவது திருமண வைபவத்தில் ஒரு முக்கிய சடங்காக இருக்கிறதே" என்று சுட்டிக் காட்டினர்.

மேலும் நீதிபதிகள் கூறுகையில், "இந்த வழக்கில் உள்ள ஆவணங்களைப் பார்க்கும்போது சம்பந்தப்பட்ட பெண் தாலியை கழட்டி வைத்ததை தெளிவாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்துப் பெண் எவருமே கணவன் உயிருடன் இருக்கும்போது தாலியை கழட்டி வைக்கமாட்டார். அது ஒரு புனித அடையாளமாக இருக்கிறது. திருமண வாழ்க்கை தொடர்வதையே அது குறிக்கிறது. கணவனின் மரணத்திற்குப் பின்னரே இந்துப் பெண்கள் தாலியை அகற்றுகின்றனர். அதனால் வழக்கை தாக்கல் செய்தவர் கூறியதுபோல் இது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும்.

தாலியை அகற்றியது மட்டுமே திருமண பந்தத்தை முறித்துவிடும் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், தாலியை அகற்றியது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பது நிரூபணமாகிறது. மேலும், இத்தம்பதி கடந்த 2011 ஆம் ஆண்டு முதலே பிரிந்துதான் வாழ்கின்றனர். அதனால் அவர்கள் எவ்வித சமாதானத்துக்கும் தயாராக இல்லை என்பது தெரிகிறது. இதனால் கீழமை நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்து இத்தம்பதிக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்குகிறது" என்றனர்.

C. M. A. No. 3249/2017

Dated - 5.7.2022

C. Sivakumar Vs A. Srividhya

இந்த தீர்ப்பு ஆணாதிக்க சிந்தனையுடன் சொல்லப்பட்ட தீர்ப்பாகவே கருதுகிறேன்.

கணவன் இறந்தவுடன் மனைவியைக் கட்டாயப்படுத்தி, அவன் பிணம் எரியும் நெருப்பில் அவளைத் தள்ளிக் கொல்லும் உடன்கட்டை ஏறுதல், பருவமடையாத பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைப்பது, அக்குழந்தையின் கணவன் இறந்துவிட்டால், ஆயுள்வரை அப்பெண் விதவையாக இருந்து அழிவது, கோயில்களில் நிலக்கிழார்கள், மைனர்கள் போன்றவர்களின் வரம்பற்ற பாலுறவுக்காக தேவதாசிகளாகப் பெண்களுக்குப் பொட்டுக்கட்டி விடுவது போன்ற எத்தனையோ பெண்ணடிமைத்தன நிகழ்வுகள் புனிதச் சடங்கு என்ற பெயரில் இந்து மதத்தில் இருந்தன. இந்து மதத்தைச் சேர்ந்த இராஜாராம் மோகன்ராய், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்ற எத்தனையோ பேர் முயன்று போராடி, இவற்றையெல்லாம் தடை செய்யும் சட்டங்கள் வரச் செய்தனர்.

தாலி என்பது கடந்த காலத்தில், ஏன் சங்க காலத்தில்கூடத் தமிழர்கள் திருமணத்தில் இடம் பெற்றுள்ளது. அப்பொழுது, இந்து மதம் கிடையாது. ஆனால், இன்று பெண்ணுக்குத் தாலி போடுவது ஆணாதிக்கத்தின் அடையாளம் தவிர, வேறல்ல. பெண்களுக்கு கடிவாளம் ஆண்கள் அணிவிக்கும் தாலி என்றால் ஆண்களுக்கான கடிவாளம் என்ன?

அட்வகேட் அர்ச்சனா,
மதுரை.
செல் - 9597813018

16/07/2022

எனது கட்சிக்காரர் ஒருவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி ஈரோடு காவல் நிலைய ஆய்வாளர் சம்மன் அனுப்புகிறார். இது சட்டப்படி சரியா? சட்டம் என்ன சொல்கிறது?

