24/05/2026
வீரவணக்கம்
---------------------------------
தூத்துக்குடி மாவட்டம்
பழைய காயல் பகுதி
மார்க்சிஸ்ட் கட்சியின்,
சிஐடியு முதுபெரும் தோழர் மு.செல்லத்துரை அவர்களுக்கு
சிஐடியு தூத்துக்குடி மாவட்டக்கு சார்பில் வீரவணக்கம்
--------------------------------------------
தூத்துக்குடி மாவட்டம்
பழையகாயல் மஞ்சள்நீர்காயலில்
முத்து, சிவனந்தம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக 1941 ஆண்டு பிறந்த தோழர் செல்லத்துரை
சுதந்திரப் போராட்ட தியாகியும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர் டி ஆர். சுப்பிரமணியம்
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர்கள் தியாகி பொண்ணு அண்ணாச்சி
தோழர் சங்கரநாராயணன்
கோடாங்கி என்ற சண்முகவேல் உள்ளிட்ட தலைவர்களால் ஈர்கப்பட்டு
ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில்1962 முதல் கிளைச் செயலாளராகவும், 1964 ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் கிளைச் செயலாளராகவும் தூத்துக்குடி புறநகர குழு உறுப்பினராகவும் செயல்பட்டவர் சிஐடியு உப்பு தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகியாகவும் செயல்பட்டவர்
கூலி உயர்வு ,போனஸ் உள்ளிட்ட தொழிலாளருடைய கோரிக்கைகளுக்காக பல்வேறு அடக்குமுறைகளை எதிர் கொண்டு போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியுள்ளார் இயக்களில்
கலந்து கொண்டுள்ளார் பழைய காயல் பகுதியில் விவசாயிகள் கோரிக்கைகளுக்காக விவசாயத்திற்கு தண்ணீர். குளங்களை சீரமைத்தல். விவசாய பொருள்களுக்கு நியாயமான விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு இயக்கங்களை நடத்தியவர்
1991 ல் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பழையகாயல் ஊராட்சி மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக செயல்பட்டவர், திருவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர், சாலை வசதி, தெரு விளக்கு வசதி, போக்குவரத்து, சுகாதாரம், உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்காக பல்வேறு இயக்கங்களை நடத்தியவரும் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதில்
தோழர் செல்லத்துரை அவர்களின் பங்கு மகத்தானது
தோழர் செல்லத்துரை மனைவி மூக்கம்மாள் இரண்டு மகன்கள் ஒரு மகள் பேரப்பிள்ளைகள் உள்ளது
பழைய காயில் மக்கள் மத்தியில் அனைத்து தரப்பு மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்ற கம்யூனிஸ்ட் இயக்கத்தின். உப்பு தொழிலாளர் சங்கத்தின். மூத்த தோழர் மு.செல்லத்துரை
மறைவிற்கு செங்கொடி தாழ்த்தி அஞ்சலியும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்
ஆர்.ரசல்
சிஐடியு மாநில துணைத்தலைவர்
இரா.பேச்சிமுத்து
மாவட்டத்தலைவர்