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் இயல் - 7 Processes to compel the production if things பற்றி கூறுகிறது. அதாவது பொருட்களை ஒப்படைக்க கோரி கட்டாயப்படுத்தும் வகையில் நீதிமுறை கட்டளைகளை போலீசார் பிறப்பிக்கலாம் என்று கூறுகிறது.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 91 ஆனது நீதிமன்றம் அல்லது காவல்துறை அதிகாரி எவரும் ஒரு வழக்கின் புலன் விசாரணையின் போது ஒரு ஆவணம் அல்லது ஒரு பொருளை ஒப்படைக்க கோரி எவருக்கும் எழுத்து மூலமாக நேரில் ஆஜராகுமாறு கோரி அழைப்பாணை அனுப்பலாம் என்கிறது. அதேசமயம் 91(2) ஆனது அழைப்பாணை அனுப்பப்பட்ட நபர்தான் நேரில் ஆஜராகி ஆவணத்தை அல்லது பொருளை ஒப்படைக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவர் சார்பாக யார் வேண்டுமானாலும் ஆஜராகி சம்மந்தப்பட்ட ஆவணத்தை அல்லது பொருளை ஒப்படைக்கலாம்.
எனவே பிரிவு 91 ன்படி காவல்துறையினர் ஒரு ஆவணத்தை அல்லது ஒரு பொருளை ஒப்படைக்க கோரி மட்டுமே அழைப்பாணை அனுப்ப அதிகாரம் உண்டு. விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி இந்தப் பிரிவின் கீழ் அழைப்பாணை அனுப்ப காவல்துறையினருக்கு அதிகாரமில்லை. அதேவேளை சம்மந்தப்பட்ட நபர் நேரில் ஆஜராக வேண்டும் என்பதும் கட்டாயமில்லை. அவர் சார்பில் யார் வேண்டுமானாலும் ஆஜராகி ஆவணத்தை கொடுத்து விடலாம்.

அடுத்ததாக

சிஆர்பிசி பிரிவு 160 ன் கீழ் விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி அழைப்பாணை அனுப்ப காவல்துறையினருக்கு அதிகாரம் உள்ளதா? என்று பார்க்கையில் இந்த பிரிவின் கீழ் ஒருவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி அழைப்பாணை அனுப்பும் அதிகாரம் FIR பதிவு செய்த பிறகே காவல்துறையினருக்கு ஏற்படுகிறது.

அடுத்ததாக காவல்துறையினர் தனது அதிகார எல்லைக்குள் உள்ள நபரையோ அல்லது பக்கத்து காவல்நிலைய அதிகார எல்லைக்குள் உள்ள நபரையோ மட்டுமே இந்த பிரிவின் கீழ் ஆஜராகுமாறு கோரி அழைப்பாணை அனுப்பலாம். பக்கத்து காவல் நிலைய எல்கைகள் என்பது 10 காவல் நிலைய எல்கைகள் ஆகும்.

உதாரணமாக தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் பக்கத்தில் உள்ள திருச்செந்தூர் ஊரில் வசிக்கும் நபரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி இந்த பிரிவின் கீழ் அழைப்பாணை அனுப்பலாம். ஆனால் இதே திருவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர், மதுரையில் வசிக்கும் ஒரு நபரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி இந்த பிரிவின் கீழ் அழைப்பாணை அனுப்பி கூப்பிட முடியாது.

சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் JAMSHED ADIL KHAN & ANR. v. UNION TERRITORY OF JAMMU AND KASHMIR AND ANR என்ற வழக்கில் இதுகுறித்து தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.

சாமானியனும் அடிப்படை சட்டம் தெரிந்து கொள்ள வேண்டும். சட்டம் குறித்த விழிப்புணர்வு வேண்டும்.

ப. தனேஷ் பாலமுருகன்
அட்வகேட்
திருவைகுண்டம்
தூத்துக்குடி மாவட்டம்
செல் - 8870009240

https://youtu.be/PgN7WJqF-So
15/07/2022

https://youtu.be/PgN7WJqF-So

சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லி.....

https://youtu.be/KuYkfbu0ymQ
13/07/2022

https://youtu.be/KuYkfbu0ymQ

சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லி.....

12/07/2022

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்றும் கீழமை நீதிமன்றத்திலேயே மேற்படி மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறி கடந்த 2021 ஆம் ஆண்டு நீதியரசர் திரு. ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு வழங்கினார். அதன்பிறகு எனது உறவினருக்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தபோது நாங்கள் நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்களின் தீர்ப்பை ஏற்க இயலாது. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் முதலில் கிரிமினலா? அல்லது சிவிலா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று வாதிட்டோம். எங்களது வாதத்தை ஏற்றுக் கொண்ட தனி நீதிபதி எங்கள் வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்தார்.

மேற்படி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இனி குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை ரத்து செய்ய சிஆர்பிசி 482 ன் கீழ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஏற்கனவே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் வழங்கிய தீர்ப்பு இந்த தீர்ப்பின் மூலம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

எனவே இனி குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை நேரடியாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்.

மேற்படி எனது வழக்கில் திறம்பட வாதாடிய அன்பு அண்ணன் வழக்கறிஞர் திரு. இராபர்ட் சந்திரகுமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்.

ப. தனேஷ் பாலமுருகன்
அட்வகேட்
திருவைகுண்டம்
தூத்துக்குடி மாவட்டம்
செல் - 8870009240

https://youtu.be/VUyPWpp5PXs
12/07/2022

https://youtu.be/VUyPWpp5PXs

சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லி.....

11/07/2022

ஒரு நிலம் "நிலவியல் பாதை" என வகைப்படுத்தப்பட்டவுடன் அது அரசு நிலமாகிவிடும். அந்த நிலத்தை அரசு நிலமாகக் கருதி, பொதுமக்கள் பயன்படுத்தலாம்.

25.01.2018 தேதியிட்ட W.P.எண்.27153/2016 ஜே.ஜெகதீஷ் எதிர் தாசில்தார், மொடக்குறிச்சி தாலுக்கா, ஈரோடு மாவட்டம் மற்றும் பிறர் என்ற வழக்கில், சென்னை நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் "பாதை" என வகைப்படுத்தப்பட்ட எந்த நிலமும் அரசுக்கு சொந்தமான நிலம் என்று தீர்ப்பளித்துள்ளது. பட்டா நிலத்தில் செல்லும் பாதையை அரசு நிலமாக கருதப்பட வேண்டும்.

இந்த தீர்ப்பின் பாரா 13 ல், பட்டா நிலத்தில் குறிக்கப்பட்ட பாதை அரசு நிலம் என்றும், அதில் அத்துமீறல் அல்லது குறுக்கீடு செய்து, அதனை அடைத்தாலோ அல்லது ஆக்கிரமிப்பு செய்தாலோ அதனை அதிகாரிகள் அப்புறப்படுத்த உத்தரவிடலாம். எனவே, மேற்கண்ட வருவாய் நிலை ஆணையை கருத்தில் கொண்டு, பட்டா நிலத்தில் பாதை சென்றாலும் அதை அரசு நிலமாக கருதி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு நிலம் "நிலவியல் பாதை" என வகைப்படுத்தப்பட்டு விட்டால் எவரும் அந்த சொத்தின் மீது உரிமையோ, அனுபவமோ, பாத்தியதையோ கோர முடியாது.

இதே கருத்தை சென்னை உயர்நீதிமன்றம் K.M. Murugesan … vs The District Collector W.P. No.18876 /2020 என்ற வழக்கில் தீர்ப்பாக 22.04.2021 ல் தீர்ப்பாக வழங்கியுள்ளது.

ப. தனேஷ் பாலமுருகன்
அட்வகேட்
திருவைகுண்டம்
தூத்துக்குடி மாவட்டம்
செல் - 8870009240

https://youtu.be/wrRJpvNRzfQ
11/07/2022

https://youtu.be/wrRJpvNRzfQ

சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லி.....

https://youtu.be/u9KEohNZmaI
09/07/2022

https://youtu.be/u9KEohNZmaI

ஒருவர் மீது இரண்டு வகைகளில் வழக்கு தாக்கல் செய்யப்படலாம். There are two kinds of charges which can be filed against a person. Civil & CriminalSupreme Court o...

08/07/2022

ஆதின மடங்களுக்கு ஆர்டிஐ சட்டம் பொருந்தாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

தருமபுரம் ஆதினமான சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார், தமிழகத்தில் உள்ள பழணையான ஆதின மடங்களில் தங்கள் மடமும் ஒன்று. இந்த மடமானது தமிழக அரசிடம் இருந்து எந்த உதவியோ, நிதியோ பெறமால், சொந்த நிதியில் மட்டுமே இயங்கி வருகிறது. இந்நிலையில், ஆதின மடங்கள் தொடர்பாக ஆர்டிஐ மூலம் கேள்வி கேட்டு தொந்தரவு செய்கின்றனர் என தருமபுரம் ஆதினம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாணையின் முடிவில், ஆதின மடங்கள் பொது நிறுவனங்கள் அல்ல என்றும், அதன் விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்(ஆர்டிஐ) கேட்க முடியாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Address

Tuticorin
628601

Telephone

+918870009240

Website

Alerts

Be the first to know and let us send you an email when Law is supreme posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share